கொங்கு பவளங்கட்டி வெள்ளாள கவுண்டர்கள் வரலாறு நோக்கி பயணம் :
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கிழக்கு வாயிலின் முன்பு இருபுறமும் தெப்பக்குளங்கள் உள்ளன.இதில் வலதுபுறம் உள்ள குளம் பெரியது..சுவர் மீது சுற்றிலும் அழகிய வேலைப்பாடு அமைந்த நந்திகள் உள்ளன..வேறு சிற்பங்கள் ஏதும் இல்லை...குளத்தின் நடுவே சிறு மண்டபம்...இடது புறம் உள்ள தெப்பக் குளம் சிறியது எனினும் அனைவரும் காண வேண்டியது...இதன் காரணம் குளம் முழுவதும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ளதேயாகும்...கடவுளர்/அவர்தம் திருவிளையாடல்கள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன..
இன்னொரு முக்கிய விஷயம்..இந்த குளம் கெட்டி (கட்டி) அரசர்களால் கட்டப்பட்டது என்பதற்கு அவர்களது சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது..அவர்களது சின்னம் வண்ணத்தடுக்கு,வாடாத மாலை,புலி,வில்,கயல்(மீன்) ஆகியவையாகும்..இந்த அரசர்களின் சின்னம் இவைதான் என்கிற செய்தி தாரமங்கலம் இளமீஸ்வரர் கோவில் கல்வெட்டுகளிலும் (அச்சுதராயர் காலம் கிபி.1539,1541 கால கல்வெட்டு,சதாசிவராயர் கி.பி.1545), *இலவம்பட்டி கன்னிமார் பாழிப்பாறை* கல்வெட்டிலும் (சீயாலகட்டி முதலி காலம் கி.பி.1655) குறிப்பிடப்படுகிறது.தாரமங்கலம் கோவிலுக்குள்ளும் இந்த சின்னங்களைக் காணலாம்.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கிழக்கு வாயிலின் முன்பு இருபுறமும் தெப்பக்குளங்கள் உள்ளன.இதில் வலதுபுறம் உள்ள குளம் பெரியது..சுவர் மீது சுற்றிலும் அழகிய வேலைப்பாடு அமைந்த நந்திகள் உள்ளன..வேறு சிற்பங்கள் ஏதும் இல்லை...குளத்தின் நடுவே சிறு மண்டபம்...இடது புறம் உள்ள தெப்பக் குளம் சிறியது எனினும் அனைவரும் காண வேண்டியது...இதன் காரணம் குளம் முழுவதும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ளதேயாகும்...கடவுளர்/அவர்தம் திருவிளையாடல்கள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன..
இன்னொரு முக்கிய விஷயம்..இந்த குளம் கெட்டி (கட்டி) அரசர்களால் கட்டப்பட்டது என்பதற்கு அவர்களது சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது..அவர்களது சின்னம் வண்ணத்தடுக்கு,வாடாத மாலை,புலி,வில்,கயல்(மீன்) ஆகியவையாகும்..இந்த அரசர்களின் சின்னம் இவைதான் என்கிற செய்தி தாரமங்கலம் இளமீஸ்வரர் கோவில் கல்வெட்டுகளிலும் (அச்சுதராயர் காலம் கிபி.1539,1541 கால கல்வெட்டு,சதாசிவராயர் கி.பி.1545), *இலவம்பட்டி கன்னிமார் பாழிப்பாறை* கல்வெட்டிலும் (சீயாலகட்டி முதலி காலம் கி.பி.1655) குறிப்பிடப்படுகிறது.தாரமங்கலம் கோவிலுக்குள்ளும் இந்த சின்னங்களைக் காணலாம்.
இலவம்பட்டி கல்வெட்டில் *வெள்ளாளர் உத்தமர் குலத்தார்* அவ்வூரை தாரமங்கலம் கைலாசநாதருக்கு எழுதி வைத்த கல்வெட்டு உள்ளது.
பவளகட்டி மற்றும் பால வெள்ளாளரில் உத்தமர் குலத்தார் உள்ளனர்.
மேலும், தாரமங்கலம் கோயிலுக்கு அவிநாசியப்பர் கோயில் உள்ளது. இது இக்கோயில் கட்டிய காலத்திலோ முன்போ இவ்வூருடன் பால வெள்ளாளர் தொடர்பு இருந்திருக்கலாம்.
பால வெள்ளாளர் கொங்கு சோழரின் உறவின்முறையார். இவர்கள் 1005 முதல் 1300 வரை கொங்கு நாட்டை ஆண்டனர்.
பால வெள்ளாளர் கோணாடு எனப்படும் திருச்சியின் தென் பகுதியிலிருந்து வந்தனர். அவர்களோடு பவளகட்டி வெள்ளாளரும் 1000 ஆண்டுகளுக்கு முன் அங்கு வசித்திருக்க வாய்ப்பிருக்கிறது
ஏனென்றால் , அண்ணமார் வாழ்ந்தது கோனாட்டில் தான். பவளகட்டி வெள்ளாளரில் அண்ணமார் வழிபாடு அங்கிருந்து நீங்கள் இடம் பெயர்ந்ததற்கான சான்றாகும்.
கோனாட்டு வெள்ளாளருள் பல பிரிவுகள் முன்பு இருந்துள்ளது. இன்றும் கார்காத்தார், ரத்னகிரி வெள்ளாளர், சோழிய வெள்ளாளர், சோழிய பிள்ளை போன்றோர் வாழ்கின்றனர்.
கோனாடு சங்ககால தமிழகம் என்றும் செந்தமிழ் நாடு என்று வழங்கப்படும் பகுதியாகும். கரூர் வஞ்சி, உறையூர், மதுரை ஆன இந்த முக்கோணம் கோணாடு மற்றும் செந்தமிழ் நாடாகும்.
என்னிடம் கூரை கூட்ட கவுண்டர்கள் குருகாணிக்கை ரிகார்ஸ் மட்டும் இருக்கு.
உத்தமர் கூட்ட கல்வெட்டு உள்ளது.
மேலும் பல கல்வெட்டுக்கள் ஆராயப்பட வேண்டியது.
சேலத்து அதியமானை வென்ற சோழர்கள் தன் கோனாட்டு வெள்ளாளர்களை பூவானியில் குடியமர்த்தி இருக்கலாம்.
அதியமான் வம்சத்தார் தொப்பபூருக்கு வடக்கே அரூர் வரை சென்று விட்டனர். அதியனின் உறவின்முறையார் தர்மபுரி பக்கம் இருக்கும் சிறுதாலி வெள்ளாளராக இருக்கலாம்.
பவளகட்டி வெள்ளாளர் கோனாட்டில் இருந்த பாண்டியனின் உறவின்முறை வம்சாவழியாகவும் இருக்கலாம். ஆக, மூவேந்தர்களின் உறவின் முறையாரும் சேர்ந்து தாரமங்கலம் கோயில் கட்டியதால் மூவேந்தர்களின் சின்னமும் பதியப்பட்டிருக்கலாம்.
வரலாற்று தொடர்ச்சியை தெரிந்து கொள்ள நீங்கள் உங்கள் சீர் சம்பிரதாயம், நோன்புகள், பழக்கவழக்கம், கோயில் முறைகள், குடியமர்வுகள் போன்ற பல விஷயங்களை பகிர வேண்டும். மேலும், உங்கள் சமுதாய பெரியோரின் செவிவழி பதிகளை ஆவணப்படுத்தி அதிலிருந்து வரலாற்று நீட்சி, அதன் மெய்த்தன்மை போன்றவற்றை ஆராய வேண்டும்.
அதியன் (இளஞ்சேரன்) சமண மதத்தை தழுவியதால் சோழர்கள் அதியனின் பூர்வீகமான சேலம் , நாமக்கல் விட்டு வடக்கே துரத்தினர்
குணசீலன் என்ற அதியமான் அரசன் நாமக்கல்லில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் நாமக்கல் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலில் முடிசூடினான் என்ற கல்வெட்டு உள்ளது.
13 ஆம் நூற்றாண்டில் அதியமான் வழிவந்த சமண அதியமான் அரசர்கள் கொங்கு நாட்டு வடவெல்லையான தொப்பூருக்கு வடக்கே விரட்டப்பட்டனர்
தகடூர் என்று அழைக்கப்படும் தர்மபுரி பிற்கால அதியர்களின் நகரம்
சங்ககால அதியால்ன்மான்களின் தகடூர் என்பது குமாரபாளையம் ஆகும். அதன் பெயர் தகடைப்பாடி. இத்தகடூரை இரண்டாம் நூற்றாண்டில் சேரர்களின் இரும்பொறை வம்சத்தார் (தகடூர் எறிந்த நெடுச்சேரல் இரும்பொறை) அதியரை வென்று தகடூரை மீட்டனர்.
2 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு சேலத்தை மையமாக வைத்து அதியமான்கள் வாழ்ந்தனர். சேலத்திற்கு சேரலமாநகரம் என்ற பெயரும் உண்டு. கரபுரநாதர் புராணம் இதனை உறுதிப்படுத்தும். அவ்வையார் அதியமானுக்கு மூப்புவாரா கருநெல்லிக்கனி கொடுத்தது கஞ்சமலையில் தான்.
கஞ்சம் என்றால் பொன்.
மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் பவளங்கட்டி வெள்ளாளர் ஆய்வு குழுவிடம் இருந்து பெறப்பட்டது...
தொடர்ந்து பயணிப்போம்