kongu pavalankatti vellala gounder
Sunday, May 9, 2021
பொன்னேர் பூட்டுதல் (கட்டுதல்) கொங்கு வேள்ளாள கவுண்டர் விழா
பொன்னேர் பூட்டும் வைபவம்
பொன்னேர் பூட்டும் விழா, பொன்னேர் கட்டுதல் என்று குறிப்பிடப்படும் விழா நம் தொன்மையான விழாக்களில் ஒன்று. தற்காலத்தில் ஏறக்குறைய நாம் மறந்துவிட்ட பண்டிகை. அதென்ன, பொன்னேர் கட்டுதல்..?? தைப்பொங்கல் என்பது அறுவடை முடிந்தபின் நடக்கும் பண்டிகை போல, பொன்னேர் கட்டுவது என்பது சித்திரை மாதம் விதைக்கும் பருவத்தில் விவசாயத்துக்காக நிலத்தை உழுவதற்கு முன் கொண்டாடப்படும் குடியானவர் பண்டிகை. பாரத தேசம் முழுதுமே இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தேசத்தின் அரசர் முதல் கிராமத்தின் ஊர் கவுண்டர்கள் வரை தங்கத்தால் செய்த கலப்பை கொண்டு (அல்லது சிறிது தங்க ஆபரணம் கொண்டு அலங்கரித்த கலப்பை கொண்டு) நிலத்தை உழுது உழவை துவக்கி வைப்பார்கள். தற்காலத்தில் கொங்குப் பகுதியில் அருகிப் போயிருந்தாலும் பாரதத்தின் பிற பகுதிகளிலும், பாரத ராஜ்யம் ஏற்பட்ட வெளிநாடுகளிலும் இன்றளவும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கொங்குப் பகுதியில் எண்பது வயது தாண்டிய பெரியவர்கள் அவர்கள் சிறு வயதில் இப்பண்டிகை கொண்டாடட்டத்தை நினைவுகூறுகிறார்கள்.
புராண இதிகாசங்கள் முதல் சங்ககாலம் முதல் பொன்னேர் பூட்டும் நோம்பி பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஸ்ரீ ராமாயணம்
ஸ்ரீ ராமாயணத்தில் மாதா சீதை, ஜனக மகாராஜாவுக்கு தெய்வ அனுக்கிரஹத்தால் கிடைத்த குழந்தை. அவர் பொன்னேர் பூட்டி ஒரு திருநாளில் உழுத போதுதான் நிலத்தடியில் சீதை கிடைக்கிறார். சீதை என்ற பேரே ஏர்கலப்பை நிலத்தில் உழுது செல்லும் பாதையை குறிப்பதாகும். ஏர்க்கலப்பையில் பாதையில் கிடைத்த குழந்தை எனவே சீதை என்று பேர் வைத்தார்கள்.
வேங்கட புராணம்
வெங்கடேச புராணத்தில் பத்மாவதி தாயார், அவரது தந்தைக்கு கிடைத்ததும் இதுபோன்ற பொன்னேர் பூட்டும் வைபவத்தில் தான்.
சிவமஹாபுராணம்
சிவமஹாபுராணத்தில் நந்தீஸ்வரர் சிலாத முனிவருக்கு பொன்னேர் பூட்டி ஓட்டிய போது மாணிக்கப்பெட்டியில் கிடைத்தார்.
சத்ரபதி சிவாஜி
சிலப்பதிகாரம்
"கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்" - (சிலப்.10:13:2-5)
என்னும் சிலப்பதிகார நாடுகாண் காதையடிகட்கு, "செந்நெற் கதிரோடே அறுகையும் குவளையையும் கலந்து தொடுத்த மாலையை மேழியிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பாரைப் போலப் போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி நின்றோர் ஏரைப் பாடும் ஏர் மங்கலப் பாட்டுமென்க" என்று அடியார்க்குநல்லார் உரை வரைந்துள்ளார். அடியார்க்கு நல்லார் கொங்கதேசத்தில் கன்னகூட்ட பொப்பண்ண காங்கேயன் ஆதரவில் வாழ்ந்தவராவார். அவர் உரை இல்லாவிடில் இசைத்தமிழ் என்ற துறை இன்று இல்லை. ஆக, கொங்கதேசத்தைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் உரையில் கொடுக்கபப்டும் விளக்கம், சிலப்பதிகார காலத்திலோ அல்லது அடியார்க்கு நல்லார் வாழ்ந்த (12 நூற்றாண்டு) காலத்திய கொங்கு வழக்கம் என்பதில் மாற்று கருத்தில்லை.
சங்க இலக்கியங்கள்
களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்.
(திருவிளையாடற்புராணம்)
உழவர்கள் பொன்னேரை பூட்ட எருதுகளும், எருமைக் கடாக்களும் மகிழ்ச்சியுடன் வர, அவை அன்னையரின் வாயினின்று வரும் பாடலுக்கு மனம் மகிழ்கின்ற சிறுவர்களை போல் மருதப்பண் பாட்டுக்கு மகிழ்ந்து உழவர் சொல்லுக்கு இணங்க உளவு தொழில் செய்தன என்பார்.பல வண்ண எருதுகளை பூட்டி வழிய கால்களை உடைய உழவர்,பூமியில் உழவு செய்ய பூமியின் அங்கம் கிழித்து செந்நெல் பயிர்கள் செழித்து அசைந்து ஆடின என்பார்.
கார் நாற்பது
கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புனம் ஏர்க்கடி கொண்டார் பெருங்கௌவை
ஆகின்று நம்மூ ரவர்க்கு.
ஏர்க்கடி கொள்ளுதல் - புதிதாய் ஏருழத் தொடங்குதல்; இதனை ‘நல்லேர்' என்றும், ‘பொன்னேர்' என்றும் வழங்குவர். (ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை)
அண்ணமார் கதைப்பாட்டில் குன்னுடையா கவுண்டர் பொன்னேர் ஓட்டிய தகவலும் உள்ளது.
கொங்கின் எல்லா பகுதிகளிலும் கொங்கு கவுண்டர்கள் மரபில் வந்த ஊர்கவுன்டர்கள் (கொத்துக்காரர்கள்) பொன்னேர் பூட்டுவதே நடந்துவந்துள்ளது. பொள்ளாச்சி வட்டாரத்தில் -வேளார் எனப்படும் குயவர்கள் முதல் ஏர் ஓட்டுவதும் நடந்துள்ளது.
பண்டிகை முறை:
இந்த பண்டிகை வேளாளரின் தலைமையில் நடக்கும் பண்டிகை. முதலில் சித்திரையில் ஒரு நல்ல நாளில் அல்லது முதல் தேதியிலேயே நடக்கும். பஞ்சாங்கத்தில் குறிப்பு பார்த்து கொண்டாடுவதும் உண்டு. நாள் முடிவு செய்தபின் ஊரில் எல்லாருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். ஊரின் ஈசானிய மூலையில், ஒரு போது நிலத்தை தேர்ந்தேடுப்பர். விடியற்காலையில் கவுண்டர்கள் தங்கள் ஏர் மற்றும் எருதுகளோடு அந்த இடத்திற்கு வந்து சேர்வர். பெண்கள் பைகளில் மாட்டு எருவை சிறிதளவு எடுத்து வருவர்.
உழும் நிலத்தில் பிள்ளையார் (மஞ்சள்/சாணம்) பிடித்து அருகம்புல் வைத்து தேங்காய் பழம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் படைத்து, விதை தானியங்கள் (நவதானியம்), நிறைநாழி, உட்பட மங்கள பொருட்கள் வைத்து, கலப்பை-காளை எல்லாவற்றிற்கும் பூஜை செய்து வணங்குவர். சூரியனுக்கும், பூமித்தாய்க்கும்கூட பூஜைகள் நடக்கும். சிலப்பதிகார உரை எழுதிய அடியார்க்கு நல்லார் (நம் கொங்கதேசத்தைச் சேர்ந்தவர்), கலப்பைக்கு செந்நெல் கதிர், குவளை மலர் (வெள்ளாளர்கள் சூடும் மலர்), அருகம்புல் கொண்டு தொடுத்த மாலையை சூட்டி பூஜிப்பராம். இது கொங்கதேச மரபே. மேலும் பொன்னேர் ஓட்டும்போது ஏர்மங்களப் பாட்டும் பாடப்படுவதை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். அந்த ஏர் மங்களப் பாட்டு ஏதேனும் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை.
(ஸ்ரீ ராமாயணத்தில் வனம் புகும் முன் ஸ்ரீராமர் வனதேவதையும், அங்கிருக்கும் பல்லுயிரினங்கள் மற்றும் தாவரங்களையும் வணங்கி நாங்கள் இங்கே நடப்பதாலும் வசிப்பதாலும் உங்களுக்கு ஏற்படும் துன்பத்தை பொறுத்தருள வேண்டும் என்று பூஜைகள் செய்து வணங்குவார். அப்போது லக்ஷ்மணன் விவசாயம் செயும்போது இதேபோன்ற தீமையினால் வரும் பாவம் விவசாயிகளைப் பிடிக்காதா என்று கேட்கையில், ஸ்ரீராமர் பொன்னேர் பூட்டும்போது செய்யப்படும் இதுபோன்ற பூஜைகள் பற்றி சொல்வார்)
பூஜைகள் முடிந்ததும், காளைகளை ஏரில் பூட்டி பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட திசையை நோக்கி ஏர்களை ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நிறுத்துவர். உழும் நிலத்தில் மக்கள் கொண்டுவந்த எருவை தூவுவர். முதல் ஏரை ஊர் கவுண்டர் ஓட்ட அவர் பின்னே மற்ற ஏர்கள் வரும். உழுதுசெல்லும் வழியில் நவதானியங்கள் தூவப்படும். உழுது முடித்த பின் மக்கள் நிலத்தில் இருக்கும் நவதானியங்களையும் கைப்பிடி மண்ணையும் எடுத்து சென்று தங்கள் நிலத்தில் போடுவார்கள். இதனால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்ற ஐதீகம்.
தேவதானமாக (கோயில் மானியமாக) விடப்பட்ட ஊர்களில் சிறிது மண் கோயிலுக்கு கொண்ட செல்லப்படும். விளைச்சல் முடிந்ததும் கோயிலுக்குரிய பங்கை மக்கள் செலுத்துவர். சிற்சில பூஜை மாற்றங்கள் அங்கே உண்டு.
அவரவர் வீடு செல்லும்போது, வீட்டிலிருக்கும் பெண்கள் நீராகாரம் தயாரித்து வைத்திருப்பர். உழுது களைத்து வந்தவர்கள் நீராகாரம் அருந்தி புத்துணர்வு பெறுவர். சில ஊர்களில் மஞ்சள் நீர் விளையாட்டும் நடைபெறும். பொன்னேர் விழா நடக்கும் நாளில் எல்லா வீட்டிலும் வேப்பங்கொத்து வொருகி வைக்கப்படும். பொன்னேர் விழா முடிந்த பின்னர் மக்கள் எல்லாரும் தங்கள் நிலத்தில் விவசாயத்தை துவங்குவர்.
பொன்னேர் பூட்டி ஓட்டுவது விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அதில் கலந்துகொள்ளும் மக்களுக்கும் அந்த ஊருக்கும் சுபிட்சத்தை வாரி வழங்கும் பண்டிகையாகும்.
இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் பொன்னேர் என்பதே வெள்ளாளர்களின் சாதி சின்னமாகும். வேல்லாலர்களின் ஜாதி கொடியை பொன்மேழிக்கொடி சித்திரமேழிக்கொடி என்றுதான் சொல்வார்கள். வெள்ளாளர்கள் ஜாதி சபையை சித்திரமேழி சபை என்றே சொல்வார்கள். சித்திரமேழி-பொன்மேழி இரண்டும் ஒன்றையே குறிக்கிறது. சித்ர-பிரகாசமான, மேழி-கலப்பை அதாவது ஒளி பொருந்திய கலப்பை என்றும்... சித்திரை மாசம் பூட்டப்படும் ஏர் (அதாவது பொன்னேர்) என்றும் இருவேறு விதமாக பொருள் கூறுவர். எல்லா நாட்டு அரசனும் இந்த பொன்னேர் உழவை தானும் உழுது துவக்கி வைப்பது அரசர்களின் விவசாயக் குடிப்பிறப்பை குறிப்பதாகும். சோழனை வெள்ளாள மகாராசா என்றும், வெள்ளாள ஜாதியில் பிறந்தவன் சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது. இன்றும் சோழனின் ஆட்சி பரவிய கம்போடியா தாய்லாந்து போன்ற நாடுகளில் அரசர்கள் தவறாது வருஷந்தோறும் சித்திரை மாத காலத்தில் பொன்னேர் பூட்டி ஓட்டுகிறார்கள். அரசர்கள் உழவு ஜாதியில் இருந்து வந்தமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஆதியில் நாடோடி வாழ்க்கையாக வாழ்ந்த மனிதன் நாடும் ராஜ்யமும் அமைக்க, ஓரிடத்தில் நின்று வாழ வேண்டும். அதற்கு அடிப்படையாக அவனுக்கு உணவும் நீரும் தேவைப்பட்டது. அவற்றை உருவாக்க தெரிந்தவந்தான் வெள்ளாளன். எனவேதான் பெரும்பாலான அரசகுடிகள் வெள்ளாள ஜாதியாகவே உள்ளனர்.
இனி வரும் காலங்களில் மீண்டும் பொன்னேர் வைபவம் துவங்கப்பட்டு, அந்நாளில் பாரம்பரிய விதைகள் பகிர்ந்துகொள்வது, பாரம்பரிய விவசாய உரைகள் ஏற்பாடு செய்வது, நாட்டுப் பசுக்களின் அவசியம் போன்றவற்றை எடுத்துரைக்கும் விதமாக ஒரு விவசாய விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட வேண்டும்.
கம்போடியா-தாய்லாந்து- போன்ற நாடுகளில் இன்றும் இந்த விழா அந்நாட்டு அரசர்களால் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் பெருவாரியாக கலந்துகொண்டு அங்கே விதைக்கப்படும் நவதானியங்களை போட்டி பொட்டு எடுத்து செல்வர். இதனால் தங்கள் நிலத்தில் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை. அங்கே உழவு முடிந்ததும் உழவோட்டிய காளைகளுக்கு பல வித தீவனங்கள் வைக்கப்படும். எந்த தீவனத்தை காளை முதலில் உன்கிறதோ அதை வைத்து அவ்வருடத்தின் பலன் முடிவு செய்யப்படும்.
தாய்லாந்து பொன்னேர் விழா
கம்போடியா பொன்னேர் விழா, 2015
Thursday, April 22, 2021
சோழிய வேளாளர்கள் வரலாறு
சோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வெள்ளாளர் (Chozhia Vellalar) இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வெள்ளாளர் சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும். இவர்கள் பண்டைய சோழ தேசமான இன்றய டெல்டா பகுதி என்றழைக்கக் கூடிய தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டதால் சோழ வெள்ளாளர், சோழ வேளாளர், சோழிய வெள்ளாளர், சோழ நாட்டு வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும். சோழிய வெள்ளாளர் நிலவுடமையாளராக இருந்துள்ளனர். இவர்கள் கோவில் அறங்காவலர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் போன்ற பொறுப்புகளில் இன்றுவரை விளங்கி வருகின்றனர்.[1]
சோழியர் / சோழிய வெள்ளாளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
தோற்றம்
வேளிர் என்ற பண்டய தமிழ் குடியில் தோன்றிய இவர்கள் வேள், வேளிர், வேளான், வேளாளர் என பெயர் பெற்றனர். வேளாளர் எனும் சொல்லே பேச்சி வழக்கில் மருவி வெள்ளாளர் ஆனது. சோழியம் எனப்படும் சோழ நாட்டை பூர்வீகமாக கொண்டதால் சோழிய வெள்ளாளர் ஆனார்கள்.
வரலாறு
இவர்கள் பொதுவாக சோழ நாட்டின் வேளாண்குடிகளாகவும், தற்காலிக போர்குடிகளாகவும், பெரும் நிலவுடமையாளர்களாகவும், சிற்றரசர்களாகவும் இருந்துள்ளார்கள். சைவ சமயத்தை சேர்ந்த இவர்கள் சோழர்களின் ஆட்சி காலத்திலிருந்தே மேன்மை நிலையை அடைந்திருந்தனர். சோழிய வேளாளர்கள் சோழர்களின் அமைச்சர்கள், படைத்தளபதிகள், அரசு அதிகாரிகள், ஊர் தலைவர்கள் போன்ற உயரிய பதவிகளில் இருந்து அவர்களின் ஆட்சிக்கு பெரும்பங்காற்றியதை கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளின் மூலம் அறிய முடிகிறது. கொடும்பாளூர் வேளிர்களின் கல்வெட்டுக்கள் மற்றும் கரிகாலச் சோழனின் முடிசூட்டும் கல்வெட்டுகளின் வாயிலாக இவர்கள் சோழர்களுடன் மண உறவு கொண்டிருந்ததை அறிய முடிகிறது. திரு. நீலகண்ட சாஸ்திரிகளின் சோழர் வரலாறு என்ற நூலில் இவர்களைப் பற்றிய செய்திகள் மற்றும் வரலாற்று குறிப்புகள் அதிகமாக காணப்படுகிறது.
கூட்டம்/கிளை
சோழிய வெள்ளாளருள்
கருப்புடையான்
மருதூருடையான்
காருடையார்
குளத்துடையார்
மாயனுடையார்
வாங்காருடையார்
தென்னயமுடையார்
சாத்துக்குடையார்
கூடலுடையார்
ஆதிக்கமுடையார்
காங்கா கோத்திமுடையார்
சுரைக்குடையான்
ஆணைபாக்கமுடையான்
பாக்கமுடையான்
கல்லூடையான்
மருதஞ்சேரியுடையான்
போன்ற 64 கூட்டங்கள் அல்லது கிளைகள் இருப்பதாக சோழ மண்டல சதகம் சொல்கின்றது.
புலம்பெயர்வு
தொடக்க காலத்தில் சோழிய வெள்ளாளர்கள் தமிழ்நாட்டின், சோழ மண்டலமான கிழக்கு மாவட்டங்களில் இருந்தார்கள்.[3] இவர்களில் சிலர் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அரசு பணி மற்றும் தொழில் காரணமாக திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து, தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.
மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் இரத்தினகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள அய்யர்மலையைச் சுற்றியுள்ள 84 ஊர்களில் வாழும் சோழிய வெள்ளாளர்கள் தங்களை மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள்.
குலப்பட்டம் மற்றும் குலதெய்வ வழிபாடு
பிள்ளை மற்றும் வேளாளர் என்ற குலப்பட்டத்தினை தங்கள் பெயர்களுக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள்.
சோழிய வேளாளர்கள் தங்கள் குலதெய்வமாக அங்காளம்மன், மாரியம்மன், பேச்சியம்மன், பச்சையம்மன், காத்தாயி அம்மன், கருப்பசாமி, மதுரைவீரன், காத்தவராயன், பெரியசாமி போன்ற சிறு தெய்வங்களை குல தெய்வமாக கொண்டவர்கள்.[சான்று தேவை]
இவர்கள் தங்கள் பங்காளிகளுடன் சேர்ந்து குலதெய்வத்திற்கு ஆடு மற்றும் கோழிகளை பலி கொடுத்து படையலிட்டு வழிபடும் பழக்கம் உடையவர்கள்.
சோழிய வேளாளர்கள் சோழ மன்னர் (வேளிர்)
சோழிய வேளாளர்
3/25/20141 Comment
சோழிய வேளாளர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம். 'பிள்ளை' என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், சோழிய வெளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.
கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், சோழர்கள் ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்ட சூழலில், சித்திரை மேழி பெரிய நாட்டார் அமைப்பும் கலைக்கப்பட்டுவிட்டது எனத் தெரிகின்றது. கைக்கோளர், அகம்படி முதலியார் போன்ற சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் அணியில் சேராமல் தங்களை வேளாளர் என அழைக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டனர். உடையார், நயினார், மூப்பனார் ஆகிய சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் என்ற அமைப்பிலிருந்து தங்களை விடுத்தபின், பார்கவ குல சத்திரியர் என அழைத்துக் கொண்டனர். பண்டைய அகம்படி சாதிகளில் சோழிய வேளாளர், கார்காத்த வேளாளர், இசை வேளாளர், வீரக்கொடியார் ஆகிய சாதிகள் மட்டுமே வேளாளர் சமூகத்தில் இடம் பெற்று விட்டனர். இவர்களையே உயர்குடி வேளாளராக நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார்.
சோழனின் கிளைகுடியினனான தொண்டைமானைத் தங்கள் இனமாகக் கொள்ளும் சோழிய வேளாளர், சோழனின் கிளைக்குடி என்பது உறுதிபடுகின்றது.
வட இந்தியாவில் யது குலத்தின் கிளைக்குடியாகக் கூறப்படும் ஐந்து பிரிவுகளைக் கொண்ட தாளஜங்கா மரபினரை ஒத்தவராவர் இவர். அக்குலத் தோன்றலான ஏயர் கோமான் கலிக்காம நாயனார் வம்சத்தினரும் இன்று சோழிய வேளாளர் சாதியிலேயே சேர்ந்திருக்க வேண்டும். கலிக்காம நாயனார், வேளாளருடன் மண உறவு கொண்டதைப் பெரிய புராணம் மூலம் அறிய முடிகின்றது.
மற்றொரு செய்தியின் படி பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக் கதவுகளை கவர்ந்து வரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள் இருந்தார்கள். கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம். முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழிய வேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடி சூடினார்களாம். பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும், ஆதரவும், சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம்.
“பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு அயலிலிருந்த அதன் சகோதர அரசுகளான சேர, பாண்டிய அரசுகளை வெற்றிகொண்டு சென்னையின் சுற்றுப் புறத்திலிருந்து குமரி முனை வரை மேலாட்சி செலுத்தியது. அந்தக் காலப்பகுதிக்குப் பின்னர் தென்னிந்தியாவின் தமிழ் முகம்மதியர்கள் ‘சோழிய முகம்மதியர்கள்’ என்று அறியப்பட்டனர் அல்லது பொதுவாக ‘சோழியர்’ (சோழதேசம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்கள்) என அறியப்பட்டதில் சந்தேகமில்லை. இன்றுவரை ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் தென்பாகத்தைச் சேர்ந்த தம் மதத்தினை ‘சோழிய’ என்றே அழைக்கின்றார். ஏனெனில், சோழியர்களில் மிகப் பெரும்பான்மையோர் மதத்தைத் தவிர, மொழி, பொதுத் தோற்றம், சமூக வழக்கங்கள் என்பனவற்றைப் பொறுத்த வரையில் தமிழர்களாக இருக்கின்றனர்”
சோழியர் எனும் சொல்லானது “சோழதேசம்” என அழைக்கப்பட்ட தமிழ் நாட்டின் மக்களைக் குறிக்கின்றது. வின்ஸ்லோ என்பவர் தமது தமிழ் ஆங்கில அகராதியில் பின்வருமாறு விளக்கம் தருகிறார். சோழியர் – சோழம் எனும் அவர்களது தேசப் பெயரால் வழங்கப்பட்ட, எத்தனையோ குலங்களிருந்து ஆன ஒரு வகுப்பினர். பிராமணர், வேளாளர் முதலியவரிலொரு பிரிவார் சோழியப் பார்ப்பார் சோழிய வேளாளர்........ “சோழியப் பிராமணரும் சோழிய வேளாளரும் போல் சோழிய முகம்மதியர்களும் உள்ளனர். எல்லோரும் சோழ தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் அவரது தென்பகுதி மதத் தோழர் ஒருவரைச் “சோழிய” என்று அழைப்பதற்குக் காரணம், அவர் சோழ தேசத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். ஒரு காலத்தில் தென்னிந்தியா அந்தப் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைமீது படையெடுத்து வந்த தமிழர்கள், முன்னர் காட்டியதுபோல் சோழியர் என்றே அழைக்கப்பட்டனர்.
'சோழிய வெள்ளாளர்' போன்று பிள்ளை உட்பிரிவினை ஒத்த, ஆனால் சிறிது வேறுபட்ட 'சோழியர் இல்லம்' என்ற பிரிவு 'இல்லத்துப்பிள்ளைமார்' பிரிவின் ஓர் அங்கமாக உள்ளது.
சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப் பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில் இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர் சமூகத்திலும் பளிங்கில்லம், மஞ்சநாட்டு இல்லம், தோரணத்தில்லம், மூட்டில்லம், சோழிய இல்லம் எனும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சோழப் பேரரசர் முடிசூடும் தலமாகவும் குலத் தெய்வ திருத்தலமாகவும் சிதம்பரம் இருந்ததைப் போன்று கொங்கு சோழ அரசர்களுக்குக் கோநகராகவும் முடிசூடும் தலமாகவும் விளங்கியது பேரூர் ஆகும்.இதிலிருந்தே கொங்குச் சோழர்களின் அரசகுலப் படையாகிய எழுநூற்றுவர்க்கும், சோழியர் பிரிவைச் சேர்ந்த சிறுகுடி வேளாளர்க்கும் உள்ள தொடர்புகளை உய்த்துணரலாம். மேற்குறிப்பிட்ட சிறுகுடி வேளாளர் மடத்துச் செப்பேட்டில் சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.
நாயக்கர்கள் வரலாறு ( குலதெய்வம், சங்ககாலம் )
நாயக்கர் என்பவர்கள் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வாழும் சில சமூகங்கள் பயன்படுத்தும் பட்டம் ஆகும். இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்கள் ஆதியில் கங்கை சமவெளியில் யமுனை நதிகரையில் வாழ்ந்த மேய்ச்சல் நில ஓர் இன பழங்குடிமக்கள் என ரிக் வேதத்தின் அய்த்ரேய பிராமணம் கூறுகிறது[1]. நாயக்கர்கள் காப்பு,கொல்லா,கம்மா[2] எனப்படும் இனத்தவர்களின் மரபுகளாக அறியப்படுகிறார்கள். இவர்களே நாயக்கர் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள்.
நாயக்கர் / நாயுடு
Thirumalai nayakar.jpgKattapommanstatue.jpg
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், புதுச்சேரி, கேரளம்
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ், கன்னடம், துளு
சமயங்கள்
இந்து
இவர்கள் நாயுடு, நாயக்கர், ரெட்டி, ராவ், ராயர், செட்டே, உடையார், ராயுடு என்று பலபெயர்களில் வாழுகிறார்கள். தமிழகத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனீ, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் செஞ்சி, தஞ்சை, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், வேலூர் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் வாழுகிறார்கள். பொதுவாக நாட்டை ஆண்டவர்கள், பாளையத்தை ஆண்டவர்கள் (குறுநிலத்தை) நாயக்கர் என்று அழைக்கப்பட்டனர்.
ஆந்திராவில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள காப்பு,ராஜகம்பள கொல்லா, பலிஜா, கவரா,கம்மா[3], தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர்களின் பெரும் பகுதியினர் வட தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். கம்மவர், முத்தரையர், அகமுடையாரில் சிலர் போன்றோர்கள் நாயக்கர்களாக அறியப்படுகிறார்கள்.
நாயக்கர்கள் இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், கிருஷ்ணதேவராயன், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள், விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற அரசர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள்.
நாயுடு/நாயக்கர் பட்டம் பயன்படுத்தும் பிரிவுகள்
காப்பு
கொல்லா
கவரா
பலிஜா
பனாஜிகா
தொட்டிய நாயக்கர்[சான்று தேவை]
முத்துராஜா நாயுடு
வெலமா
கம்மா
காப்பு
ஆந்திராவில் வழங்கப்படும் பெயர். இவர்கள் முன்னேறிய சாதிகள் பிரிவில் உள்ளனர், உயர் சாதியினராக கருதப்படுகிறார்கள். காப்பு என்பதற்கு காவல் என்று பொருள். இம்மக்கள் அரசர்களாக இருந்ததால், இவர்களை காப்பு என்று அழைப்பர். காப்பு என்றால் காவல் காப்பவர்.
பலிஜா
பலிஜா என்பதற்கு பலம் பொருந்தியவர்கள் என்றும், வாணிகம் செய்தவர்கள் என்றும் இருவேறு பொருள் கூறுகிறார்கள். இம்மக்கள் பெரும்பாலும் வணிகம் சார்ந்தே வாழுகிறார்கள். இவர்கள் தென்னாடு முழுவதும் வாழுகிறார்கள். கவரா, வளையல் நாயக்கர், வடுகர் (கம்மவாரை தவிர்த்து)[4] ஆகியோர் பலிஜாவின் கிளை ஜாதியினர்.[சான்று தேவை];
கொல்லா
கொல்லா இனத்தவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, தெலுங்கு பேசும் யாதவர்களாக அறியப்படுகிறார்கள். 1931 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இவர்கள் எட்டு லட்சத்து ஆறாயிரத்து நானுறு பேர் உள்ளதாக ஆவணம் தெரிவிக்கின்றது.ஆந்திராவில் தற்போதைய கணக்கெடுப்பின் படி 7% சதவீத மக்கள் இச்சமுகத்தினர்.ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த நாயக்கர் மரபினர்களில் இவர்களும் ஒரு குழுவினராக உள்ளனர். இவர்களைப் பொதுவில் நாயுடு அல்லது நாயக்கர் என்று அழைக்கின்றனர். இவர்கள் வடக்கில் இருந்து வந்ததால் வடுகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ராஜகம்பள நாயக்கர் பிரிவில் வரும் கொல்லவார்கள் (கொல்லா+வாரு=கொல்லவாரு) "வாரு"என்பது "அவர்கள்" என்று தெலுங்கில் பொருள். உதாரணம் கம்மா+வாரு=கம்மவார்.
வெலமா
தமிழ்நாட்டில் உள்ள நாயுடு இனத்தவரில் வெலமா என்பதும் ஒரு பிரிவாகும். உணவு தொடர்பான தொழிலில் பிரதானமாக விளங்குகிறார்கள். (உதாரணம்., அடையார் ஆனந்த பவன், வசந்த பவன், முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள்) காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பத்ம வெலமா என்கிற பிரிவினர் திரளாக வசிக்கின்றனர்.
முத்துராஜா நாயுடு[5][6][7][8]
முத்துராஜா நாயுடு (Muthuraja Naidu) அல்லது முத்திரிய நாயுடு (Muthiriya Naidu)[9] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு இனக்குழுவினர் ஆவர். இச் சமூகத்தினர் செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வசிக்கின்றனர்.[10]
தொட்டிய நாயக்கர்
தெலுங்கில் தொட்டிய என்றால் பெரிய என்று பொருள். தாங்கள் "'கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். [சான்று தேவை]இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கைப் பேசுவர். வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே.
இவர்கள் கொல்லா வின் கிளை ஜாதியினர்.[சான்று தேவை] இம்மக்கள் தங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாட்டை வைத்து கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு, இவரை '"ஊர் நாயக்கர்"' என்று அழைப்பர் .இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர். பெரும்பாலான தமிழக பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டுள்ளன. 72 பாளையங்களாக இருந்த காலத்தில் 62 பாளையங்கள் இவர்களால் ஆளபட்டதே .விடுதலை போராட்டத்தில் பெருமளவு பங்கு பெற்றுள்ளனர். வரதட்சணை இல்லாத திருமணம், பழைய பழக்கம் எதனையும் மாற்றாத முறை, கூட்டு வாழ்kகை என்று கம்பளத்தார்கள் ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபட்டு பழமையோடு வாழுகிறார்கள்.[11]
தொட்டிய நாயகர்களின் கிளை
தொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்:
தெலுங்கு பேசுவோர் :
கொல்லவார் - கோபாலர் மரபு -சங்கம வம்சாவளிகள்
சில்லவார் - ஒழுக்கம் பராமிப்பவர் -சாளுவ வம்சாவளிகள்
தோக்கலவார் - செல்வம் சேர்த்தல்- ஆற்றினை கடந்து செல்லும் நிலையில் ஆநிரையின் தோக்கலு ( வால் ) பிடித்து சென்றவர்கள் .
பாலவார் -பாலமு என்றால் படை - படை வீரர்கள்
வேகிளியார் ( சில்லவார் மற்றும் பாலவார் கலந்து குறிக்கப்பட்ட இனம் ) - சுத்தமானவர்கள் என்று பொருள் , மேலும் வேலியை போல நாட்டினை காத்தவர்கள்.
வல்லக்கவார் ( ஏற கொல்லா ) - கிருஷ்ணர் காட்டினை எரிக்கையில் தீயில் இருந்து வந்தவர்கள் , தீ - சிவப்பு என்பதால் , சிவப்பு கொல்லா தெலுங்கில் ஏற கொல்லா என்றானது.[சான்று தேவை]
கன்னடம் பேசுவோர்
காப்பிலியர் - [கன்னட காப்பு இனம்] காவல் காத்தவர்கள் - ஹொய்சாலா மரபினர்- விஜயநகர மரபின் முக்கிய குழுவினர்.[சான்று தேவை]
அனுப்பர் - அல்லி குலத்தோர் -மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்). இவர்களின் வழிவந்தவர்கள் அல்லி குல அனுப்பர்கள் விஜயநகர மரபினர்.[சான்று தேவை]
குருமர் - குரி என்றால் ஆடு, ஆடுகளை மேய்க்கும் மரபினர் - விஜயநகரமும் இவர்கள் இல்லாமல் இல்லை.
இது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்துக் கொள்வர் .
தெலுங்கு பேசும் கம்பளத்தார்கள் நாயக்கர், நாயுடு என்றும், கன்னடம் பேசும் கம்பளத்தார்கள் கவுண்டர், கவுடா என்றும் அழைக்க படுகின்றனர். இவர்கள் ராயர் மரபினர்.
ஆந்திராவில் கொல்லா என்றும், கர்நாடகத்தில் வொக்கலிகர்( குடியான சாதி ) என்றும், மராத்தியத்தில் நாயக் குருமர் என்றும் , ஒரிசா இலங்கையில் நாயக் என்றும் பல பெயர்களில் அழைக்க படுகின்றனர்.[சான்று தேவை]
கிருஷ்ணர் கம்பளத்தார் மக்களுக்கு தகப்பன், மாதவன் பெருமாள் இவர்களின் வம்சாவளி, ராமர் இவர்களின் அண்ணன் முறை.. இது புராணங்கள் கம்பளத்தார் உறவுகளை சொல்கிறது.
குலதெய்வம்
பலிஜா
ரேணுகா அம்மா, எல்லம்மா, கனகம்மா, மீனாட்சி அம்மா, திருமால், மல்லன்னா, அங்கம்மா, நாகம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்குவர் .
கவரா
அழகர் சாமி, சின்னம்மா, சென்னம்மா, மங்கம்மா, நாண்ணம்மா, மதுரை மீனாட்சி போன்ற தெய்வங்களை குல தெய்வமாக கொள்வர் .[சான்று தேவை]
ராஜ கம்பளத்தார்
ஜக்கம்மா இவர்களின் இஷ்ட மற்றும் குல தெய்வம், பொம்மன்னா, பொம்மக்கா, வீர சின்னையா, மல்லையா. போன்ற தெய்வங்களை வணங்குவர் .
பலிஜா, கவரா, ராஜ கம்பளம் சமுதாயத்தினர் தங்கள் முன்னோர்களை கடவுளாக வணங்கும் வழக்கம் உடையவர்கள். போரில் இறந்தவர்கள், தங்களுக்கு உதவிய ஏனைய சமுதாயத்தினரையே வணங்கும் பழக்கம் கொண்டவர்கள்
நாயக்கர் என்னும் சொல் வடசொல்லிலிருந்து வந்தது எனக் கண்டோம். ஆனால் நாயக்கர் என்னும் சொல் இந்நாளில் தெலுங்கர்களைக் குறிக்கின்றது. அதுவும் ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்துள்ளது. இந்த நாயக்கர்கள் மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், இக்கேரி, மைசூர் போன்ற இடங்களில் ஆட்சி நடத்தி வந்தனர். முதற்கண் மதுரையில் இருந்து ஆட்சி நடத்தி வந்த மதுரை நாயக்கர்கள் பற்றிப் பார்ப்போம்.
மதுரை நாயக்கர்கள் ஆட்சி கி.பி. 1529இல் விசுவநாத நாயக்கர் என்பவரால் தொடங்கப்பட்டுக் கி.பி. 1736இல் மீனாட்சி அரசியுடன் முடிவடைந்துள்ளது. இந்த மதுரை நாயக்கர் பரம்பரை மதுரை நாட்டில் 207 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது. மீனாட்சி அரசியின் ஆட்சியோடு விசுவநாத நாயக்கர் பரம்பரை மட்டும் முடியவில்லை, விசயநகரப் பேரரசே முடிந்துவிட்டது.
இனி மதுரையை ஆட்சி செய்து வந்த நாயக்க மன்னர்களைப் பற்றி ஒருவர் பின் ஒருவராகக் காண்போம்.
4.2.1 விசுவநாத நாயக்கர் (கி.பி. 1529 – 1564)
விசயநகரப் பேரரசின் பெருமைக்குரிய மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இவரது ஆட்சியில் தமிழ்நாட்டைக் கண்காணிக்கும் பொறுப்பை மேற்கொண்டிருந்தவர் நாகம நாயக்கர் என்பவர் ஆவார். இவருக்கு வாரிசு இல்லாததால் காசிக்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள விசுவநாதப் பெருமானை வணங்கி மகப்பேறு அருளுமாறு வேண்டினார். காசி விசுவநாதப் பெருமான் திருவருளால் கி.பி.1495இல் நாகம நாயக்கருக்கு ஒரு மகன் பிறந்தான். அம்மகனே விசுவநாத நாயக்கர் ஆவார்.
விசுவநாத நாயக்கர் ஏறக்குறையப் பதினாறு வயதினராய் இருந்தபோதே கிருஷ்ணதேவராயரிடம் அடைப்பைக்காரராகப் பணியாற்றினார் (அடைப்பைக்காரர் – அரசருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் அரசாங்க ஊழியர்). இவர் இளமையிலே பல மொழிகளிலும், கணிதத்திலும், போர்ப் பயிற்சியிலும், பிறவற்றிலும் சிறந்து விளங்கினார். இதன் காரணமாகக் கிருஷ்ணதேவராயர் இவரிடம் மிகவும் அன்பு கொண்டிருந்தார். எனவே விசுவநாத நாயக்கரை மதுரை நாட்டுக்கு ஆளுநராக நியமித்தார். கி.பி.1529இல் விசுவநாத நாயக்கர் மதுரையின் ஆட்சியை மேற்கொண்டார். அவர் மதுரை நாட்டுக்கு வரும்போது தளவாய் அரியநாதர் என்பவருடன் வந்தார். தளவாய் என்பது படைத்தலைமைப் பதவியும், அமைச்சர் பதவியும் சேர்ந்ததாகும். கிருஷ்ணதேவராயர் கி.பி.1530இல் இறந்ததும் விசுவநாதர் மதுரை நாட்டைச் சீர்திருத்த வேண்டும் எண்ணிச் சீர்படுத்தலானார். பாண்டிய நாட்டுக்கு உரியதாயிருந்த வல்லம் என்னும் ஊரைத் தஞ்சை நாட்டுடன் சேர்த்தார். தஞ்சைக்குச் சொந்தமாயிருந்த திருச்சிராப்பள்ளியை மதுரை நாட்டுடன் இணைக்கச் செய்தார். இவ்வேற்பாட்டினால் தஞ்சை நாட்டிற்கும், மதுரை நாட்டிற்கும் திட்டவட்டமான எல்லை வகுக்கப்பட்டது.
சீர்த்திருத்தங்கள்
விசுவநாதர் திருச்சிராப்பள்ளியில் தெப்பக் குளத்தை வெட்டினார். தாயுமானவர் கோயிலைச் செப்பனிட்டார். காவிரி ஆற்றின் இருமருங்கிலும் கள்ளர்களின் உறைவிடமாயிருந்த காடுகளை அழித்துச் சாலைகளை அமைத்துக் கள்ளர் தொல்லைகளை ஒழித்தார். திருவரங்கப் பெருங்கோயிலைச் சீர்திருத்தி அக்கோயிலைச் சுற்றித் தெருக்களை அமைத்து, வீடுகளைக் கட்டி அங்கு மக்களை குடியேற்றினார். இவ்வாறு பல சீர்திருத்தங்களைச் செய்தார். இச்சீர்திருத்தங்களால் மதுரை நாட்டின் வடபகுதியாகிய திருச்சிராப்பள்ளியில் ஒழுங்கும் அமைதியும் நிலவலாயின.
தென்பாண்டி நாட்டில் அமைதியைக் காக்க வேண்டும் என்பதற்காக விசுவநாத நாயக்கரும், தளவாய் அரியநாதரும் அங்குச் சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்டார்கள். தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும் இருந்த காடுகள் அழிக்கப்பட்டுச் சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் கள்ளர்களின் தொல்லை ஒழிந்தது. திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் பழுது பார்க்கப்பட்டது. திருநெல்வேலி நகரமும் விரிவாக்கப்பட்டது. நீர்ப்பாசன வசதிகள் செய்யப்பட்டன. பயிர்த்தொழில் இதனால் வளர்ச்சியுற்றது.
பாளையப்பட்டு முறை
தற்காலத்தில் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களும், கேரளாவில் உள்ள திருவாங்கூரின் ஒரு பகுதியும் விசுவநாதர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த மதுரை நாடாகும். இப்பரந்த நாட்டில் செம்மையான ஆட்சி முறையை நிறுவ, கி.பி.1533இல் 72 பாளையப்பட்டு முறையை விசுவநாதர் ஏற்படுத்தினார். இந்தப் பாளையப்பட்டு முறை ஒரு வகையில் ஆங்கில நாட்டின் நிலமானிய முறையைச் (Feudal System) சார்ந்ததாகும். நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும், நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காக மதுரை நாட்டைப் பல பகுதிகளாகப் (பாளையங்களாக) பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஓர் ஆட்சியாளரை நியமித்தனர். அவரைப் பாளையக்காரர் என அழைத்தனர். இந்த 72 பாளையக்காரர்களில் சிலர் கன்னடர், சிலர் தெலுங்கர் ஆவர். மேலும் பாண்டியர் பரம்பரையைச் சேர்ந்தவர்களும் சிற்றரசர்களாய் இருந்தவர்களும் பாளையக்காரர்களாக இருந்தார்கள்.
பாளையக்காரர்கள் தாங்கள் ஆளும் பாளையங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியை மதுரை நாயக்கருக்குக் கொடுக்க வேண்டும். மற்றொரு பகுதியைப் படைவீரர்களுக்குச் செலவிட வேண்டும். இன்னொரு பகுதியைச் சொந்தச் செலவுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். இவர்கள் தங்கள் பகுதியைப் பாதுகாக்க வேண்டும். போர்க்காலங்களில் மதுரை நாயக்கர்களுக்குப் படைத்துணை புரிய வேண்டும். இவர்களே தங்கள் பகுதியில் ஏற்படக்கூடிய வழக்குகளை எல்லாம் விசாரித்து நீதியும் வழங்க வேண்டும்.
விசுவநாத நாயக்கர், விசயநகரப் பேரரசர்களாயிருந்த அச்சுதராயருக்கும், சதாசிவராயருக்கும், அமைச்சர் இராமராயருக்கும் கீழ்ப்படிந்து, நேர்மை குறையாமல், உண்மை ஊழியராய் இருந்து செங்கோல் ஆட்சி நடத்தி வந்தார். இதனை இவர் காலத்துச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவர் சுமார் 35 ஆண்டுகள் மாட்சியுடன் ஆட்சி செய்தார். தமது 69ஆம் வயதில் கி.பி.1564இல் மறைந்தார்.
இவரின் மறைவுக்குப் பின் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564-1572), வீரப்ப நாயக்கர் (கி.பி.1572-1595), இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1595 – 1601), முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1601 – 1609), முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1609-1623) ஆகியோர் மதுரையை ஆட்சி புரிந்து வந்தனர்.
4.2.2 திருமலை நாயக்கர் (கி.பி.1623-1659)
மதுரை நாயக்க மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவர் திருமலை நாயக்கர் ஆவார். இவர் முத்துக் கிருஷ்ணப்பருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். திருமலை நாயக்கரின் முழுப்பெயர் திருமலை சவுரி நாயுனு அய்யுலுகாரு என்பதாகும். திருமலை நாயக்கர் முதலில் தம்முடைய அண்ணனான முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சியில் சில ஆண்டுகள் சின்ன துரையாக இருந்து ஆட்சி புரிந்து வந்தார். முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் சந்ததியின்றி கி.பி.1623இல் மறைந்தார். வாரிசு ஏதும் இல்லாததால் அவரது உடன்பிறந்தவரான திருமலை நாயக்கர் ஆட்சியை ஏற்றார். திருமலை நாயக்கர் ஆட்சியை ஏற்றபோது அவருக்கு வயது 39 இருக்கும் என்பர்.
திருமலை நாயக்கரின் காலத்தில் மதுரைப் பெருநாடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் ஒரு பகுதி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரும் பரப்புடைய நாடாய் இருந்தது.
தலைநகரம் மாற்றம்
விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரையே மதுரை நாட்டின் தலைநகராய் இருந்தது. முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் கி.பி.1616இல் மதுரை நகரிலிருந்து தலைநகரைத் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். திருமலை நாயக்கரும் தம் தமையனாரைப் போலவே மதுரையில் முடிசூட்டிக் கொண்டு, திருச்சிராப்பள்ளியில் இருந்தே ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்து வந்தார்.
திருமலை நாயக்கரின் தமையனார் மதுரையைத் தலைநகராகக் கொள்ளாததற்குச் சில காரணங்கள் உள்ளன. மதுரையில் தக்க காவல் நிறைந்த அரண்கள் இல்லை. சோழநாட்டில் பாயும் காவிரி ஆறு போன்று நீர் பெருகி ஓடும் ஆறாக வைகை இல்லை. அடிக்கடி மதுரையில் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்தது. இக் காரணங்களால் தலைநகரைத் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார்.
கி.பி.1634இல் திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியில் அமைந்திருந்த தலைநகரை மதுரைக்கு மாற்றினார். ஏனென்றால் ஒரு சமயம் திருமலை நாயக்கருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டது. பலவகை மருந்துகளை உட்கொண்டும் நோய் தீரவில்லை. அச்சமயத்தில் மதுரையில் மீனாட்சியம்மன் திருக்கோயில் திருவிழா நடந்து கொண்டு இருந்தது. திருமலை நாயக்கர் அத்திருவிழாவைக் காண மதுரைக்குச் சென்று கொண்டிருந்தபோது, நோய் மிகுதியானபடியால் பயணத்தைத் தொடரமுடியாமல், வழியில் திண்டுக்கல்லில் தங்கினார். அன்று இரவு ஒரு சித்தர் அவருடைய கனவில் தோன்றி “அரசே! நீ மதுரையில் நிலையாகத் தங்கி, மீனாட்சி அம்மையாருக்கும், சொக்கநாதப் பெருமானுக்கும் வழிபாடும் திருவிழாவும் நடத்தி ஆட்சி புரிந்து வந்தால் இந்நோய் நீங்கும்” என்றார். உடனே திருமலை நாயக்கர் அவ்வாறு நீங்குமானால் ஐந்து லட்சம் பொன்னுக்குத் திருப்பணி திருவாபரணம் செய்து வைக்கிறேன் என்று நேர்ந்து கொண்டார். மறுநாள் காலையில் அந்நோய் அவரை விட்டு நீங்கிவிட்டது. பின்பு தலைநகரையும் மதுரைக்கு மாற்றினார். திருமலை நாயக்கர் தலைநகரைத் திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரைக்கு மாற்றியதற்குக் காரணமாக இக்கதை கூறப்படுகிறது.
திருமலை நாயக்கரின் போர்கள்
திருமலை நாயக்கர் ஆட்சிப் பீடத்தில் ஏறியதும் மதுரை நாட்டைப் பாதுகாக்க வேண்டியவற்றைச் செய்வதில் முற்பட்டு இரண்டு கோட்டைகளைக் கட்டினார். பின்பு சுமார் 20,000 வீரர்களைக் கொண்ட படையைத் திரட்டினார். திருமலை நாயக்கர் ஐந்து பெரும் போர்களை நடத்தினார்.
முதலாவதாக, முந்திய பகைமையாலும், செந்தமிழ் மதுரை நாட்டின் செழிப்பாலும் மைசூர் மன்னர் மதுரை மீது படையெடுத்தார். திருமலை நாயக்கர் அவரை எதிர்த்துப் போராட வேண்டியவரானார்.
இரண்டாவது, திருவாங்கூர் மன்னர் கேரளவர்மா என்பவர் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்டாததனால் அவர் மீது படையெடுத்துச் சென்று போர் புரியலானார்.
மூன்றாவது, விசயநகரப் பேரரசின் பிடியிலிருந்து விடுபட்டு, முழுவுரிமை மன்னராக விரும்பி, விசயநகரப் பேரரசை எதிர்க்க வேண்டிப் போர் தொடுத்தார்.
நான்காவது, இராமநாதபுரத்தில் அரசுரிமைக் கலகங்கள் ஏற்பட்ட காலத்தில் அவற்றை அடக்கி அமைதியை நிலைநிறுத்த இராமநாதபுரத்தை ஆண்டு வந்த சேதுபதியுடன் போர் செய்தார்.
ஐந்தாவதாக மைசூர் மன்னர் படைகள் மதுரை நாட்டைத் தாக்கி மதுரைக் குடிமக்களின் மூக்குகளை அறுத்து அவமானப்படுத்தியதால், இரண்டாம் முறை பழிக்குப் பழி வாங்க மைசூரின் மீது மூக்கறுப்புப் போரை நடத்தினார். திருமலை நாயக்கரின் படைவீரர்கள் மைசூர் நாட்டு எல்லைக்குள் புகுந்து, அங்குள்ள மக்களின் மூக்குகளை அறுத்து மூட்டையாகக் கட்டி மதுரைக்குக் கொண்டுவந்தனர்.
இவ்வாறு திருமலை நாயக்கர் தமது வாழ்நாள் முழுவதும் பெரும்போர் புரிந்துகொண்டே இருக்க வேண்டியவராய் இருந்ததுமின்றி, அப்போர்களுக்காகப் பெரும்பொருள் செலவு செய்ய வேண்டிய நிலையிலும் இருந்து வந்தார். இப்போர்களினால் மதுரை நாட்டு மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளானார்கள்.
கலைப் பணிகள்
திருமலை நாயக்கர் ஒரு தலைசிறந்த கலைப்பிரியர் ஆவார். மதுரையில் அவர் எழுப்பியுள்ள கட்டடங்கள் இன்றும் நின்று அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. திருமலை நாயக்கர் மகால் இவர் கட்டிய கட்டடங்களுள் புகழ்பெற்றதும், பெரியதுமாகும். ஷாஜகான் பெயர் சொல்லும் தாஜ்மகாலைப் போல, திருமலை நாயக்கரின் பெயர் சொல்லும் வகையில் மகால் அமைந்துள்ளது. இம்மகாலில் உள்ள அற்புதமான வேலைப்பாடு அமைந்த வளைவுகள், வட்டவடிவான மேற்கூரைகள், விரிந்து அகன்ற கூடங்கள், மிகப் பெரிய தூண்கள் காண்போர் கண்ணைப் பறிப்பனவாகும். ஒவ்வொரு தூணும் 40 அடி உயரமும், மூவர் அல்லது நால்வர் சேர்ந்தணைத்தாலும் அணைக்க முடியாத அளவு பருமனும் கொண்டு விளங்குவதை, மகாலின் முற்றத்தில் இன்றும் காணலாம்.
மேலும் திருமலை நாயக்கர் மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்கே உள்ள பெரிய கோபுரத்தின் எதிரே கட்டிய புதுமண்டபம், இராய கோபுரம் மற்றும் மதுரைக்குக் கிழக்கே உள்ள வண்டியூரில் அழகிய மையமண்டபத்துடன் உருவாக்கிய தெப்பக்குளம் ஆகியன அவருடைய புகழை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இராய கோபுரம் முற்றுப்பெறாத நிலையில் நின்றுவிட்டது. இதைத் திருமலை நாயக்கர் கட்டி முடித்திருப்பாரே என்றால், அதுவே மதுரைக் கோபுரங்களில் மிகவும் உயரமாக அமைந்திருக்கும் என்பர்.
பொதுநலப் பணிகள்
திருமலை நாயக்கர் அரிய பெரிய கட்டடங்களைக் கட்டுவதிலும், தெப்பக்குளம் அமைப்பதிலும் கவனம் செலுத்தியதோடு மட்டும் நிற்கவில்லை. பொதுநலத்திற்குரிய சாலைகள் அமைப்பதிலும், சத்திரங்கள் கட்டுவதிலும் அவர் நாட்டம் செலுத்தினார்.
திருமலை நாயக்கர் ஊட்டத்தூர் முதல் கன்னியாகுமரி வரையில் சாலை அமைக்கச் செய்து இடையிடையே பயணிகள் தங்குவதற்குச் சத்திரங்கள் பலவற்றைக் கட்டிவைத்தார். பின்பு அச்சத்திரங்களில் அன்னதானம் செய்யுமாறும் ஏற்பாடு செய்தார். இதனை மதுரைத் திருப்பணி மாலை என்னும் நூலில் உள்ள ஒரு செய்யுள் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
முனைவேல் விழிஅங் கயற்கண்ணி சந்நிதிமுன் மடத்துள்
அனைவோர்க்கும் அன்னமும் தோழியம் மாடன் அறைக்கும் அனு
தினம்மே தினியில் நடக்கும் படிக்(கு) ஈந்(து) இசையும் கொண்டான்
புனவேலி தந்தனன் கச்சித் திருமலை பூபதியே.
கோயில் நலப்பணிகள்
திருமலை நாயக்கர் கடவுள் பக்தி மிக்கவராய் இருந்ததால் மதுரைக் கோயில்களில் மட்டும் அன்றி, வேறு கோயில்களிலும் திருப்பணிகள் செய்ததாக அறிகிறோம்.
மதுரைக் கோயில் ஆட்சி, அபிடேக பண்டாரம் என்பவரிடம் இருந்தது. பண்டாரத்தின் ஆட்சியில் கோயில் சீர்கேடான நிலையில் கிடந்தது. வழிபாட்டு முறைகள் நன்றாக நடைபெறவில்லை. கோயில் வருவாய் முழுவதும் அப்பண்டாரத்தால் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதனைத் தெரிந்து கொண்ட திருமலை நாயக்கர் அக்கோயில் ஆட்சியைத் தாமே ஏற்றுக்கொண்டு நடத்தினார். மேலும் கோயிலில் அறக்கட்டளைகளை ஏற்படுத்தினார். கோயில் ஆட்சியில் ஒழுங்கு ஏற்பாடுகளைச் செய்தார். மாசி மாதத்தில் நடைபெறும் விழாவைச் சித்திரைக்கு மாற்றினார். பல விழாக்களை எடுத்து நடத்தினார். சான்று : பிட்டுக்கு மண் சுமந்தது போன்ற திருவிளையாடல் விழாக்கள், தெப்பத் திருவிழா போன்றவை.
4.2.3 சொக்கநாத நாயக்கர் (கி.பி.1659-1682)
திருமலை நாயக்கர் இறந்தவுடன் அவரது மகன் இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1659) ஆட்சிக்கு வந்தார். இவர் சுமார் நான்கு மாதங்களே ஆட்சி புரிந்து உயிர் நீத்தார். அவருக்குப் பின் அவருடைய மகன் சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார்.
சதி
சொக்கநாதர் ஆட்சியை ஏற்றபோது அவர் இளைஞராய் இருந்தார். இதனால் அங்குத் தளவாயாகப் பணிபுரிந்த இலிங்கம நாயக்கனும், பிரதானியாய் இருந்தவனும், இராயசமாகப் பணி செய்தவனும் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து சதித் திட்டம் வகுத்தனர்; பெயரளவில் சொக்கநாதரை அரசராக இருக்க வைத்துவிட்டு, அவரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்; மன்னருக்கு ஆதரவாக இருந்தவர்களைச் சிறையில் அடைத்தனர். அச்சமயத்தில் செஞ்சி நகரம் பீஜப்பூர் சுல்தான் ஆட்சியில் இருந்தது. பிரதானியும், இராயசமும் மன்னர் சொக்கநாதரின் இசைவைப் பெறாமல் செஞ்சிமீது போர் தொடுப்பதாகச் சொல்லிப் படையை அங்கு நிறுத்தி வைத்துவிட்டு, மதுரையில் உள்ள மக்களிடம் போர்ச் செலவிற்காகப் பெரும்பொருள் வேண்டும் என்று மக்களைத் துன்புறுத்திப் பணத்தை வசூலித்தனர். அதோடு மட்டுமல்லாமல் செஞ்சியைக் கண்காணித்து வந்த சகோசி என்பவரிடமிருந்து லஞ்சமாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டனர். இதுபோன்ற சதித் திட்டம் அரண்மனைப் பெண் ஒருத்தி மூலம் சொக்கநாத நாயக்கருக்குத் தெரியவந்தது. உடனடியாகச் சொக்கநாத நாயக்கர் இராயசத்தைக் கொன்று, பிரதானியைக் குருடாக்கினார். பின்பு சொக்கநாத நாயக்கர் தமக்கு ஆதரவாக இருந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு விரைவில் அதிகாரத்தைக் கைப்பற்றி முழு உரிமையோடு நாடாளத் தொடங்கினார்.
பஞ்சமும் துன்பமும்
சொக்கநாதரும் அவர் தந்தையார் முத்துவீரப்பரும் இசுலாமியப் படையெடுப்புகளை இடைவிடாது தடுத்து நிறுத்தினாலும் மதுரைப் பெருநாட்டு மக்களைப் படையெடுப்புகளிலிருந்து பாதுகாத்திருந்தாலும், அந்த இசுலாமியப் படையெடுப்புகளால் நாட்டு மக்களுக்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு எல்லையற்ற தொல்லைகள் உண்டாயின. இத்தொல்லைகளோடு பஞ்சம் வேறு வந்துவிட்டது. மக்கள் தங்களின் சொந்த ஊர்களை விட்டுவிட்டு, பற்பல ஊர்களுக்குச் சென்று குடியேறினார்கள். உதாரணமாக, திருச்சியில் இருந்தவர்கள் மதுரையில் குடிபுகுந்தார்கள். கிறிஸ்தவர்களுள் சிலர் நெடுந்தொலைவிலுள்ள சென்னை மயிலாப்பூரில் தஞ்சம் புகுந்தனர். தென்னகத்து நெற்களஞ்சியமான தஞ்சையிலும், திருச்சியிலுமே இப்பஞ்சம் மிகுதியாய் இருந்தது.
பஞ்சத்தால் நாட்டு மக்கள் உணவின்றி வாடிக் கொண்டிருக்கும்போது டச்சு வணிகர்கள் வறுமையில் வாடும் மக்களுக்கு உணவு, உடை இவைகளைக் கொடுத்து மகிழ்ச்சியூட்டி அவர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைகளாக விற்றனர்.
தஞ்சையில் பஞ்சம் இருந்தபோது அங்கு ஆண்டுவந்த மன்னர் இப்பஞ்சத்தைப் போக்குவதற்கு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் சொக்கநாதரோ பஞ்சத்தில் வாழும் மக்கள் எந்நாட்டவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, தம் நாட்டைச் சேர்ந்த திருச்சியில் வாழ்பவராக இருந்தாலும் சரி எல்லோருக்கும் உணவுகளை வழங்கினார். இருப்பினும் அவர் அளித்த உணவுப் பொருட்கள் போதுமானதாக இல்லை.
இப்பஞ்சம் மட்டும் அல்லாமல் காடுகளிலிருந்து வனவிலங்குகள் நாட்டில் புகுந்து அதிக சேதத்தை விளைவித்தன. பயிர்கள் அழிக்கப்படலாயின. மதுரையில் உள்ள மக்கள் அதிகமாக நோய்வாய்ப்பட்டு மடிந்தனர். இவ்வாறான பேரின்னல்களைச் சொக்கநாத நாயக்கர் சந்தித்தார்.
சொக்கநாதர் தாம் அரசாட்சியை ஏற்றதிலிருந்து பல துன்பங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். இவர் ஓயாது போர் புரியவேண்டியிருந்தது. இவர் இளைஞராக இருந்த காரணத்தினால் போரில் ஈடுபட்டார். ஒரு சமயம் வனமியான் என்பவன் தஞ்சையின் உதவியுடன் திருச்சிக்குப் படையெடுத்து வந்தான். இவ்வனமியான் பீஜப்பூர் சுல்தான் அடில்ஷாவிடம் படைத்தலைவனாக இருந்தான். இவன் திருச்சியின் மீது படையெடுத்து வந்தபோது அங்குள்ள பயிர்களை எரித்தான். மக்களைத் துன்புறுத்தினான். மக்கள் சொல்லொணாத் துயருக்கு உள்ளானார்கள். மன்னர் சொக்கநாதரிடம் பெரும்படையிருந்தாலும் தன் குடிமக்களுக்குத் தொல்லை நேராமல் இருக்கும் பொருட்டு, வனமியான் நாட்டை விட்டு அகலுவதற்காக அவனுக்குப் பெரும்பொருளைக் கொடுத்து அனுப்பினார்.
சொக்கநாத நாயக்கர் போர்கள்
சொக்கநாத நாயக்கர் பல போர்களில் ஈடுபட்டிருந்தாலும் அவருடைய வரலாற்றில் மூன்று முக்கியப் போர்களைக் கூறலாம். அவையாவன: தஞ்சை மீது போர் தொடுத்தது, சேதுபதியுடன் போர் புரிந்தது, தஞ்சை மன்னர் விசயராகவ நாயக்கர் பெண் கொடுக்க மறுத்தமைக்காகப் போர் புரிந்தது என்பன.
தஞ்சை மீது போர்
பெரும்பொருள் கொடுத்து வனமியானை ஒழித்த பின்பு சொக்கநாத நாயக்கர் வெற்றிச் செருக்குற்றுப் பழி வாங்கும் திட்டத்தில் இறங்கி அழிவுப் பாதையில் செல்ல ஆரம்பித்தார். தஞ்சை விசயராகவ நாயக்கர் முன்னர் நடந்த வனமியான் படையெடுப்பில் தமக்கு உதவி புரியாமல் எதிரிகளோடு சேர்ந்து கொண்டதற்காக அவரைப் பழி வாங்கக் கருதித் தஞ்சை மீது கி.பி.1664இல் படையெடுத்துச் சென்று வல்லத்துக் கோட்டையைக் கைப்பற்றினார். தஞ்சை நாயக்கர் வேறொன்றும் செய்யமுடியாது, சொக்கநாத நாயக்கர் சொற்படி நடக்க ஒப்புக்கொண்டார். ஆதலால், சொக்கநாத நாயக்கர் வல்லத்தில் தமது பாதுகாப்புப் படையை நிறுத்திவிட்டு மதுரைக்குத் திரும்பினார். ஆனால் சிறிது காலம் கழித்து விசயராகவ நாயக்கர் வல்லத்தை மீட்டுக் கொண்டார்.
சேதுபதியுடன் போர்
சொக்கநாதர் வல்லத்தைக் கைப்பற்றித் தஞ்சை மன்னரைப் பழிவாங்கியதோடு விடாமல், தம் படை வீரர்களின் போர் ஆர்வம் குறைந்து போவதற்குள், வனமியான் படையெடுப்பில் திருமலைச் சேதுபதி தமக்குப் படையுதவி செய்யாமல் இருந்ததற்காக அவர்மீது போர் தொடுத்தார். முதலில் சொக்கநாத நாயக்கர் சேதுபதி ஆண்டு வந்த மறவர் சீமையில் புகுந்து திருப்பத்தூர், புதுக்கோட்டை, மானாமதுரை, காளையார் கோயில் போன்ற இடங்களைக் கைப்பற்றினார். இதை அறிந்த சேதுபதி சிறிதும் மனம் கலங்கவில்லை. நேர்நின்று எதிர்த்துப் போர் புரிவதைக் கைவிட்டு, மறைந்து தாக்கும் மாயப் போரில் ஈடுபட்டார். இதனால் மதுரையிலிருந்து வந்த சொக்கநாத நாயக்கரின் போர்வீரர்கள் மடியலானார்கள். அச்சமயத்தில் மதுரைத் தலைநகரில் சமயச் சார்பான விழாவை முன்னிருந்து நடத்த வேண்டிய பொறுப்பு இருந்ததால் சொக்கநாத நாயக்கர் மறவர் நாட்டுப் போர்ப் பொறுப்பைத் தம் படைத் தலைவரிடம் ஒப்படைத்துவிட்டு மதுரைக்குத் திரும்பினார்.
பெண் கொடுக்க மறுத்தமைக்காகப் போர்
தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான கலம்பகத்தில் பெண் கொடுக்க மறுத்துப் போர் செய்ததாகக் கூறும் மறம் என்னும் துறை இருக்கக் காண்கிறோம்.
தஞ்சை மன்னர் விசயராகவ நாயக்கரிடம் தமக்குப் பெண் கொடுக்குமாறு சொக்கநாத நாயக்கர் கேட்க, அவர் மகளைக் கொடுக்க மறுத்த காரணத்தால் சொக்கநாதர் அத்தஞ்சை மன்னரோடு கி.பி.1673இல் போர் தொடுத்தார். விசயராகவ நாயக்கர் அரசர் வழிவந்தவர், ஆனால் சொக்கநாத நாயக்கரோ அரசாங்க ஊழியராக இருந்த விசுவநாத நாயக்கர் பரம்பரையில் வந்தவர். அரசப் பரம்பரை இல்லாத காரணத்தால் சொக்கநாத நாயக்கருக்கு விசயராகவ நாயக்கர் பெண் கொடுக்கவில்லை. பலமுறை சொக்கநாத நாயக்கர் விசயராகவ நாயக்கருக்குத் தூது அனுப்பியும் பெண் கொடுக்க மறுத்துவிட்டார். கடைசியில் விசயராகவ நாயக்கர் அரண்மனையில் அந்தப்புரத்தை வெடிவைத்து அழிக்குமாறு கட்டளையிட்டு விட்டுப் போர்புரிந்து தம் மகளுடன் உயிர் நீத்தார்.
4.2.4 மங்கம்மாள் (கி.பி. 1689-1706)
இவள் சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவாள். சொக்கநாத நாயக்கருக்கும் மங்கம்மாளுக்கும் பிறந்த மகன் மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் ஆவார். இவர் தன் தந்தை சொக்கநாத நாயக்கரின் மறைவுக்குப் பின் பட்டத்திற்கு வந்து ஏழு ஆண்டுகள் (கி.பி. 1682-1689) ஆட்சி புரிந்தார். இவர் தமது ஆட்சிக் காலத்தில், தம் தந்தையார் இழந்த மதுரை நாட்டின் பகுதிகளை மீட்டார். இவருடைய மகன் விசயரங்க சொக்கநாதன் ஆவார். இவர் பிறந்தபோது இவரது தந்தையார் உயிருடன் இல்லை. எனவே மூன்றாம் திங்களிலேயே குழந்தை விசயரங்க சொக்கநாதனுக்குப் பட்டம் சூட்டி, பாட்டியாகிய மங்கம்மாள் அக்குழந்தையின் சார்பாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தலானாள். கி.பி.1689இலிருந்து 1706வரையில் மங்கம்மாளின் சார்பாட்சி மதுரைப் பெருநாட்டில் மாண்புற நடைபெற்றது.
மங்கம்மாளின் ஆட்சி
ஔரங்கசீபு என்னும் மொகலாய அரசன் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டு வந்தான். தென்னகத்திலிருந்து அம்மன்னனை எதிர்த்துக் கொண்டிருந்த சிவாஜி என்ற மன்னர் மறைந்து விட்டார். இவரது மறைவின் காரணமாகத் தென்னகத்தில் ஔரங்கசீபின் ஆட்சி ஏற்படலாம் என எண்ணிப் பல அரசர்கள் அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். மைசூர் மன்னன் சிக்கதேவராயன் ஔரங்கசீபுடன் உடன்படிக்கை செய்து கொண்டான். தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய வேந்தன் ஷாஜி என்பவனும் ஔரங்கசீப்புக்குத் தலைவணங்கித் திறை செலுத்த முற்பட்டு விட்டான். இவற்றையெல்லாம் அறிந்து கொண்ட மங்கம்மாளும் காலநிலை, மாற்றான் வலிமை அறிந்து ஔரங்கசீப்புக்குத் திறைப் பணம் செலுத்தி மதுரையைத் தக்கவைத்துக் கொண்டாள்.
மங்கம்மாள் ஔரங்கசீப்புக்குத் திறை செலுத்தி வந்தாலும் அவர்களுடன் நட்புக் கொண்டு அவர்கள் உதவியால் பகைவர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்த மதுரை நாட்டுப் பகுதிகளை எளிதாக மீட்டுக் கொண்டாள். தஞ்சை மன்னன் மதுரை நாட்டுப் பகுதிகள் சிலவற்றை முன்பே கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்தான். இருப்பினும் இந்தத் தஞ்சை மன்னன் ஷாஜி ஔரங்கசீப்புக்குத் திறை செலுத்தி வந்த காரணத்தால் அவனோடு போர் புரிய முடியவில்லை. இருந்தபோதிலும் மொகலாயப் படைத்தலைவன் சுல்பிர்கான் கி.பி. 1697இல் தெற்கே வந்தபோது, மங்கம்மாள் அவனுக்கு விலையுயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்து அவனுடைய உதவியால் தஞ்சை மன்னன் பிடித்து வைத்திருந்த அப்பகுதிகளை மீட்டுக் கொண்டாள்.
எனினும் மங்கம்மாளுக்கு மராட்டியர் அடிக்கடி தொல்லைகள் தந்து வந்தனர். அவர்களுக்கு மங்கம்மாள் பல முறை பணம் கொடுத்து அவர்களுடைய தொல்லைகளுக்கு ஓர் எல்லை கட்டி வைத்தாள். மதுரையைக் காக்க மங்கம்மாள் இவ்வாறு எல்லாம் செய்ய வேண்டியதாயிற்று.
மங்கம்மாள் செய்த போர்கள்
மங்கம்மாள் மைசூர், தஞ்சை போன்ற இடங்களை ஆண்டு கொண்டிருந்த மன்னர்கள் மீது போர் தொடுத்தாள்; சேதுபதியுடன் போர் புரிந்தாள்; இரவிவர்மன் என்பவனைத் தண்டிக்க வேண்டியும் படையெடுப்பு நடத்தினாள்.
மைசூர் படையெடுப்பு
திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்ற வேண்டி மைசூர் மன்னன் சிக்கதேவராயன் தனது படைத்தலைவன் குமரய்யா என்பவனை அனுப்பி வைத்தான். அப்படைத் தலைவன் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டுக் கடும்போர் புரிந்து கொண்டிருந்தான். இச்சமயத்தில் மைசூரை மராட்டியர் தாக்க முற்பட்டனர். இதனை அறிந்த அப்படைத் தலைவன் குமரய்யா திருச்சிராப்பள்ளி முற்றுகையைக் கைவிட்டு, தன் நாட்டைக் காக்கும் பொருட்டுத் திரும்பினான். இந்தச் சந்தர்ப்பத்தை மங்கம்மாள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு எஞ்சி நின்ற மைசூர்ப் படையை அஞ்சாது தாக்கி வெற்றி பெற்றாள். இதனால் மைசூர்த் தொல்லை ஒழிந்தது.
தஞ்சைப் போர்
தஞ்சையை ஆண்டு வந்த ஷாஜி (கி.பி.1684-1712) என்பவன் கி.பி.1700இல் தனது படைத்தலைவன் மூலம் மதுரை நாட்டில் அடங்கிய திருச்சிப் பகுதியில் நுழைந்து நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தான். இதனை அறிந்த மங்கம்மாள் மொகலாயப் பேரரசின் உதவியின்றித் தனது படைத்தலைவன் தளவாய் நரசப்பய்யா என்பவனை அக்கொள்ளையைத் தடுக்கும்படி உத்தரவிட்டாள். (தளவாய்–படைத்தலைவன்.) எவ்வளவு செய்தும் அக்கொள்ளையைத் தடுக்க முடியாமல் போனதும், நரசப்பய்யா ஒருவருக்கும் தெரியாமல் கொள்ளிடத்தில் வெள்ளம் குறைந்தபோது தனது படைவீரர்களுடன் அக்கரைக்குச் சென்று தஞ்சை நாட்டில் உள்ள நகரங்களைக் கொள்ளையடிக்க முற்பட்டான். இதனை அறிந்து கொண்ட தஞ்சை நாட்டுப் படைவீரர்கள் செய்வது அறியாது திகைத்து நின்றனர். இந்நிலையில் தஞ்சை மன்னன் ஷாஜியின் முதல் அமைச்சனாகிய பாலோஜி என்பவன் நிறைய பொருள்களைத் தனது நாட்டின் பெரும் வியாபாரிகளிடமிருந்து வாங்கிக் கொண்டும், கஜானாவிலிருந்து எடுத்துக் கொண்டும் போய்க் கொடுத்து நரசப்பய்யாவிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இதன் மூலம் மங்கம்மாளுக்கும், தஞ்சைக்கும் நல்லுறவு ஏற்பட்டது.
இரவிவர்மன் மீது படையெடுப்பு
மங்கம்மாளின் சம காலத்தவன் இரவிவர்மன் (கி.பி.1684-1718). இவன் திருவாங்கூரை ஆண்டு வந்தான். இந்த இரவிவர்மன் திருமலை நாயக்கர் காலந்தொட்டு மதுரைக்குச் செலுத்தி வந்த திறைப்பணத்தை நிறுத்திவிட்டான். இதனையறிந்த மதுரைநாட்டு வீரர்கள் திருவாங்கூர் மீது படையெடுத்தனர். அவ்வமயம் இரவிவர்மனின் நாட்டு அமைச்சர்கள் எட்டுவீட்டுப் பிள்ளைமார்கள் ஆவர். இவர்கள் இரவிவர்மனுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர். இவர்களை ஒழிக்க வேண்டும் என்று எண்ணி இரவிவர்மன் சூழ்ச்சி செய்தான். மதுரைப் படையினரை அணுகி எட்டுவீட்டுப் பிள்ளைமார்களை நாட்டைவிட்டு ஒழித்துக் கட்டினால் திருவாங்கூரில் பாதியைத் தருவதாக ஒப்புக் கொண்டான். இதை நம்பிய மதுரைப்படையினர் எட்டுவீட்டுப் பிள்ளைமார்களைத் தாக்கி ஒழித்தனர். ஆனால் ஒப்பந்தப்படி இரவிவர்மன் நடந்து கொள்ளவில்லை. அதற்கு மாறாக மதுரைப் படையினரைத் தாக்கி அழிக்கலானான். மதுரைப் படையினர் தப்பி ஓடி இச்செய்தியை மங்கம்மாளிடம் கூறினார்கள். இதுகேட்ட மங்கம்மாள் பொங்கி எழுந்தாள். கி.பி.1697இல் தளவாய் நரசப்பய்யா தலைமையில் ஒரு பெரும்படையைத் திருவாங்கூருக்கு அனுப்பினாள். தளவாய் நரசப்பய்யா கடும்போர் நடத்தி வெற்றி பெற்றான். திருவாங்கூர் மன்னன் வெகுநாள் வரைக்கும் கட்டாமல் இருந்த திறைப்பணம் முழுவதையும் பெற்றுக் கொண்டு மதுரை திரும்பினான்.
சேதுபதியுடன் போர்
மறவர் சீமை எனப்படும் சேதுநாட்டை ஆண்டுவந்த சேதுபதி, மங்கம்மாளின் ஆட்சிக் காலத்தில் கி.பி.1698இல் மதுரையைக் கைப்பற்றிச் சில காலம் ஆண்டு வந்தான். மங்கம்மாளின் ஆணைக்கு ஏற்பத் தளவாய் நரசப்பய்யா, மதுரையின் மீது படையெடுத்துச் சென்று வென்று, சேதுபதியை அங்கிருந்து சேதுநாட்டிற்கு விரட்டியடித்தான். ஆனால் மங்கம்மாள் சேதுபதியை அப்படியே விட்டுவிடவில்லை. கி.பி.1702இல் சேதுநாட்டின் மீது படையெடுத்துச் செல்லுமாறு தளவாய் நரசப்பய்யாவுக்கு ஆணையிட்டாள். அப்போது தஞ்சை மன்னன் ஷாஜி மங்கம்மாளுடன் கொண்டிருந்த நட்புறவைக் கைவிட்டுச் சேதுபதியோடு சேர்ந்து கொண்டான். போரில் நரசப்பய்யா கொல்லப்பட்டான். நரசப்பய்யா தலைமையில் சென்ற மதுரைப் படையும் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் சேதுபதியை மங்கம்மாளால் அடக்க முடியவில்லை. அவள் இறக்கும் முன்னரே சேதுநாடு முழுவுரிமை நாடாயிற்று. (சேது நாடு என்பது தமிழ்நாட்டில் தற்போது உள்ள இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியிருந்த ஒரு நாடு ஆகும்.)
இவ்வாறாக மங்கம்மாள் பல போர்களைச் செய்து வெற்றியையும் தோல்வியையும் சந்தித்தாள்.
சௌராஷ்டிர சாசனம்
சௌராஷ்டிரர் என்பவர்கள் ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள். சௌராஷ்டிரர் என்னும் சொல்லுக்குக் கதிரவனை வழிபடுவோர் என்பது பொருள். இவர்களின் முன்னோர்கள் கத்தியவார் என்று சொல்லப்படும் சௌராஷ்டிரா நாட்டைச் சேர்ந்தவர்களாதலால் சௌராஷ்டிரர் எனப்படுவர். இவர்களின் முன்னோர்கள் கத்தியவாரில் பட்டுநூல் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் கி.பி.5ஆம் நூற்றாண்டில் குமார குப்தன் என்ற குப்த மன்னன் விருப்பப்படி மேற்கு மாளவ நாட்டிலுள்ள மந்தகோர் என்ற நகரத்தில் குடியேறினர். அங்குக் கிடைக்கும் கல்வெட்டுகள் சௌராஷ்டிரர்களைப் பட்டவாயகர் என்று குறிப்பிடுகின்றன. இதற்கு நேரான தமிழ் மொழிபெயர்ப்பு பட்டுநூல்காரர் என்பதாகும். இன்றும் மதுரை நகரில் வாழும் சௌராஷ்டிரரைப் பட்டுநூல்காரர் என்றே அழைக்கின்றனர்.
இவர்கள் கஜினி முகமது படையெடுப்பால் மந்தகோரை விட்டுத் தேவகிரியை அடைந்து அங்கு வசித்தார்கள். அந்தத் தேவகிரி மீது மாலிக்காபூர் படையெடுத்தபோது இவர்கள் விசயநகரத்தை அடைந்து வாழ்ந்து வந்தனர். பின்பு விசயநகரம் தலைக்கோட்டைப் போரில் இசுலாமியரால் அழிக்கப்பட்டபோது சௌராஷ்டிரர்கள் விசயநகரத்தை விட்டு மதுரையை நோக்கி வரலாயினர். திருமலை நாயக்கர் காலத்தில் அவருடைய ஜரிகை வேலைப்பாடமைந்த துணிகளை நெய்வதற்காக மதுரைக்கு வந்து குடியேறி, அவரது அரண்மனையைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்ந்து வரலானார்கள்.
மதுரையில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் பிராமணர்களுடைய ஆசாரங்கள் சிலவற்றை ( பூணூல் அணிதல் போன்றவற்றை) மேற்கொண்டனர். இதற்குப் பிராமண குலத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, மங்கம்மாள் ‘சௌராஷ்டிரர்கள் பிராமணரது ஆச்சாரங்களுக்கு உரியவர்களா அல்லரா’ என்பதைச் சாத்திர வல்லுநர்களைக் கூட்டி ஆராய்ந்து, அவர்கள் கூறிய முடிவுப்படி ‘சௌராஷ்டிரர்கள் பிராமணரது ஆச்சாரங்களுக்கு உரியவர்களே’ என்று தீர்மானம் செய்தாள். அதைக் கி.பி.1705இல் பனை ஓலையில் ஒரு சாசனமாக அரசாங்க முத்திரையுடன் எழுதிக் கொடுத்தாள். இதனையே சௌராஷ்டிர சாசனம் என்பர்.
மங்கம்மாளும் கிறிஸ்தவமும்
மதுரை நாட்டின் அண்டை நாடான மறவர் நாடும், தஞ்சையும் கிறிஸ்தவ சமயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இவ்வெதிர்ப்பின் காரணமாக ஜான்-டி-பிரிட்டோ என்ற பாதிரியாரின் உடல் கண்டதுண்டமாக வெட்டப்பட்டுக் கழுகுகளுக்கு இரையாக்கப்பட்டது. மேலும் மறவர் நாட்டில் கிறித்தவ சமய ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். பெர்னார்டு பாதிரியார் என்பவரின் பற்கள் உடைக்கப்பட்டன. அவரைப் பின்பற்றியவர்களுக்குச் சவுக்கடி கொடுக்கப்பட்டது. மறவர் நாட்டில் எதிர்ப்பு தெரிவித்தது போல் தஞ்சையிலும் பல எதிர்ப்புகள் கிளம்பின. கிறித்தவ சமயம் பரவினால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்று மங்கம்மாளுக்கு அண்டை நாட்டினர் கடிதம் எழுதினர். ஆனால் அதற்கு மாறாக மதுரையை ஆண்ட மங்கம்மாள் கிறித்தவ சமயத்தைப் போதித்தவர்களுக்கும், அச்சமயத்தைத் தழுவியர்களுக்கும் பாதுகாப்பளித்தாள்; அவர்கள் மீது பரிவு காட்டினாள். மறவர் நாட்டுச் சிறையில் அடைபட்டுச் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெல்லோ பாதிரியாரை விடுதலையடையும்படி செய்தாள்.
மங்கம்மாளும் இசுலாமும்
மங்கம்மாள் இசுலாமியரின் பள்ளிவாசல் மற்றும் தர்க்கா கட்டுவதற்கு நிலத்தைத் தானமாகக் கொடுத்ததைச் செப்பேட்டுச் சாசனங்கள் தெரிவிக்கின்றன. கி.பி.1692ஆம் ஆண்டுச் செப்புச் சாசனம் ஒன்று பள்ளிவாசலின் பாதுகாப்புக்காக, தன் பேரன் விசயரங்க சொக்கநாதர் பெயரால் நிலம் கொடுத்ததைக் கூறுகிறது. கி.பி.1701ஆம் ஆண்டுத் தெலுங்குச் சாசனம் ஒன்று, தர்க்காவுக்காகத் திருச்சிக்கு அருகில் இருக்கும் சில கிராமங்களை விட்டுக் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது.
மங்கம்மாள் செய்த அறச் செயல்கள்
மங்கம்மாள் நாட்டு மக்களுக்குச் செய்து கொடுத்த வசதிகளும், சமய வேறுபாடு இல்லாமல் எல்லாச் சமயத்தார்க்கும் செய்த அறங்களும் இன்றும் மதுரைவாழ் மக்களால் பாராட்டப்படுகின்றன. மங்கம்மாள் கோயிலைக் கட்டி, குளங்களை வெட்டிக் கால்வாய்களைச் செப்பனிட்டுச் சாலைகளையும், சோலைகளையும் அமைத்து, சத்திரங்களையும் சாவடிகளையும் கட்டி, வழிப்போக்கர்களுக்குத் தண்ணீர்ப் பந்தல்களையும் ஏற்படுத்தினாள். கி.பி.1701ஆம் ஆண்டுச் சாசனம் ஒன்று, மங்கம்மாள் அன்ன சத்திரங்களுக்கு நிலங்களைக் கொடுத்ததைக் கூறுகிறது. மதுரையில் புகைவண்டி சந்திப்பிற்கு எதிரே உள்ள மங்கம்மாள் சத்திரம் மங்கம்மாள் கட்டியதாகச் சொல்லப்படுகிறது.
4.2.5 மீனாட்சி அரசி (கி.பி. 1732-1736)
மங்கம்மாளுக்குப் பிறகு அவருடைய பேரன் விசயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். இவர் கி.பி.1706 முதல் 1732 வரை ஆட்சியை நடத்தி வந்தார். இவருடைய மனைவி மீனாட்சி அரசி ஆவாள். இவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லை. மீனாட்சி அரசி மங்கம்மாளைப் போல நாடாளும் ஆசை கொண்டாள். எனவே தன் கணவர் இறந்ததும் திருமலை நாயக்கரின் தம்பி குமாரமுத்துவின் வழிவந்த பங்காரு திருமலையின் மகனாகிய விசயகுமாரன் என்பவனை மகன்மை செய்துகொண்டு (சுவிகாரம் எடுத்துக்கொண்டு), கி.பி. 1732இல் மதுரை நாட்டின் ஆட்சியை மேற்கொண்டாள்.
மீனாட்சி அரசிக்கு நாடாளும் ஆசையிருந்தாலும், மங்கம்மாளுக்கு இருந்தது போன்ற ஆற்றல் இல்லை; அரசியல் அறிவும் இல்லை; உலக அனுபவமும் இல்லை. சூழ்ச்சிகளும் வீழ்ச்சிகளும் நிறைந்த அக்கால அரச வாழ்வுக்கு அவள் ஏற்றவளாக இல்லை. இதனால் அவள் அரசியல் வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது.
மீனாட்சி அரசி மகன்மை செய்து கொண்ட விசயகுமாரனின் தந்தை பங்காரு திருமலைக்கு மதுரை நாட்டு மன்னனாகும் ஆசை மனத்தில் புகுந்தது. தளவாய் வேங்கடாசாரியும் அவனது ஆசைக்கு ஆதரவு தந்தான். இருவரும் ஒன்று சேர்ந்து மீனாட்சி அரசியைக் கவிழ்க்க முயற்சி எடுத்தனர். முதலில் திருச்சிக் கோட்டைக்குள் நுழைந்து, மீனாட்சி அரசியை அரசபீடத்திலிருந்து அகற்றிவிட முயன்றனர். இம்முதல் முயற்சி கைகூடாமல் போயிற்று. எனினும் இருவரும் முயற்சியைக் கைவிடாமல் கலகம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆர்க்காட்டை நவாப் தோஸ்து அலிகான் என்பவன் ஆண்டு வந்தான். இவன் மதுரை நாட்டில் நடந்துவரும் கலகத்தை அறிந்தான். மதுரை நாட்டைக் கைப்பற்றிக் கப்பம் வாங்கி வரும்படி தன் மகன் சப்தர் அலிகான், மருமகன் சந்தாசாகிபு ஆகிய இருவர் தலைமையில் மதுரைக்குப் படையை அனுப்பினான். இப்படையெடுப்பு கி.பி.1734இல் நிகழ்ந்தது.
சந்தாசாகிபு
ஆர்க்காட்டு நவாப் படை திருச்சியை வந்து அடைந்தது. இதை அறிந்த பங்காரு திருமலை சப்தர் அலிகானை நேரில் கண்டு, திருச்சியைக் கைப்பற்றித் தனக்கு அளித்தால் முப்பது இலட்சம் ரூபாய் அளிப்பதாகக் கூறி, அவனோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான். சப்தர் அலிகான் அப்பணத்தை வாங்கிவருமாறு சந்தாசாகிபுவைப் படையுடன் நிறுத்திவிட்டு ஆர்க்காடு திரும்பினான்.
இதனைக் கேள்விப்பட்ட மீனாட்சி சந்தாசாகிபுவிடம் ஒரு கோடி ரூபாய் தருவதாகக் கூறி, பங்காருவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதற்குக் குரான் மீது சத்தியம் செய்து தருமாறும் வற்புறுத்தினாள். சந்தாசாகிபு குரான் மேல் கைவைத்துச் சத்தியம் செய்து கொடுத்தான். இதற்கிடையில் பங்காருவுடனும் மீனாட்சி சமாதானம் செய்து கொண்டாள். பங்காரு திண்டுக்கல் பகுதியை ஆட்சி செய்யலானான். எனவே சந்தாசாகிபு இனி இவர்களை மோதவிட்டு இலாபம் பெற இயலாது என அறிந்து ஆர்க்காடு திரும்பினான்.
ஆனால் சந்தாசாகிபு கி.பி.1736இல் மீண்டும் மதுரையைக் கைப்பற்றும் திட்டத்தோடு திருச்சிக்கு வந்தான். மீனாட்சியோடு சாதுர்யமாகப் பேசி ஆட்சிப் பொறுப்பையும், படைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். திருச்சிக் கோட்டையை வலுப்படுத்தினான். பங்காரு வசம் இருந்த திண்டுக்கல்லை ஒரு பெரும்படை ஒன்றை அனுப்பிக் கைப்பற்றினான். பங்காரு தன் மகன் விசயகுமாரனுடன் சிவகங்கை ஓடி ஒளிந்து கொண்டான். பின்பு மதுரையை முழுக்கத் தன் வசமாக்கிக் கொண்ட சந்தாசாகிபு திருச்சி சென்று மீனாட்சி அரசியைச் சிறை செய்தான். மீனாட்சிக்கு அப்போதுதான் சந்தாசாகிபுவின் வஞ்சகம் தெரிந்தது. வஞ்சகனால் கொலையுண்டு சாவதைவிட, நஞ்சுண்டு இறப்பதே மேல் என்றெண்ணி, நஞ்சு குடித்து உயிர் துறந்தாள். மீனாட்சி அரசியோடு மதுரை நாயக்கர் பரம்பரை மறைந்தது.
Sunday, February 14, 2021
கொங்கு வேளாளர் காணிப் பாடல்கள்
Sunday, November 24, 2013
காணிப் பாடல்கள்-காணி - ஒரு பார்வை(சமஸ்தானத்தில் காணி ஊர்கள்: காணி காமுண்ட (காணி காமிண்டன் [கவுண்டன்], காணியாள கவுண்டர்))
கொங்கு வேளாளர் சமுதாய வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிப்பது குலங்களே. குலங்களைக் கூட்டம், கோத்திரம் என்றும் அழைப்பர். மூன்றும் ஒரே பொருள் தருவன. குலக்காணி, குலதெய்வம், குலகுரு குலப்புலவர் எனக் குலத்தில் அடையாளத்தோடு அழைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.அறிமுகம் ஆகாத இரு கொங்கு நண்பர்கள் சந்திக்கும் போது அநேகாகக் கேட்கும் முதல் கேள்வி ‘நீங்க என்ன கூட்டமுங்க’ என்பதாகத்தான் இருக்கும்.
ஒரே கூட்டமாக இருந்தால் வயதிற்கேற்ப தந்தை-மகன்; அண்ணன்-தம்பி உறவு கொண்டாடுவதும், வேறு கூட்டமாக இருந்தால் மாமன், மைத்துணனாக உரிமை கொண்டாடுவதும் கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கேயுள்ள தனிப்பண்பாட்டு அடையாளமாகும்.திருமணத்திற்கு மணமக்களோ, மணமகனோ தேடும் போது முதலில் விசாரிப்பது குலத்தைப் பற்றியே. ஒரே குலத்தில் பெண் எடுப்பதும், கொடுப்பதும் கொங்கு வேளாளர் வழக்கம் இல்லை. அயல் குலத்திலேயே திருமண உறவு கொள்வர்.
பொருளடக்கம்
[மறை]- 1 காணி - ஆட்சி
- 2 குலங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- 3 இதுவரை 40 குலங்களுக்குக் காணிப்பாடல்கள் கிடைத்துள்ளன
- 3.1 அந்துவகுலம்
- 3.2 ஆந்தை குலம்
- 3.3 ஈஞ்சகுலம்
- 3.4 ஒழுக்ககுலம்
- 3.5 ஓதாள குலம்
- 3.6 கணக்கன்குலம்
- 3.7 கண்ணந்தை குலம்
- 3.8 கண்ணகுலம்
- 3.9 காடைகுலம்
- 3.10 காரிகுலம்
- 3.11 குழாயர் குலம்
- 3.12 கூறைகுலம்
- 3.13 சாத்தந்தை குலம்
- 3.14 செகன்குலம்
- 3.15 செங்கண்ணன்குலம்
- 3.16 செம்பகுலம்
- 3.17 செம்பூத்தன்குலம்
- 3.18 செல்லகுலம்
- 3.19 செவ்வாயர் குலம்
- 3.20 சேகர் குலம்
- 3.21 சேவடி குலம்
- 3.22 தனஞ்செயன் குலம்
- 3.23 தூரகுலம்
- 3.24 தேர்வேந்த குலம்(தேவேந்திர குலம்/ தேவாத்தை)
- 3.25 தோடைகுலம்
- 3.26 பண்ணை குலம்
- 3.27 பயிரகுலம்
- 3.28 பவள குலம்
- 3.29 பனங்காடை குலம்
- 3.30 பாண்டியன் குலம்
- 3.31 பில்ல குலம்
- 3.32 பூச குலம்
- 3.33 பெரிய குலம்
- 3.34 பெருங்குடி குலம்
- 3.35 பொருளந்தை குலம்
- 3.36 பொன்னகுலம்
- 3.37 மணியன்குலம்
- 3.38 விலையகுலம்
- 3.39 வெண்டுவன் குலம்
- 3.40 அந்துவகுலம்
காணி - ஆட்சி
ஒவ்வொரு குலங்களுக்கும் காணியூர்கள் வகுக்கப்பட்டன. இதனைப்பட்டயம் நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்கடி பன்னீராயிரம் என்றும் “குல கோத்திரங்கள் பிரித்து நாடு 24 நாட்டார் என்றும் இந்தக் குலங்களை ஊருக்கெல்லாம் குல தெய்வங்களும் காணி பூமிகளும் பிரித்து” என்று கூறுகிறது. ஒரு குலத்துக்குச் சொந்தமான உரிமையுடைய ஊர் காணி எனப்படும். காணி என்ற சொல்லுக்கு ஆட்சி, அனுபவிக்கும் உரிமை என்று பொருள். ஓர் ஊர்க் காணியுடையவர் காணியாளர் அல்லது காணியாளக்கவுண்டர் எனப்படவார்.ஒரு குலத்துக்குச் சொந்தமான உரிமையுடைய ஊர் காணி எனப்படும். காணி என்ற சொல்லுக்கு காணியாளர்கள் அந்த ஊரை நிர்வாகம் செய்வர். வரி வசூல் செய்து அரசு அதிகாரிகளுக்குச் செலுத்துவர். கோயில் முதல் உரிமை பெறுவர். எல்லாக் குடிமக்களையும் ஏவல் கொள்ளும் உரிமை அவர்கட்கு உண்டு. இதனை முகுந்த நல்லூர்ப் பட்டயம் பின்வருமாறு கூறுகிறது
“ஆண்ட சொர்னாதாயம் நஞ்சை புஞ்சை பட்டி தொட்டி மாவடை மரவடை புறகூலி பிறமுதல் அணை அச்சுக்கட்டு மக்க மகமை சுங்கம் சோதினை எல்லை கொல்லை இதுவெல்லாம் செல்லும் சதுர்பூமியை மரியாதைக்குள்ள விபூதி பிரசாதம் பச்சடம் பாக்கு இதுவெல்லாம் செல்லும் சதுர்பூமியை மரியாதைக்குள்ள விபூதி பிரசாதம் பச்சடம் பாக்கு வெத்திலை இதுவெல்லாம் முதலானது கொடுத்து” காணி பெற்றதைக் கூறுகிறது.
“கோயில் காணியுடைய சிவப்பிராமணர், தச்சாசார்யக் காணியுடைய ஆசாரியர், பாடவ்யக் காணியுடைய நாகபாசத்தார்” என்று காணிகள் பலவகைப்படும்.
குலங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
குலங்களின் எண்ணிக்கை எவ்வளவு? இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. முன்பு கொங்கு வேளாளர் குலங்கள் 60 என்றனர். கொங்கு காணியான பட்டயம் கொங்கு வேளாளர் குலங்கள் 124 என்று கூறுகிறது. .பரமயணப்புலவர் பாடிய ஓதாளர் அலகுமலைக் குறவஞ்சி 142 குலங்களைக் குறிக்கிறது. குலங்களின் பெயர்கள் தனியாகவும் தொகுத்தும் பல இடங்களில் கூறப்படுகிறன்றன. எ பெரும்புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக்கவுண்டர் தேடிக்கண்டுபிடித்த 96 கீர்த்திப்பாடல்.
எ சின்னத்தம்பி நாவலர் ஓதாளர் அலகுமலைக் குறவஞ்சி.
எ முதலிபாளையம் மகாவித்துவான் நாச்சிமுத்துப் புலவர் பாடிய வேளாளர் குலகும்மி,
எ தம்மரெட்டிபாளையம் நாச்சிமுத்துப் புலவர் வீட்டில் கிடைத்த கொடுமணல் இலக்கியங்கள் ஏடு.
எ கொங்கு வேளாளர்களின் கல்வெட்டு, செப்பேடு.
எ மூன்று கொங்குமண்டல சதகங்கள்.
அனைத்தையும் தொகுத்து அகரவரிசைப்படுத்தியதில் குலங்களின் எண்ணிக்கை 214 வருகிறது. 96 கீர்த்திப் பாடலில் சில குலங்களின் பெயர் ஐயத்திற்கு இடமாக இருந்தாலும் ஆவணத்திற்கு மதிப்பளித்து அவைகளும் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. செப்பேடு கல்வெட்டுக்களில் வேறு எங்கும் காணப்பெறாத பல குலப்பெயர்கள் வருகின்றன. அளிக்கப்பட்டுள்ள விளக்கப் பட்டியலில் அவைகளைக் காணலாம். சுமார் 30 குலங்களே ஆறு ஆவணங்களிலும் முழுமையாக இடம் பெற்றுள்ளன. குலங்களின் வீழ்ச்சி, மறைவு, தொடர்ச்சி ஆகியவைகளைப் பட்டியல் காட்டுகிறது.
குலங்களின் பெயர்களை
முனைவர் கிருஷ்ணசாமி
டி.எம்.காளியப்பா
புலவர். வி. இராமமூர்த்தி
நல் நடராசன்
புலவர் தே.ப.சின்னுசாமி
புலவர் இரா. வடிவேலனார்
கு. சேதுராமன்
முனைவர் திலகவதி பழனிசாமி
இரா. இரவிக்குமார்
கே.எஸ்.மோகனசுந்தரம்
கவிஞர் சிவதாசன்.
ஆகியோர் தொகுத்துக் கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.குலங்களின் பெயர்காண்பதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. அலகுமலைக் குறவஞ்சியைப் பாடுவித்தவள்ளல் ஓதாளர் குலத்தைச் சேர்ந்தவர். அந்நூலில்தான் குலப் பெயரைத் தொகுத்துக் கூறும் பாடல் வருகிறது.
“பொன்னார் ஓதாளர் பூசர் செம்பூதர்”
என்று அந்த நீண்ட அகவல தொடங்குகிறது. ஆய்வாளர் ஒருவர் பொன்னர் வந்தால் தம்பி சங்கர் வரவேண்டும் என்று நினைத்துள்ளார். அந்த முதல்வரியை, பொன்னர் சங்கர் பூசர் செம்பூதர் என்று மாற்றிப்பதிப்பித்தள்ளார். அப்பாடலைப் பாடுவித்த ஓதாள குலமே அப்பாடலில் இல்லை என்பதுதான் வியப்பான செய்தி.அலகுமலைக் குறவஞ்சி மூல நூலைப் பார்க்காமல் மேற்கண்ட நூலைப்பார்த்த பல ஆய்வாளர்கள் ஓதாளருக்குப் பதில் தம்பி சங்கர் என்பதைக் குலப் பெயராகச் சேர்த்துள்ளனர். ஒரவர் அப்பெயரை கல்வெட்டில் கண்டதாகவும் கூறுகிறார்.
ஒரு நூலில் பூச்சந்தை என்ற பெயர் பிழையாக நச்சந்தை என்று அச்சாகி விட மற்றொருவர் அதைப்பார்த்து நச்சந்தையை தனிக்குலமாக்கி நான்கு ஊர்களையும் காணியாகக் கொடுத்துக் காணிப்பாடலாகத் தனிப்பாடலும் பாடிவிட்டார். பொருளந்தை பொருள்தந்தான், பேரிழந்தான், பெரழந்தை, பிறளந்தை, முழுக்காதன் அனைத்தும் ஒரே குலம். கல்வெட்டும், செப்பேடம் முழுக்காது பொருளந்தை என்றே கூறுகிறது. ஒரே கூட்டத்தை நான்காகக் கொண்டுள்ளனர். காடை, காடான்,சாகாடை மூன்றும் ஒரே குலம்தான். இதனையும் மூன்றாகக் கொண்டு எழுதியுள்ளனர். வெண்டுவன் கூட்டத்தை வெண்டு உழவர் என்று டி.எம்.காளியப்பா கூறுவார். சாத்தந்தை, கண்ணந்தை, பொருளந்தை என்பதை சாத்தாந்தை, கண்ணாந்தை, பொருளாந்தை எனக்கொண்டு ஆந்தை குலத்தோட தொடர்புபடுத்துவர் சிலர். இக்குழப்பங்களைத் தெளிவுபடுத்தினால் தனி நூலாகவே அமையும். மாதிரிக்காக இரண்டொன்றை மட்டும் காட்டப்பட்டது.
இதுவரை 40 குலங்களுக்குக் காணிப்பாடல்கள் கிடைத்துள்ளன
இதுவரை 40 குலங்களுக்குக் காணிப்பாடல்கள் கிடைத்துள்ளன
இதுவரை 40 குலங்களுக்குக் காணிப்பாடல்கள் கிடைத்துள்ளன. அவை கொங்கு வேளாளப் பெருமக்களால் நன்கு ஆதரிக்கப்பட்ட புலவர்களால் பாடப்பட்டவை. அப்பாடல்களில் இந்தக் காணியூர்களைக் காணியாளர்கள் ஆட்சி செய்வதாகவே கூறப்படுகின்றன.
“அரசுபுரி காணியிவையே”“இவை பதியில் அரசுபுரியும்”“பொன்னின்மேழிக்கதிபர் பூமி பாலகரானவர் புகழ்பெருகு காணியி வையே”
என்ற பகுதிகள் அதனை விளக்கும். கொங்கு வேளாளர் காணி என்பது ஊரின் முழு உரிமையுடையதாகும்.இந்தக் காணிப்பாடல்கள் இரண்டு விதமான அமைப்பில் காணப்படுகின்றன. ஒன்று குலப்பெயரைக் கூறி அக்குலத்தார் காணியுரிமை கொண்ட ஊர்களைத் தொகுத்துக் கூறுவது. மற்றொன்று ஒரு குலத்தில் தோன்றிய ஒரு தலைவரைக் கூறி அவர் இக்குலத்தின் இந்த ஊர்களுக்கெல்லாம் காணியுரிமையுடையவர் என்று கூறுவது.
அந்துவகுலம்
காணி ஊர்கள்:
நாகம்பள்ளி, கீரனூர், ஆதியூர், மோடமங்கலம், அஞ்சூர் பாலமேடு, தூரம்பாடி,திருச்செங்கோடு, அந்தியூர், லக்காபுரம், தோட்டாணி, செவியூர், வாய்ப்பாடி, முடுதுறை,திருவாச்சி, கொடையூர், ஊஞ்சலூர், பூந்துறை, தெக்கலூர், சேவூர், குன்னத்தூர் ஆகியஇருபத்தொரு ஊர்கள்.
காணிப்பாடல்:
சீருலவு நாகநகர் கீரனூர் ஆதியூர் செப்பரிய மோடமங்கைதிகழ்அஞ்சி யூர்பாலை மேடுதூ ரம்பாடி சித்திரவீதிக் கோதையூர்ஏருலவு வடகரை நன்னாட்டில் அந்தியூர் இனியலக் காபுரமுடன்எழில்பரவு தோட்டாணி மேவுசெவி யூருடன் இனிதான வாய்ப்பாடியூர்காருலவு முடுதுறை நன்னகர் திருவாச்சி கனககொடை யூருமிகவும்காவேரி சூழுமேல் அரையநன் னாட்டினில் கதிபெருகும் ஊஞ்சலூரும்ஆரமணி மேடை திகழ் பூந்துறைசை தெக்கலூர் அதிகசே வூருகுன்றைஅந்துவ குலத்தில்வரு மோழைசெல்லப்பனே அடையவர்கள் பணிசிங்கமே!
அந்துவ குலத்தின் மற்றொரு காணிப்பாடல் குந்தாணி, குந்தாணி ஆகியஊர்களும் அந்துவகுலக் காணியூர்கள் என்று கூறுகிறது.
காணிப்பாடல் – 2:
நன்னிலம் புகழ்கின்ற நாகம்பள்ளி கீரனூர்நற்பால மேடு அதுவும்நளினமுள லக்கா புரத்துடன் திருவாச்சிநலகுந்தி ஆதியூரும்சென்னெல்வயல் சூழ்நிலை மோடமங் கலமதும்செழித்ததூ ரம்பாடியும்செயமருவு அஞ்சியூர்ப் பதியுடன் மிக்கவாம்செப்பமுள காணிபெற்றாய்சொன்னமொழி தவறாக அந்துவ குலத்தில்வருசுகசரண கெம்பீரனேசுந்தர மடந்தையர்கள் விரதமத ரூபனேசொற்பனுட மகமேருவேதன்மையது வாகவே நம்புலவன் என்று நீதாபரித் திடும்பவுளித்தாட்டீக சென்னியருள் செல்லமகி பாலனேதாடளர் பரிநகுலனே
காணி ஊர்கள்:
ஆந்தை குலம்
காணியூர்கள்
கொன்னையார், முத்தூர், பருத்தியூர், மாணிக்கம்பாளையம், தூரம்பாடி, எதிரனூர்,
பட்டணம், பாலைமேடு, சென்னிமலை, வயிரூசி, தோழூர், பிடாரியூர், திண்டமங்கலம்,
மருதுறை, திருவாச்சி, வள்ளியறச்சல், மோரூர், வெள்ளகோயில், விண்ணப்பள்ளி,
கிருதநல்லூர், காகம், கூத்தம்பூண்டி, குந்தாணி, சடையகுளம், ஒடுவங்குறிச்சி, மாம்பாடி,
முறங்கம், நல்லூர், புத்தூர், கரியாளங்குளம், பொன்பரப்பி பாலை நகர், சிறுக்கிணறு
கொற்றனூர் ஆகிய முப்பத்து நான்கு ஊர்கள்.
காணிப்பாடல்
பன்னுதமி ழாகரன் ஆந்தைகுல மரபாளர்
பதிகொன்னை யாருமுத்தூர்
பருத்தியூர் மாணிக்கம் தூரை நகர் எதிரனூர்
பட்டணம் பாலைமேடு
சென்னிகிரி வயிரூசி தோழூர் பிடாரியூர்
திண்டமங்க கலம்மருதுறை
திருவாச்சி வள்ளிநகர் மோரூரு வெள்ளக்கல்
சிறந்தவிண்ணப்பள்ளியும்
மன்னுபுகழ் மேவும் கிருத நல் லூர்காகம்
மருவுகூத் தம்பூண்டியும்
வளமான குந்தாணி சடையகுளம் மிகுசெல்ல
மானஓடு வங்குறிச்சி
துன்னுமாம் பாடி முறங்கநாச் சார்துகில்
தோறாத புத்தூருடன்
துய்யகரி யான்குளம் பொன்பரப்பி பாலைநகர்
சிறுக்கிணறு கொற்றனூரே.
வயிரூசிக்கு வடுகநகர் என்றும் தூரைக்கு காவிரை என்ற பாட வேறுபாடுகள் உள்ளன.
ஆந்தை குலத்தாரின் மற்றொரு காணிப்பாடல் பரமத்தி, காளமங்கலம், முருங்கத்தொழு,
கருவூர், முன்னூர், கீரனூர், தென்னமங்கலம், திருச்செங்கோடு, முளசி, செம்பியநல்லூர்,
தேனூர், ஊத்துக்குழி, ஊதியூர், ஆலத்தூர், முருங்கமங்கலம், காஞ்சிக் கோயில், ராயகுளம்,
மானூர், குளத்தூர், ஆதியூர், தூசியூர், அத்தனூர், ஆரியூர், ஆவணிப்பேரூர், ஊத்தலூர்,
அருமணநல்லூர், அனுமன்பள்ளி ஆகிய ஊர்களும் ஆந்தை குலத்தார் காணியூர்கள் என்று
கூறுகிறது.
காணிப்பாடல் – 2
நீதிசேர் வள்ளிநகர் பரமுத்தி வெள்ளக்கல்
நிகர்சடைய குளம்மருதுறை
நேர்பட்டணம்காள மங்கைமுருங் கைத்தொழு
நீளவண் பள்ளிகருவூர்.
தீதிலா முத்தனூர் முன்னூர் கீரனூர்
தென்னவன் மங்கைமோரூர்
திருவாச்சி யூர்புத்தூர் காகம்திண்டமங்கை
திருச்செங் கோடுதோழுர்
ஓதும் பிடாரியூர் பருத்தியூர் குந்தாணி
ஓடுவன் குறிச்சிமுளசை
உற்றசெம் பியநலூர் கதிரநல் லூர்எதிர
னூர்பாலை மேடுதேனூர்
போதில்ஊ ற்றுக்குழி மாவண்விண் ணப்பள்ளி
பொன்னூதி கிரிகொற்றையூர்
புகழ்ஆலத்தூர்முருங் கமங்கைமா ணிக்கநகர்
புதியகாஞ் சிக்கோயிலும்
கோதில் கூத்தம்பூண்டி வடுகநகர் ராயகுளம்
கொண்டபெயர் விளங்குமங்கை
குலவுகரி யான்குளம் காக்கைதூ ரம்பாடி
கூறும்மா னூர்குளத்தூர்
ஆதியூர் தூசியூர் அத்தனூர் ஆரியூர்
ஆவணிகொள் பேர்ஊற்றலூர்
அருமணநல் லூர்கொற்றை அனுமநகர் காணிகொளும்
ஆந்தைகுல வேளிர்குலமே.
ஈஞ்சகுலம்
காணிஊர்கள் :
பூந்துறை, வெள்ளோடு, பரஞ்சேர்வழி, பிடாரியூர், மண்ணறை, ஈங்கூர், பழனி, வாகரை,
பொருளூர் ஆகிய ஊர்கள் ஈஞ்சண்குலக் காணியூர்கள்.
காணிப்பாடல் :
பூந்துறையும் வெள்ளோடு புகழ்பரஞ் சேர்வழியும்
வாய்ந்த பிடாரியூர் மண்ணறையும் - சேர்ந்தபுகழ்
ஈஞ்சூர் பழனியூர் வாழ்கரையும் நீள்புலரி
ஈஞ்சகுலக் காணி இது.
மிகவும் சிதைந்த மற்றொரு காணிப்பாடல் தொட்டியம், பவித்திரம், முசிறி, வில்லிபுத்தூர்,
தெங்கூர், புகலூர், வடகரையாத்தூர், கொந்தளம், குன்னத்தூர், பரமத்தி, முத்தூர்,
பருத்திப்பள்ளி, நீலம்பூர், பாலைமேடு, குளித்தலை, இராசிபுரம், ஆவலூர், வீரப்பூர், மல்லூர்,
ஒடும்பறை, மோரூர், முளசி, ஈஞ்சம்பள்ளி, அஞ்சூர், தலையூர், நசியனூர், பெரியபுலியூர், புன்னம்,
மாவலூர், காவேரிபுரம், சாம்பள்ளி, வேம்பத்தி, சிறுவலூர், காஞ்சிக்கோயில், கவுந்தப்பாடி,
செவியூர், குளப்பலூர், கோசம், குருமந்தூர், இலத்தூர், நம்பியூர், நடுவச்சேரி, கருவலூர்,
துடியலூர், பேரூர், வெள்ளலூர், தொண்டாம்புத்தூர், கீரனூர், வேலூர், கலையமுத்தூர், மானூர்,
தாண்டிக்குடி, கொத்தயம், குத்திலுப்பை, தேவத்தூர், மயில்ரங்கம், அரவக்குறிச்சி, கூத்தம்பட்டி,
வெங்கரை, வெங்கம்பூர், கண்ணபுரம், மாம்புரை, காரைச்சேரி, பொன்னிவாடி, பில்லூர்,
இருடிகளத்தூர், மேச்சேரி, கம்பையனூர், விசயமங்கலம், காடையூர் ஆகிய ஊர்களையும்
காணியூராகக் குறிக்கிறது (எண்பத்தெட்டு ஊர்கள் என அப்பாடல் குறிக்கிறது).
ஒழுக்ககுலம்
காணியூர்கள்:
ஆத்தூர், ஊஞ்சலூர், சேந்தமங்கலம், கலசப்பாடி, திங்களூர், வெங்கரை,
தோட்டக்குறிச்சி, தேவநல்லூர், கோமங்கை, கண்ணபுரம், இளம்பிள்ளை, பெருங்களந்தை,
மருதூர், ஊத்துக்குழி, பொருளூர், கருஞ்சேரி, மங்கலம், கூத்தம்பூண்டி, கொடுமணல், காகம்,
நத்தம், குறிச்சி, கரசை ஆகிய ஊர்கள் ஒழுக்கர் குலக் காணியூர்கள்.
காணிப்பாடல்:
செங்கமல வாவிசூழ் ஆத்தூரு ஊஞ்சலூர்
சேமங்கை கலசபாடி
திங்களூர் வெங்கரை தோட்டக் குறிச்சியும்
தேவநல் லூர்கோமங்கை கல்வெட்டும்
துங்கமுயர் கண்ணபுர மாமிளம் பிள்ளையும்
துலங்கிய பெருங்களந்தை
தோராத மருதூரு ஊத்துக் குளிபுலரி
தோன்றுசிறு தாவளத்து
கொங்குலவு நகரம் குறுஞ்சேரி மங்கலம்
குலவுகூத் தம்பூண்டியும்
கூறரிய கொடுமணல் காகம்நத் தத்துடன்
குறிச்சிதென் கரசைமுதலாய்
மங்காத புகழ்பரவு மேழிப் பதாகையான்
வள்ளலே ஒழுக்ககுலனே
மன்னுலவு குவளையணி நல்லண நராதிபதி
வளருமூ தூருதானே.
ஓதாள குலம்
காணி ஊர்கள்:
பரஞ்சேர்வழி, பெருந்தொழு, மணியனூர், குண்டடம், வெள்ளகோயில், கண்ணபுரம்,
கண்டியன்கோயில், நிழலி, கொடுவாய், கொற்றமங்கலம், நல்லிகோயில், குரும்பலமாதேவி,
சித்துப்பூண்டி, கோலாரம், நல்லூர், வடகரை ஆத்தூர், தாழக்கரை ஆகிய ஊர்கள் ஓதாளர் குலக்
காணியூர்கள் ஆகும்.
முதல் காணிப்பாடல் :
ஆதிமுத லாம்பரஞ் சேர்வழி பெருந்தொழுவு
அழகுமணி யம்குன்றிடம்
அன்பான வெள்ளக்கல் கண்ணபுர மும்கண்டி
யன்கோயில் நிழலிகொடுவாய்
நீதியுள அரையநாடு நீள்கொற்ற மங்கலம்
நிலைமைசெறி நல்லிகோயில்
நேர்பெறு குரும்பைமா தேவிசித் துப்பூண்டி
நிகருகோ லாரம்நல்லூர்
தாதுலவு வடகரையில் ஆத்தூரு டன்பரிவு
தாழக்கரை தானுமாகும்
தமிழ்பெற்ற கீர்த்தியும் புகழதும் விளங்கினோர்
தரணியில் பெருமையுடையோர்
ஓதுபுகழ் சித்திரமே ழிக்கொடிக் கதிபனே
ஓதாள கோத்திரற்கு
உற்றநிலை யாம்என நற்றமிழ் விளங்கவே
உறுதியென வருகாணியே!
இரண்டாவது காணிப்பாடல்:
ஓதாள குலத்தாரின் மற்றொரு காணிப்பாடல் பழையனூர், காவிரிப்பூம்பட்டினம்,
தில்லைப்பாடி, மைசூர், கோட்டை, வடமலை, கார்பாடி, பாச்சலூர், நரையனூர், திடுமலூர்,
கும்பகோணம், உறையூர், அஞ்சுகோட்டை ஆகிய ஊர்களைக் காணியூராகக் குறிப்பிடுகிறது.
பழையனூர் காவிரிப் பூம்பட்டி னம்தில்லை
பாடியும் மைசூருடன்
நிலையான கோட்டையும் வடமலைக் கார்பாடி
நேர்பாச்ச லூர் நரையனூர்
நலமான திடுமலூர் கும்பகோணம் உறையூர்
நவில்அஞ்சு கோட்டைச்சேத்ரம்
உளமகிழ் நாற்பத்தெண் ணாயிரம் கோத்திரம்
ஓதாளர் குலக்காணியே.
கணக்கன்குலம்
காணியூர்கள் :
வெள்ளியணை, வஞ்சி (கரூர்) கொந்தளம், ஓமலூர், விண்ணப்பள்ளி, பவுதை,
தேவநல்லூர், பல்லாக்கோயில், முன்னூர், வள்ளியறச்சல், சுரர்பூண்டி, கீரனூர், மைவாடி கடத்தூர்
ஆகியவை கணக்கன் குலத்தார் காணியூர்கள்.
காணிப்பாடல் :
வெள்ளி யணைவஞ்சி கொந்தளம் ஓமலூர் மேவுவிண்ணப்
பள்ளி பவுதையும் தேவநல் லூர்பல்லாக் கோயில்முன்னூர்
வள்ளி யறச்சலூர் பூண்டியும் கீரனூர் மைவாடியும்
விள்ளும் கடத்தூர் கணக்க குலத்தோர் மேவியதே.
கண்ணந்தை குலம்
காணியூர்கள் :
காஞ்சிக்கோயில், பாப்பினி, கன்னிவாடி, காளமங்கலம், முளசி, காகம், கொளாநல்லி,
நசியனூர், மணியனூர், ஓடப்பள்ளி, தகடப்பாடி, கொன்னையாறு, கத்தாங்கண்ணி, மோரூர்,
ஆலத்தூப்பட்டணம், ஆனங்கூர் ஆகியவை கண்ணந்தை குலக்காணியூர்கள்.
காணிப்பாடல் :
வாசமிகு காஞ்சிபார்ப் பதிகன்னி வாடியும்
வளர்காள மங்கைமுளசி
வல்லபெரு காகம் குழாநல்லி நசையனூர்
மணியனூர் ஓடைதகடை
ஆசைமிகு கொன்னையார் பரவுகற் றான்காணி
அழகுபெறு மோரூர்புகழ்
ஆலத்தூர்ப் பட்டணம் பெருகும்ஆ னங்கூரு
ஆகமார்க் கண்டன்வயதாம்
தேசமிகு கொங்கினில் பெரியநா யகிஅருள்
செயகால மும்விளங்கத்
திவ்யநவ மணிசுனைகள் சடைவன்னி கொன்றையும்
தேங்குதா லம்சிறப்பாய்
நேசமிகு கண்ணந்தை குலஉசிதன் எனவந்த
நேமமிகு பச்சைபூபா
ஈன்றவர புத்திரன் செல்லப்ப பூபதி
நிலைமையென வருகாணியே!
கண்ணகுலம்
காணியூர்கள் :
கன்னிவாடி, காகம், கொளாநல்லி, காளமங்கலம், கிழாம்பாடி, நசியனூர்,
காஞ்சிக்கோயில், மோரூர், முளசி, ஏமப்பள்ளி, சம்பை, கத்தாங்கண்ணி, ஆலத்தூர்ப் பட்டணம்,
மணியனூர், ஓடப்பள்ளி, தகடப்பாடி, கொன்னையாறு, ஆனங்கூர், கூடல், பாதிரை ஆகியவை
கண்ணகுலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல் :
கன்னி வாடி காகம் குழாநிலை
காள மங்கை கிழாம்பாடி நசையனூர்
எண்ணுகாஞ் சிக்கோயில் மோரூர் முளசியும்
ஏவை சம்பையும் கற்றான் காணியும்
வண்ணம் மேவிய ஆலத்தூர்ப் பட்டணம்
மணிய னூருடன் ஓடை தகடையும்
கொன்னை யாறுடன் ஆனங் கூரதும்
கூடல் பாதிரை கண்ணகுல ஊர்களே!
கண்ணகுலக் கண்ணப்ப மன்றாடியார் புகழ்ச்சிப் பாடலில் காங்கயம் காணியூராகக்
குறிக்கப்பட்டுள்ளது.
காடைகுலம்
காணிஊர்கள் :
வள்ளியறச்சல், பாப்பினி, ஆத்தூர், கீரனூர், ஆதியூர், பூந்துறை, பெருந்தொழு,
பவித்திரம் வெள்ளியணை, கழனியூர், ஏழூர், தோழூர், கங்குப்பட்டி, முளையாம்பூண்டி, பில்லூர்,
வாழவந்தி, புன்னம், இளம்பிள்ளை, பட்டிலூர், சடையகுளம், மருதுறை ஆகி இருபத்தொரு
ஊர்கள் காடைகுலத்தாரின் காணியூர்களாகும்.
முதல் காணிப்பாடல் :
கன்னல்உயர் வள்ளிநகர் புகழ்பெறும் பார்ப்பதி
கருணைபெறும் ஆத்தூருடன்
கனகமுயர் கீரனூர் ஆதியூர் நன்னகர்
காரணர் உறைந்தபதியும்
நன்னர்சேர் பூந்துறை பெருந்தொழு பவித்திரம்
நன்மைசெறி வெள்ளியணையும்
நலமான கழனியூர் ஏழுரு தோழூரு
நாட்டிலுயர் கங்குப்பட்டி
இன்னிலத் திலகுமுளை யாம்பூண்டி புல்லூரு
இயல்வாழ வந்திபுன்னம்
இளம்பிள்ளை பட்டிலூர் சடையகுளம் மருதுறை
இவைபதியில் அரசுபுரியும்
கல்வெட்டும் காணிப்பாடலும் கல்வெட்டும் காணிப்பாடலும்
பொன்னின்மே ழிக்கதிபர் செங்குவளை அணிமார்பர்
பூமிபா லகரானவர்
போதமிகு காடைகுல மகராசர் வாழ்கின்ற
புகழ்பெருகு காணியிவையே!
காடை குலத்திற்கு வேறு மூன்று காணிப்பாடல்களும் உள்ளன. அவற்றில் தூசியூர்,
மாவிரட்டி, சேமந்தூர், வெண்ணந்தூர், மங்கலம், மோடமங்கலம், காகம், ஆலாம்பாடி, நசியனூர்,
வேம்பத்தி, கூடற்கரை, சிறுநல்லூர், பட்டாலி ஆகிய ஊர்களும் காடைகுலக் காணியூர்களாகக்
குறிக்கப்பெறுகின்றன.
இரண்டாம் காணிப்பாடல் :
கன்னல்உயர் பூந்துறை பெருந்தொழு பவுத்திரம்
கருணைபெறும் ஆத்தூருடன்
கனகமுயர் வெள்ளியணை ஆதியூர் நன்னகர்
காரணர் உறைந்தபதியும்
இன்னிலத் தினியமுளை யாம்பூண்டி புல்லூரு
இயல்வாழ வந்திபுன்னம்
இளம்பிள்ளை பட்டிலூர் சடையகுளம் மருதுறையும்
ஏழூரு தோழூருடன்
சென்னெல்செறி கழனியூர் கீரனூர் ஆண்மைமிகு
திறமையுள கங்குப்பட்டி
செல்வமிகு வள்ளிநகர் காடைகுல வள்ளல்கள்
தீர்க்கஅர சாட்சிபுரியும்
மன்னர்பணி யும்பெரிய நாயகி மனோன்மணியின்
மலரடியை மறவாதவர்
வன்னிபூ பதிஉதவு செல்லயன் காடைகுல
மகராசர் காணியிதுவே!
மூன்றாம் காணிப்பாடல் :
கன்னல்செறி தூசியூர் புல்லூர் தோழூர்
கனமான மாவிரட்டி
கதித்திடும் சேமந்தூர் வெண்ணந்தூர் மங்கலம்
கனிவாத்தூர் தேவர்தொகையும்
மன்னவர் புகழ்மோட மங்கலம் இவையுடன்
வளமைபெறும் பூந்துறையுமாம்
வண்மைசேர் காகம் ஆலாம்பாடி நசையனூர்
வளர் கூடக்கரையுமாம்.
சென்னெல்செறி புன்னம் பெருந்துறை வேம்பத்தி
சிறுநல் லூர்பட்டிலூர்
செயமான இளம்பிள்ளை கீரனூர் பட்டாலி
திறமான வள்ளிநகரும்
அன்னதரு வான பார்ப்பதி நகருக்கு
அதிபன்என வந்தசுமுகன்
அரசர்மனம் மகிழவரும் காடைகுல மேருவென
அவனிதனில் வருகாணியே!
நான்காம் காணிப்பாடல் :
நன்னெறிசேர் பூந்துறை பெருந்துறை பவுத்திரம்
நன்மைசெறி வெள்ளியணையும்
நலமான கழனியூர் ஏழூரு தோழூரு
நாட்டிலுயர் கங்குப்பட்டி
இன்னிலத் திலகுமுளை யாம்பூண்டி புல்லூரு
இயல்வாழ வந்திபுன்னம்
இளம்பள்ளி பட்டிலூர் இவையெலாம் அதிபதி
என்வந்த காடைகுலனே
பன்னுதமிழ் வாணருக்கு ஐந்தரு வேநீலி
பழிகழு வியநிருபனே
பார்மீதில் உன்புகழ்க்கு இணையாக ஒருவரை
பகருதற் கெளிதாகுமோ
மன்னர்புகழ் பூந்துறைசை நாடாளும் அவிநாசி
மைந்தனே மகராசனே
மதனவா ரணவாசி ராசனே எதிரிட்ட
மருமன்னி யார்கண்டனே!
காரிகுலம்
காணியூர்கள் :
கன்னிவாடி, காரையூர், கொந்தளம், எழுமாத்தூர், சேவூர், மேச்சேரி, பூங்குறிச்சி,
ஆனங்கூர், மண்மங்கலம், பட்டிலூர், வள்ளைக்குழி உஞ்சணை, புத்தூர் ஆகியவை காரிகுலக்
காணியூர்களாகும்.
காணிப்பாடல் :
நானிலம் மதிக்கஉயர் புகழ்கன்னி வாடியும்
நற்காரை யூர்கொந்தளம்
நறைமேவு பொழில்சூழும் எழுமாதை நகர்சேவூர்
நவிலுமேல்ச் சேரிநகரம்
மானிதி குலாவூபூங் குறிச்சிஆ னங்கூர்மண்
மங்கலம் பட்டிலூரும்
மஞ்சுலவு வள்ளைக் குழிப்பதியும் உஞ்சணையும்
வைப்பாண புத்தூருடன்
தானினிய காணிபெறு காரிகுல தூயனே
தமிழன்பர்க்கு அடிமைமுறியும்
தானுலவு கைத்தல மேழிப் பதாகையான்
தண்குவளை மாலைமார்பன்
தேனினிய மொழிமாதர் ஆசைபெறு மார்பனே
தேவேந்திர முத்தேந்திரனே
சேயநின் சொல்லரி வானநஞ் சயதீர
சீர்த்திமிஞ் சியயோகனே.
குழாயர் குலம்
காணியூர்கள் :
கண்ணபுரம், அவிநாசி, வைகாவூர் (நாடு), பூந்துறை (நாடு), கோயிலூர், விளங்கில்,
கண்டியன்கோயில், நிழலி, கலியாணி, ஆனையூர், குழாநிலை, குயப்பள்ளி, கருமாபுரம்,
புத்தரச்சல், கோயில்பாளையம், நிரையூர், கொற்றனூர் ஆகியவை குழாயகுலக்
காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
வளமிலகு நாகமலை சென்னிமலை கொல்லிமலை
வானிலங்கும் ஆனைமலைசேர்
மாசிலா அலகுமலை பன்றிமலை பொன்னூதி
மலைசெம்பொன் மலைகுடகுடன்
தலமிளகு காஞ்சிமா நதிவானி நள்ளாறு
தாழ்வில்ஆன் பொருநைலவணம்
தாங்குநதி காவேரி ஆளியாறுடன்பல
தருமதென் கரைநாடுகாண்
புளகண்ணை அவிநாசி வைகாவூர் நாடுகீழ்ப்
பூந்துறைசை மேல்ப்பூந்துறை
புகழ்கோயி லூர்விளங்கில் கண்டியன் கோயில்நிழலி
பொற்பழரும் கலியாணியூர்
களபமுள ஆனையூர் குழாநிலை குயப்பள்ளி
கருமாபுரம் புத்தரசை
கவசைநிரை யூர்கொற்றை மேவிய குழாயரைக்
காத்திடும் பெரியம்மனே.
கூறைகுலம்
காணியூர்கள் :
தலையநல்லூர் (சிவகிரி), மின்னாம்பள்ளி, சேமூர், மாதேவி, திடுமல், நசியனூர்,
வெள்ளியணை, மேச்சேரி, செகதாபுரம், கொத்தனூர், பாப்பினி, பிடாரியூர், பழனி,
திண்டமங்கலம், நவனி, அரசிலாமணி, பெரியபுலியூர், கிழாம்பாடி, கலங்காணி, வடுகநகர்,
வளவனூர் ஆகியவை கூறைகுலக்காணியூர்கள்.
முதல் காணிப்பாடல் :
செந்தமிழ் வளம்பெற்ற தலைசைமின் னாம்பள்ளி
சேமூரு மாதேவியும்
செய்திடுமல் நசையனூர் வெள்ளியணை மேச்சேரி
செகதாபுரம் கொத்தனூர்
அந்தமிகு பாப்பினி பிடாரியூர் பழனியும்
அருள்திண்ட மங்கைநவனி
அரசிலா மணிபெரிய புலிநகர் கிழாம்பாடி
அழகுள கலங்காணியும்
சந்தமிகு வடுகநகர் வளவனூர் இவையெலாம்
தழைக்கவே காணிபெற்றாய்
சதுரங்க சேனைசெறி அரையவள நாடனே
சம்பிரமிகு கூறைகுலனே
சந்தமிகு நாகீசர் அழகுதிரு வனிதையை
கரிவரதர் பொன்காளியை
கனவில்மற வாமல்உயர் காளிஅரு ளால்வந்த
காளியண மகராசனே!
இரண்டாம் காணிப்பாடல் :
திதமுலவு புகழ்கொண்ட தலசைமின் னாம்பள்ளி
சேமூரு நசையனூரும்
திடுமல்மா தேவிநகர் அரசிலா மணியுடன்
செயமான வளவனூரும்
பதியில்மிக் காகிய பிடாரியூர் வெள்ளியணை
பார்ப்பதியும் மேச்சேரியும்
பரிவான பெரியபுலி யூர்காணி யும்கொண்ட
பண்பான கூறைகுலனே
மதிமுக சவுந்தரிய ரணவீர பத்ரனே
வல்லாண்மை பெற்றசூரா
வளமான பொன்னிநதி வானிநதி காஞ்சியும்
மருவுபூந் துரைநாடனே
அதிமதன ரூபன் பழனியைத் துணைவன்எனும்
அன்பான வரராமனே
அறிவுடைய மால்துரைச் சின்னவன் புதல்வனே
அமராப திக்குரிசிலே.
சாத்தந்தை குலம்
காணியூர்கள் :
வெள்ளோடு, நாகம்பள்ளி, கூகலூர், விசயமங்கலம், குன்னத்தூர், அல்லாளபுரம்,
கூடலூர், உகாயனூர், காங்கயம், இலவமலை, பாலத்தொழு, கருவலாம்பாடி, காரைத்தொழு,
அத்தாணி, அல்லிபுரம், வல்லிபுரம் ஆகியவை சாத்தந்தை குலக் காணியூர்களாகும்.
புதுநகர் நல்லணவேள் காதல்:
வெள்ளோடை ஆம்பல்களும் மெய்நளின் மாமலர்சூழ்
வெள்ளோடை யும்பரவு வெள்ளோடை அம்பதியும்
நாகநகர் கூகலூர் நல்விசைய மங்கையுடன்
சேகரம்சேர் குன்றைநகர் செப்பும்அல் லாளபுரம்
கூடலூர் உகாயனூர் கொள்ளஅருள் காங்கயமும்
நீடுஇல வன்மலையும் நேயமிகும் பாலைநகர்
நற்கருவ லாம்பாடி நன்னகராம் காரைத்தொழு
சொற்குலவும் அத்தாணித் தொன்னகரும் நன்னயமாய்
அல்லிபுரத் துக்கதிக அதிகபுகழ் நிறைந்த
வல்லிபுரம் என்னும் வளநகரும் மேன்மைகொண்டோன்
இன்னும் பலகாணி இன்பமுட னேபடைத்த
கன்னன்நிகழ் சாத்தந்தை கனத்த புகழுடையான்!
காணியூர்கள் :
வெள்ளோடு, காங்கயம், விசயமங்கலம், காரத்தொழு, பாலத்தொழு, அல்லாபுரம்
கூறப்படுகின்றன.
முதல் காணிப்பாடல்:
கொங்கினில் கலியுகம் சகாத்தநா லாயிரத்து
இருநூற்றி ஏழுபத்தில்
குலோத்துங்க சோழனும் சேரனும் பாண்டியன்
குலமது வகுக்கும் நாளில்
மங்கைமணி சாத்தந்தை உலகில்மன் றாடிக்கு
வரிசைப்பட் டம்தரித்தே
மன்னுகர வருஷம்ஆ வணிதேதி பத்தினில்
வந்தசெவ் வாய்க்கிழமையில்
கங்கைகுலக் காலிங்க ராயவெள் ளோட்டுடன்
காங்கயம்விசய மங்கைநகரம்
காரைதொழு பாலத்தொழு அல்லாள புரமதில்
கடகம்எனும் யானைகட்டி
முன்கையில் சந்தனம் உரைத்ததே வணன்உதவு
முந்துபெத் தாமகீபன்
முனைபெற்ற திருமலை சரவணமன் றாடிக்கு
மூவர்முடி சூட்டினர்களே
இரண்டாம் காணிப்பாடல் :
காணியூர்களாக நாகம்பள்ளி, உகாயனூர் கூறப்படுகின்றன.
திசைபரவு கலியுகம் சகாத்தம்ரெண் டாயிரம்
சென்றநூற் றேழுக்குமேல்
தசமியும் ரேவதி வெள்ளிசுக்ல பட்சமதில்
செம்பொன்மா முடிசூட்டியே
மசச்சோழன் இம்முடிப் பாண்டியன் சேரனும்
மன்னர்கள் முன்பாகவே
வார்த்தையது தவறாமல் சாத்தந்தை நீயென்று
வளர்உலகில் மன்றாடியார்
விசையுற்ற நாகநகர் வெள்ளோடு காங்கயம்
வியன்காரைத் தொழுபாலையும்
வெற்றியுள உகாயனூர் அல்லாள புரமதனை
வேளமனு நீபடைத்தாய்
அசையாத யோகனாம் காலிங்கன் திருமலை
அன்புபெத் தாமகீபன்
அழகுபெறு திருமலை சரவண மன்றாடிக்கு
அதிகமுடி சூட்டினாரே.
செகன்குலம்
காணியூர்கள் :
கெட்டி செவியூர், அவிநாசி, சேவூர், வண்டியூர், மணக்கடவு ஆகிய காணியூர்களும்,
வடகொங்கு, நரையனூர் நாடு, சென்கரை நாடு ஆகியவற்றில் காணியூர்களும் உண்டு.
காணிப்பாடல் :
வட்டமிடு பரிநகுலன் கெட்டிசெவி யூரனே
வடகொங்கு நன்னாடனே
மருவுபுக் கொளியூரு அழகுசே வூரனே
வண்டியும் பதியூரனே
கொங்கு வேளாளர்
திட்டமுடன் வருகின்ற பொங்கலூர் நாடனே
தென்கரசை வளநாடனே
சித்தாறு காஞ்சிபுரம் வானிகா வேரியும்
செல்வனே புகழ்பெற்றவா
அட்டதிசை புகழவரு காட்டம்மை சின்னம்மை
அறிவுடைய முருகேசரும்
அரசுபுரி வஞ்சியில் பதிகள்துரை மக்கள்முன்
ஆஸ்தான மதுமெச்சவே
கட்டளைய தாகவரு மணக்கடவு எனதென்று
காணிக்கு மழுவெடுத்தாய்
கந்தனருள் செகன்குல தயிலன்அருள் தயவனே
கனயோக குணசீலனே!
செங்கண்ணன்குலம்
காணியூர்கள் :
சிற்றழுந்தூர், கடம்பங்குறிச்சி, சிராமலை, கண்ணபுரம், வையப்பமலை, நேரிமலை,
திருச்சிராப்பள்ளி, திருவெள்ளறை, சீரங்கம், சிவாயம், சிதம்பரம், குடுமியாமலை,
திருவொற்றியூர், திருக்கழுக்குன்றம், காங்கயம், கொடுமுடி, சிங்கநல்லூர், கொங்கூர்,
திருவானைக்காவல், சீர்காழி, கன்னாங்கோயில், விசயநகரம், முதலைநகர் ஆகியவை
செங்கண்ணகுலக் காணியூர்களாகும்.
முதல் காணிப்பாடல்:
திருவுற்ற சிற்றழுந் தூர்கடம் பங்குறிச்சி
சிராமலை கண்ணபுரமும்
செயமிகும் வையமலை நேரிமலை சீர்திருச்
சிராப்பள்ளி திருவெள்ளறை
தருவுற்ற சீரங்கம் சிவாயமலை சிதம்பரம்
தன்னுலவு குடுமிமலையும்
தருமதிரு வொற்றியூர் கழுக்குன்றம் காங்கயம்
தவமிகும் கொடுமுடியுடன்
மருவுற்ற சிங்கநல் லூருகொங் கூருடன்
வளர்திரு ஆனைக்காவல்
வளமிகுசீர் காழிகன் னாங்கோயில் விசயநகர்
வடிவுள்ள முதலைநகரும்
கல்வெட்டும் காணிப்பாடலும் கல்வெட்டும் காணிப்பாடலும்
அருளுற்ற சிவமலைக் குமரர்தாள் மறவாத
அன்புசெங் கண்ணகோத்திரன்
அமராப திப்பல்லவ ராயதுரை எந்நாளும்
அரசுபுரி காணியிவையே!
இரண்டாம் காணிப்பாடல் :
சிற்றழுந் தூரு கடம்பங் குறிச்சி சிதம்பரமும்
கற்றபொங் கற்சி ராமலை காங்கயம் கண்ணபுரம்
கொற்றம் கழுக்குன்றம் மேழிப் பதாகை குவளையணி
வெற்றியூர் செங்கண்ண கோத்திரத் தார்காணி விசையங்களே!
செம்பகுலம்
காணியூர்கள் :
பாசாறு, கருவூர், திருவழுந்தூர், பரஞ்சேர்வழி, பொங்கலூர் (நாடு), மணக்கடவு, நல்லூர்,
அவிநாசி, காஞ்சிக்கோயில், சத்தியமங்கலம், புலியூர், சம்பை, முசிறி, குளித்தலை, குந்தாணி
போன்ற ஊர்களும் குடகுப்பகுதியும் செம்பகுலத்தார் காணியூர்களாகும்.
காணிப்பாடல் :
பங்கயத் துளபணி சேருமலை மன்னனே
பண்ணைமே டாதிபதியே
பாசாறு கருகூர் திருவழுந் தூரனே
பரஞ்சைநக ராதிபதியே
பொங்கலூர் நாடனே மணக்கடவு வேந்தனே
புகழ்சேர்ந்த நல்லூரனே
புக்கொளி யூர்காஞ்சிக் கோயில்சத் திமங்கை
புலியூர் சம்பைதனிலே
இங்கிதம தாகவரும் செம்பகுல மன்னனே
இயல்முசிறி குளித்தலையனே
எங்கும்புகழ் செம்பகுலக் கங்கைகுலப் புண்ணியா
இரவலர்க்கு உதவுதருவே
கொங்கிலுயர் பொருநைநதி சித்தாறு காஞ்சியும்
குடகுகுந் தாணிஅதிபா
குழந்தைவே லப்பனருள் அமரா பிதிக்குரிசில்
குவளையந் தார்மார்பனே!
செம்பூத்தன்குலம்
காணியூர்கள்:
மாம்பறை, இரணபுரம், மண்டபத்தூர் அத்தனூர், வயிரூசி, குமரமங்கலம், அந்தியூர்,
இராம கூடல், காடனூர், காண்டகுலம் மாணிக்கம், வாகை, கீரம்பூர், தாராபுரம், தென்சேரி, விதரி
(அத்திபாளையம்), சேமூர், மொஞ்சனூர், கூடச்சேரி, கருமனூர், புல்லூர், சிவதை, வாழவந்தி,
உத்தமசோழபுரம், மாத்தூர், திண்டமங்கலம், வைகுந்தம், முடுதுறை, கொற்றனூர்
(சங்கராண்டம்பாளையம்) ஆகிய ஊர்கள் செம்பூத்த குலக் காணியூர்களாகும்.
முதல் காணிப்பாடல் :
மண்டலம் தன்னில்வளர் மாம்பறை இரணபுரம்
மண்டபத் தூர்அத்தனூர்
வயிரூசியும்குமர மங்கலமும் அந்தியூர்
வளம்பெருகு இராமகூடல்
வண்டமிழ்க் காடனூர் கண்டகுல மாணிக்கம்
வாகைகீ ரம்பூருமே
மன்னுதா ராபுரம் தென்சேரி விதரிநகர்
மானசே மூர்மொஞ்சனூர்
எண்டிசை விளங்குகூடச்சேரி கருமனூர்
இலகுபுல்லூர் சிவதையும்
இயல்வாழ வந்திபுகழ் உத்தமச் சோழ புரம்
எழிலான மாத்தூருடன்
திண்டமங் கலமும்வை குந்தமும் முடுதுறை
தென்கொற்றை நகரில்வாழும்
திருமலைச் செல்வனெனும் முதலிமகி பாலனே
செம்பூத்த குலதிலகனே!
ஒரு சுவடியில் அத்தனூர் என்பதற்குப் பதிலாக ஆரியூர் என்று எழுதப்பட்டுள்ளது.
மாத்தூருடன் என்பதற்குப் புத்தூருடன் என்ற பாடபேதம் உண்டு. செம்பூத்த குலத்திற்கு வேறு
இரண்டு காணிப்பாடல்கள் உள்ளன. அவற்றில் பிறசை, கருமாபுரம், மங்கலம், கொன்னையாறு,
வேட்டம்பாடி, திருவாரூர், தோழூர், தம்மபட்டி, தாளப்பதி, மின்னக்கல், சோலையூர், காழனூர்,
பிள்iiயாநத்தம், முருங்கத்தொழு, அயோத்தியாப் பட்டணம், தோகைநத்தம், வஞ்சி, நல்லூர்,
சீனாபுரம், ஆதியூர், வடுகநகர், லக்கம்பாடி, கொங்கணாபுரம், கன்னிவாடி, இரும்பை,
காதப்பள்ளி, வேலூர், நத்தம், வீசனம், தோகைநத்தம் ஆகிய ஊர்கள் செம்பூத்த குலத்தார்
காணியூர்களாகக் குறிக்கப் பெறுகின்றன. கல்வெட்டும் காணிப்பாடலும் கல்வெட்டும் காணிப்பாடலும்
இரண்டாம் காணிப்பாடல்:
மாவுற்ற கீரம்பூர் பிறசை மாபுரம்
மங்கலம் கொற்றைமொஞ்சை
மாநகர் கொன்னைவேட் டம்பாடி விதரிதிரு
வாரூரு உடும்பைசிவதை
காவுற்ற ஊதிநகர் தோழூரு தம்மநகர்
தாளபதி மின்னல்சோலை
காழனூர் பிள்ளையார் நத்தம்ஈ சன்முருங்
கைப்பெரும் தொழுவயோத்தி
பூவுற்ற தோகைநத் தம்கொங்கு வஞ்சிரண
புரம் நல்லூர் சீனம்ஆதி
புரம் வடுக நகர்லக் கம்பாடி கொங்கணா
புரம்சென்னெல் கன்னிநகரே
கூவம்உற் றிடுவாழ வந்திமுடு துறைவயிரூசி
கொல்லிசிற் றாறுபொருளை
கொற்றநகர் உற்றசெம் பூத்தகோத் திரர்காணி
கொண்டனர்கள் மிகவாழ்கவே.
மூன்றாம் காணிப்பாடல்:
சீர்மருவு கீரம்பூர் பிரசைவேட் டம்பாடி
தென்கொற்றை யூர்விதரியூர்
செய்யபுகழ் மின்னக்கல் இடும்பைகா தப்பள்ளி
செம்பைவே லூருநத்தம்
கார்மருவு சோலைசெறி பிள்ளையா நத்தமும்
கருமநகர் வீசனமதும்
கனமிகு முருங்கைப் பெருந்தொழு அயோத்தியும்
கல்விசேர தோகைநத்தம்
ஏர்மருவு கொங்குதா ராபுரம் மிக்கான
எழில்தரும தானநல்லூர்
இனியதென் கொல்லிமலை எண்பத்கெட் டூருக்கும்
இறைவனே செம்பூதனே
வார்அணியும் முலைமாதர் வேள்என மதிக்கவரு
மைந்தனாம் ஐந்தருவதாம்
வானவர்கள் புகழவரு நலகுமா ரேந்திரன்
மாற்றலர் மனத்தின்இடியே.
செல்லகுலம்
அஞ்சூர், அனுமன்பள்ளி, தலைநாடு, இடையாறை, தாராபுரம், ஈரோடு, இருப்புலி, பட்டிலூர்,
எழுமாத்தூர், கருங்கல்பாடி, வெஞ்சமாங்கூடல், கடம்பங்குறிச்சி, முட்டம், கொன்னையார், கச்சுப்பள்ளி, ஆனங்கூர், பருத்திப்பள்ளி, வண்டிநத்தம், குலவிளக்கு, அவிலூர், அறச்சலூர், வள்ளிஎறிச்சல், பவானி, வட்டூர், விளக்கேத்தி, ஆறுகொழு, கோக்கிளாய், மணப்பள்ளி, வெள்ளோடு ஆகிய ஊர்கள் செல்ல குலத்தார் காணியூர்களாகும்.
முதல் காணிப்பாடல்:
தண்டமிழ்க் கவிவாணர் புகழ்அஞ்சி அனுமாதை
தலையநாடு இடையாறையும்
தாரா புரத்துடன் ஈரோடு இலுப்பையும்
தருமமிகு பட்டிலூரும்
எண்டிசையில் எழுமாதை கருங்கல்லுப் பாடியும்
இயல்வெஞ்சை கடம்பம்முட்டம்
இன்பவழி கொன்னையார் கச்சுபளி ஆனங்கூர்
இனமிகும் பருத்திப்பள்ளி
வண்டிநத்தம் குலவிளக்கு அவிலூர் அறச்சலூர்
வள்ளிநகர் கூடுதுறையூர்
வட்டூர் விளக்கேத்தி ஆறுதொழு கோக்கிளாய்
மணப்பள்ளி வெள்ளோடையூர்
கொண்டதுரை யேகனக செல்லகுல மேருவே
கொற்றைஆனந்தன் உதவும்
கூறுமொழி பிசகாத சின்னய வசீரனே
குவலயம் புகழ்த்தாருவே!
செல்ல குலத்திற்கு வேறொரு காணிப்பாடல் உள்ளது. அதில் புகலூர், கருமனூர், கபிலை நகர் ஆகிய
ஊர்களும் செல்ல குலத்தார் காணியூர்களாகக் கூறப்பட்டுள்ளன.
இரண்டாம் காணிப்பாடல்:
அஞ்சையூர் எழுமாதை தலையநாடு இடையாறை
அனுமநகர் தாராபுரம்
ஆறுதொழு ஈரோடு இருப்புலி வெள்ளோடு
அறச்சலூர் பட்டிலூரும்
வெஞ்சநகர் கச்சிபளி வண்டிநத் தங்குல
விளக்கொடு விளக்கேத்தியும்
வெற்புகலி யூர்கொன்னை யாறுடன் பருத்திப்பளி
வெண்கரும னூரினுடனே
செஞ்சொல்புகழ் வள்ளிநக ரும்வண் டுரைசெய்
சீர்மணப் பள்ளியுடனே
தேங்குபுகழ் கோக்கிளாய் இன்ஆனங் கூரதும்
சீரான கபிலைநகரும்
நஞ்சைதிகழ் கின்றகருங் கல்பாடி முட்டம்
நற்கடம் பங்குறிச்சி
நாட்டிலுயர் செல்லகுல மகராசர் காணியொடு
நானிலம் தனில்வாழ்கவே.
செவ்வாயர் குலம்
வானிகூடலூர் (பவானி), மாதப்பநல்லூர், சிறுமுகை, தோடயம், வெள்ளகோயில், உப்பிடமங்கலம்,
செவளம்பூண்டி, பள்ளிமங்கலம், சத்தியமங்கலம், செங்கப்பள்ளி, ராசிபுரம், அஞ்சூர், ஏழூர், சேவூர், பழையனூர், மலையனூர், பருத்தியூர், சகரந்தி, தேவதாயம், கோட்டை, மணிநகர், கருவலூர், தகடப்பாடி, சோழனூர், வஞ்சி (கரூர்), கொங்கல்நகர், அரவக்குறிச்சி, தாந்தோணி, துங்காவி இவை செவ்வாயர் குலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
வல்லமை புகழ்பரவு செவ்வாயர் குலமருவு
வாணியங் கூடலுடனே
மாதப்ப நல்லூரும் சிறுமுகை தோடயம்
வாழ்வுசேர் வெள்ளகோயில்
நல்லஉப் பிடமங்கை வளமைசெவ ளாம்பூண்டி
நாணயப் பள்ளிமங்கை
நானில மதிக்கவரு சத்திசெங் கைப்பள்ளி
ராசிபுரம் அஞ்சிநகரும்
பல்லவஞ் சேர்கின்ற ஏழூரு சேவூரு
பழையனூர் மலையனூரும்
பருத்தியூர் சகரந்தை தேவதா யங்கோட்டை
பகர்கின்ற மணிநகருடன்
சொல்லரிய கருவலூர் மேவுதக டப்பாடி
சோழனூர் வஞ்சிநகரம்
சுகிர்தமிகு கொங்கல்நகர் அரவக் குறிச்சிதாந்
தோணிதூங் காவிதானே!
சேகர் குலம்
காஞ்சிக்கோயில், ஓமலூர், பனயம்பள்ளி, முத்தூர், மாம்பூண்டி, காரையூர், நீலம்பூர், மண்ணறை
ஆகியவை சேகர குலத்தார் காணியூர்கள்.
காணிப்பாடல்:
முதல்காஞ்சி ஓமலூர் முன்பனசை முத்தூர்
கதிர்செவ ளாம்பூண்டி காரை – மதிசேர்
வாகுபெறு நீலம்பூர் மண்ணறைதான் மன்னும்
சேகர்குலத் தோர்காணி செப்பு.
சேவடி குலம்
மோரூர், நசியனூர், முன்னூர், கிழாம்பாடி, பாரியூர், பட்டிலூர், காரூர், சிங்கநல்லூர், புத்தூர்,
கொங்கூர், இராயகுளம் ஆகியவை சேவடி குலக் காணியூர்கள்.
காணிப்பாடல்:
மோரூர் நசையனூர் முன்னூர் கிழாம்பாடி
பாரியூர் சோழனூர் பட்டிலூர் - காரூரும்
சிங்கநல்லூர் புத்தூர் சேவடிகுலத் தோரிருக்கும்
கொங்கூரு ராயர் குளம்
தனஞ்செயன் குலம்
வெள்ளகோயில், தென்னிலை, மொஞ்சனூர், சேலம், அத்தனூர், அலைவாய்மலை, தேங்குறிச்சி, குன்னத்தூர், கன்னிவாடி, சோமயநல்லூர், சேவூர், முஞ்சனூர் ஆகியவை தனஞ்செய குலக் காணியூர்கள்.
சீர்கொண்ட வெள்ளக்கல் தென்னிலை மொஞ்சனூர்
சேலம்உயர் அத்தனூரும்
திருவுலவு அலைவாய் மலையதும் சேர்ந்தபுகழ்
தேங்குறிச் சிப்பதியுடன்
கார்கொண்ட சோலைசெறி மேன்மைகுன் றாமல்வரு
கனகுன்றை கன்னிவாடி
கனகசோ மயநல்லூர் சேவூரு முஞ்சனூர்
கனமுறும் காணிபெற்றாய்
தார்கொண்ட குவளையந் தாமனே சோமனே
தனஞ்செய குலக்குரிசிலே
தயவுடன் செல்லாண்டி யுமைவீரக் குமாரிரு
தாளிணையை வணங்குதூயர்
வார்கொண்ட கொங்கையர் அனங்கவேள் தேவனே
வரபுத்ர னானசெல்வா
மகராச பதிசெல்ல வசீரகெம் பீரனே
வனசலட் சுமிவாசனே!
தூரகுலம்
காணியூர்கள்:
மானூர், வெங்கம்பூர், குமரமங்கலம், தும்பங்குறிச்சி, சீராப்பள்ளி, பாலமேடு, தூரம்பாடி, காங்கயம்,
பொன்குறிச்சி, முடக்குறிச்சி, கீரனூர், இடையாறை, முடுதுறை, பட்டிலூர், பாசூர், பழமங்கலம், கொடையூர், முசிறி, பழனி ஆகியவை தூரகுலக் காணியூர்கள்.
காணிப்பாடல்:
பங்கயத் திருவுலவு மானூரு வெங்கயம்
பதிகுமர மங்கையுடனே
பண்புதிகழ் தும்பங் குறிச்சி சீராப்பள்ளி
பாலைதூ ரம்பாடியும்
சிங்கநகர் வாழ்வுற்ற பொன்குறிச் சிக்கதிர்
சிறந்திடும் முடக்குறிச்சி
சீர்பெருகு கீரனூர் இடையாறை முடுதுறை
சிறந்திடும் பாட்லூரும்
கொங்குலவு சோலைசூழ் பாசியூர் பழமங்கை
கொடையூரு முசிறிதனையும்
குவலயத் தினில் அரசு புரிகின்ற தூர குல
கொற்றனூர் பழனிதனையம்
அங்கணுல கம்பரவு சோழீசர் சிவகாமி
அடியிணையை மறவாதவர்
அத்திரவிழி யார்மதனன் உத்தம குணாநிபுண
அத்தியண மகராசனே!
தேர்வேந்த குலம்(தேவேந்திர குலம்/ தேவாத்தை)
மண்டல மதிக்கவரு தென்னிலை ஈசான
மங்கைவேம் பத்திநகரும்
மண்ணறை பெருங்குறிச் சிப்பதி முறங்கமொடு
மங்கலம் கீரனூரும்
விண்டல மளாவுபுகழ் கொண்டதென் காகம்
விளக்கேத்தி ஆரியூரும்
மிக்கவே ளாம்பூண்டி மொஞ்சனூ ரிவையெலாம்
மிகஅரசு புரிநகுலனே
அண்டினம தாபரண தேவேந்திர குலதிலகன்
அதனில்வரு காராளனே
ஆவுடை மகாலிங்கர் உமையதிரு வல்லிதன்
அடியிணையை மறவாதவர்
செண்டுமுலை யார்மதன வேள்சின்னத் தம்பியருள்
சேயா உபயதூயா
தென்னவனை நிகரான குமாரசின் னயதீர
செகமண்ட லாதிபதியே!
தோடைகுலம்
காஞ்சிக்கோயில், பாப்பினி, கன்னிவாடி, காளமங்கலம், முளசி, கூத்தம்பூண்டி, காகம், கொளாநல்லி, நசியனூர், மணியனூர், கொன்னையார், கத்தாங்கண்ணி, ஓடப்பள்ளி, தகடப்பாடி, மோரூர், ஆலத்தூர்பட்டணம், ஆனங்கூர் ஆகியவை தோடைக்குலக் காணியூர்கள்.
முதல் காணிப்பாடல்:
திருவுலவு காஞ்சிபார்ப் பதிகன்னி வாடியும்
செயகாள மங்கைமுளசி
தேவகூத் தம்பூண்டி காகம் குழாநிலை
சேர்நசைய னூர்மணியனூர்
தருவுலவு கொன்னையார் மேவுகற் றான்காணி
தர்மமிகு ஓடைதகடை
தமிழ்பெற்ற மோரூரு ஆலத்தூர்ப் பட்டணம்
தங்கும் ஆனங்கூருடன்
அருளுலவு பச்சோடை நாதர்பெரி யம்மைதாள்
அனதினமும் மறவாதவர்
அன்புபெறு தோடைகுல சின்னய்ய நராதிபதி
அருள்செல்வ னேந்திரபூபன்
மருவுலவு சேனா பதிக்குரிசில் மைந்தனாம்
மன்னவன் குழந்தைவேலன்
மகராசன் எனவந்த மரபுளோர் அனைவர்க்கும்
வளமைபெற வருகாணியே!
இரண்டாம் காணிப்பாடல்:
கன்னி வாடி காகம் கொளாநல்லி
காள மங்கை புகழ்பெறும் பார்ப்பதி
எண்ணும்காஞ் சிக்கோயில் மோரூர் முளசியும்
ஏவை கற்றான் காணி நசையனூர்
வன்ன மேவிய ஆலத்தூர்ப் பட்டணம்
மணிய னூருடன் ஓடை தகடையும்
கொன்னை யாறுடன் கூடல் பாதிரை
கூறு தோடை கண்ணந்தை காணியே
பண்ணை குலம்
கூடலூர், கொல்லன்கோயில், சென்னிமலை, வயிரூசி, பழனி, கொடுவாய், இடையாறு, கீரனூர், வல்லிபுரம், வாணியம்பாடி, ஊஞ்சலூர், பூவாணி, கலியாணி, கண்டியன்கோயில், பெருச்சாணிசத்திரம், புன்னம், பவுத்திரம், கடத்தூர், நெடுங்கூர், தும்பங்குறிச்சி, அவிநாசி, கணியாம்பூண்டி, கொற்றமங்கலம், உறையூர் நடுவனேரி, பூவா நல்லூர் ஆகியவை பண்ணை குலக் காணியூர்களாகும்.
செகதலம் புகழ்வளர் கூடல்கொல் லங்கோயில்
சென்னிகிரி வயிரூசியும்
தென்பழனி கொடுவாயி இடையாறு கீரனூர்
திருவுலவு வல்லிபுரமும்
புகழ்பரவு வாணியம் பாடி தென் ஊஞ்சலூர்
பூவாணி கலியாணியும்
பொன்கண்டி யன்கோயில் பெருச்சாணி சத்திரம்
புன்னம்பவுத் திரம்கடத்தூர்
அகமகிழ் நெடுங்கூரு தும்பங் குறிச்சியும்
அதிகமிகு அவிநாசியும்
அழகுகணி யாம்பூண்டி கொற்றமங் கலமுடன்
அன்பான உறையூரதும்
பகர்நடுவ னேரியும் பூவாநல் லூருடன்
பண்பாக அரசுபுரியும்
பண்ணையங் குலதிலக சின்னயன் அருள்பழனி
பாக்கியனே யோக்கியதருவே!
பயிரகுலம்
காணியூர்கள்:
பவுத்திரம், வெள்ளியணை, காரையூர், ஆனூர், பரஞ்சேர்வழி, கூடலூர், வெள்ளோடு, கொன்னையாறு,
பவுத்திரம், வெள்ளியணை, காரையூர், ஆனூர், பரஞ்சேர்வழி, கூடலூர், வெள்ளோடு, கொன்னையாறு,
புள்ளாந்த்தம், திருமுக்கூடல், வயிரம்பள்ளி, கொடுமணல், பாலத்தொழு ஆகியவை பயிரன் குலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
மன்னு புகழ்கொண்ட மூவரசர் செங்கோல்
வழங்கிடும் நம்குடிவழி
வண்மைபெறு அந்நாளில் நற்குடிநாற் பத்தெண்ணாயிரம்
வகுப்புற்று வாழும் நாளில்
நன்னயம தாகிய பவுத்திரம் வெள்ளியணை
நற்காரை ஆனூரதும்
நலனைதிகழ் தென்பரஞ் சைப்பதியும் சேலமும்
நட்பான கூடலூரும்
தென்னுலவு வெள்ளோடு உயர்கொன்னை யாறுடன்
சேர்ந்தபுள் ளாநத்தமும்
செய்யதிரு முக்கூடல் அண்டவள நாட்டிலுயர்
செல்வவயி ரம்பள்ளியும்
கன்னல்வயல் சேர்கின்ற கொடுமணல் பாலத்தொழு
காணிபெற் றேவாழ்ந்திடும்
காராள ராமன்எனும் பயிரகுல மன்னவர்கள்
கதித்துவளர் காணியிவையே!
வெள்ளோடு பயிரகுலம் பெரியண்ணன் குறவஞ்சி:
பரஞ்சேர்வழி, பவுத்திரம், வெள்ளியணை, காரையூர், ஆனூர், கார்வளி, கூடலூர், கொன்னையாறு,
திருமுக்கூடல், அண்டநாடு, சேலம், வயிரம்பள்ளி, கொடுமணல், பாலத்தொழு, புள்ளாநத்தம், வெள்ளோடு.
திதிக்கும் பரஞ்சேர் பதிபவுத் திரமும்
பணிதிகழ் வெள்ளி யணைகாரை பூரும்
தெளிவா னூர்கார் வளிகூட லூரும்
வருகொன்னை யாறும் திருமுக் கூடலும்
அண்டவள நாடும் வண்டமிழ்ச் சேலம்
வயிரம் பள்ளியும் நயகொடு மணலும்
பாலத் தொழுவுடன் மேலுமை யான
புள்ளா நத்தமும் வெள்ளோ டுடனே
சீர்பெறக் காணி ஏர்பெறப் படைத்த
நாற்றிசை புகழும் கீர்த்தி விலாசன்
பவள குலம்
காணியூர்கள்:
கோகா நகரம் (?), கணபதி புத்துரர், கொழுமம், மருதுறை, சமத்துhர், பழனி, பழமங்கலம், வாகரை
கோகா நகரம் (?), கணபதி புத்துரர், கொழுமம், மருதுறை, சமத்துhர், பழனி, பழமங்கலம், வாகரை
ஆகிய ஊர்கள் பவளகுலக் காணியூர்கள் ஆகும்.
காணிப்பாடல்:
காணிப்பாடல்:
கோகா நகரங் கணபதி புத்துhர் கொழுமமுமடன்
போகா தழிஞ்சிமிஞ் சியஞ்சேர் மருதுறை பேர்சமத்துhர்
பாபா நகுத மிலம்பு பழனி பழமங்கையும்
வாகாம் பவள குலத்தோர் இருக்கின்ற வாகரையே.
பனங்காடை குலம்
காணியூர்கள்:
திங்களூர், எழுமாத்துhர், கொடுமணல், விசயமங்கலம், தென்நெல்லி, பட்டிலுhர், திருமுருகன்பூண்டி,
திங்களூர், எழுமாத்துhர், கொடுமணல், விசயமங்கலம், தென்நெல்லி, பட்டிலுhர், திருமுருகன்பூண்டி,
குந்தாணி, கச்சுப்பள்ளி, பவானி, மாத்துhர், கங்காபுரம், கொன்னையார், இடையாறு, மானுhர், நடுவச்சேரி, கருவலுhர், பிரமியம், குறுணி, கடுகநகர், கந்தடமாபுரி, குறிச்சி, ஆத்துhர், மருதுறை, கிழாங்குண்டல், சுந்தரபாண்டிய நல்லுhர், பஞ்சமாதேவி, ஊராட்சிக்கோட்டை, அனுமன்பள்ளி, மொடக்குறிச்சி, செங்கப்பள்ளி, ஆனங்கூர், கோனுhர், மாவிளம்பதி, திருவைநகர், பனயம்பள்ளி, வைத்தியூர் ஆகிய ஊர்கள் பனங்காடைகுலக்
முதல் காணிப்பாடல்:
திங்களூர் எழுமாதை கொடுமணல் விசயமங்கலம்,
தென்னெல்லி பட்டிலூரு
திருமுருகன் பூண்டிருந் தாணியும் கச்சிபளி
திருவானி கூடல்மாத்தூர்
கங்கைபுரி கொன்னையார் இடையாறு மானூர்க்
கதித்தநடு வச்சேரியும்
கருவலூர் பிரமியம் குறுணியும் கடுகநகர்
கந்தமா புரிகுறிச்சியும்
பொங்கமுடன் ஆத்தூரு மருதுறை கிழாங்குண்டல்
புகழ்சுந்தர பாண்டியநல்லூர்
பொருள்பஞ்ச மாதேவி ஊராட்சிக் கோட்டைஅனு
மன்பள்ளி மொடக்குறிச்சி
செங்கைஆ னங்கூரு கோனூரு மாவிளம்
திருவைநகர் பனயம்பள்ளி
சீர்பெருகு வைத்தியூர் பனங்கா டைகுலச்
செல்வமிகு காணியாமே!
இரண்டாம் காணிப்பாடல்:
வடிதமிழ் சிறந்தஎழு மாதைமா னூருமாம்
வானிகூ டல்பிரமியம்
மாவிளம் பதிகுறுணி குந்தாணி பட்டிலூர்
மருதுறை கிழாங்குண்டலும்
இடையாறு கச்சிபளி ஊராட்சிக் கோட்டையும்
இனியநடு வச்சேரியும்
இன்பமொடு வன்குறிச்சி ஆத்தூர்பஞ் சமாதேவி
ஏற்கைபெறும் ஆறைநகரும்
கடிகமழ்ந் தருள்திங்க ளூர்கொன்னை யாறுடன்
கனகபனை யம்பள்ளியும்
காசினி மதிக்கவரு கோனூரு தென்னெல்லி
கதித்தஆ னங்கூரதும்
கொடுமணல் அவிநாசி அரசுசெய் பனங்காடை
கோதிலக னாகவந்த
கொண்டலே தெய்வ சிகாமணி மகிழ்ந்தருள்
குமாரசின் னயராயனே!
கொடுமணல் கந்தசாமி காதல்
நல்லூர் கொடுமணலூர் நாரிஎழு மாதைநகர்
வெல்லும் மருதுறையும் விளங்குதிங்கள் மாநகரும்
கோனூர் மொடக்குறிச்சி குவலயத்தில் ஆத்தூரும்
மானூர் பிரமியமும் வானி கூடல்பதியும்
ஆனங்கூர் கொன்னை யாறும் பனயம்பள்ளி
சேனை நகர்க்கதிபன் செய்யபனங் காடைகுலன்
நலஞ்சிறந்த காராளன் நற்குவளை மார்பன்
குலம்மிகுந்த சோமன்எனும் குறுப்புவள நாடதிபன்.
பாண்டியன் குலம்
காணியூர்கள்:
மதுரை, நசியனூர், மானூர், பட்டாலி, கொடுமணல், வயிரூசி, காணாங்குளம், ஆத்தூர், கொங்கணாபுரம், பாலமேடு, கோட்டைக்கரை, புன்னம், மோகனூர், காவேரிபுரம், பவித்திரம், குடையூர், இடையாறு ஆகிய ஊர்கள் பாண்டியன் குலக் காணியூர்களாகும்.
மதுரை, நசியனூர், மானூர், பட்டாலி, கொடுமணல், வயிரூசி, காணாங்குளம், ஆத்தூர், கொங்கணாபுரம், பாலமேடு, கோட்டைக்கரை, புன்னம், மோகனூர், காவேரிபுரம், பவித்திரம், குடையூர், இடையாறு ஆகிய ஊர்கள் பாண்டியன் குலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
தண்டமிழ் துதிக்கவரு மதுரைதென் நசையனூர்
சாற்றுபுகழ் மானூருடன்
தயவுபெறு பட்டாலி கொடுமணல் வயிரூசி
தழைக்கின்ற காணாங்குளம்
மண்டலம் தனிலாத்தூர் கொங்கணா புரமுடன்
வளமுற்ற பாலைமேடு
வலுவலான கோட்டைக் கரைபுன்னம் முகவனூர்
வாய்த்தகா வேரிபுரமும்
கொண்டலுயழ் பவித்திரம் குடையூரு இடையாறு
கூறும்இவ் வூர்கள் எல்லாம்
கொற்றவர் மதிக்கஉயர் கம்பருக்கு அடிமைமுறி
ஈந்தகுண சாந்தமுடையோர்
எண்டிசை மதிக்கவே மேழிப் பதாகையுடன்
எழில்பெற்ற குவளைஉடையோர்
இந்திரன்என வந்துதவு பாண்டியகுல வேளார்
இனிதாக மிகவாழ்கவே!
இரண்டாம் காணிப்பாடல்
ஆண்டவ நல்லூர் மருதுறை செம்பத் தொழுஆரியூர்
தீண்டும் திடுமல் கொடுமணல் காஞ்சி திருவானியும்
பூண்டி பவுதையும் மானூர் மதுரை புதுவயலூர்
பாண்டியன் தன்குலத் தோர்கள் இருக்கும் பதியிவையே.
பில்ல குலம்
காணியூர்கள்:
வெங்கம்பூர், சத்தியமங்கலம், வள்ளியறச்சல், கொற்றனூர், வடகரைநாடு, சேமூர், கார்வளி, ராமதேவம், பழமங்கலம், அஞ்சூர், அனுமன்பள்ளி, குன்னமலை, இளம்பிள்ளை ஆகிய ஊர்கள் பில்லன் குலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
வளமைமிகு வெங்கைநகர் சத்திமங் கலத்துடன்
வள்ளிநகர் கொற்றையூரும்
வடகரைசை நாடுடன் சேமூரு கார்வளி
மாதுவளர் ராமதேவம்
பழமங்கை அஞ்சியூர் அனுமநக ரும்பரவு
பாருலகில் குன்னமலையும்
பாங்கான இளம்பிள்ளை இவையெலாம் உமதுபதி
பண்பான பில்லகுலனே
அழகுபெறு முருகர்தன் பொன்னடித் தாளிணையை
அனுதினமும் மறவாதவர்
அரிவையர் தமக்குநிகர் ஆனமன் மதசீல
ஆதுலர்கள் புகழ்தூயனே
களபமணி திண்புயச் செங்குவளை மார்பனே
கங்கைகுல நலதம்பிசொல்
கண்மணிய தாகவரு மோழைமக ராசனே
கல்வெட்டும் காணிப்பாடலும்
கருதலர்கள் பணிசிங்கமே!
பூச குலம்
காணியூர்கள்:
களத்தூர், கண்டியூர், சீர்காழி, பொருளூர், மூலனூர், கோமங்கை, குகைமண்குழி, வீராட்சிமங்கலம், அல்லாளபுரம், சர்க்கார்சாமக்குளம், காவிலிபாளையம், வாய்ப்பாடி, பல்லாக்கோயில், கருவலூர், மேட்டுக்கோயில், வதம்பச்சேரி, சிறுகளந்தை, சிந்திலுப்பை, ஆனூர் ஆகிய ஊர்கள் பூசன்குலக் காணியூர்கள் ஆகும்.
முதல் காணிப்பாடல்:
தேசமது புகழ்சோழ ழண்டலம் பாண்டியன்
திரள்பெற்ற மண்டலமுடன்
திகழ்சேர மண்டலம் கொங்குடன் மற்றுள்ள
தேசதே சங்கள்தன்னில்
பூசகுல ராசர்க்கு அரசுரிமை யாகவளர்
புரிகளத் தூர்கண்டியூர்
புனிதமிகு சீர்காழி புலரியூர் மூலனூர்
புகழ்சேரும் கோமங்கையும்
வாசமது புகழ்பெற்ற குகைமண்குழி வீராட்சி
மன்னும்அல் லாளபுரியும்
மருவுசாம் பக்குளம் காவிலி பாளையம்
வண்மைபுரி வாய்நகருடன்
வீசுபுகழ் பெற்றபல் லாக்கோயில் கருவலூர்
மேட்டுக் கோயில்மிகு
வதம்பச் சேரிசிறுக் களந்தைசிந் திலுப்பைப்பதி
விளங்கும் ஆனூருமாமே.
பூசகுலத்தாரின் மற்றொரு காணிப்பாடலில் கரூர், நசியனூர், பொருளூர், பாசூர், சம்பை, பழங்கரை ஆகிய
ஊர்களும் பூசன் குலத்தார் காணியூர்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.
பெரிய குலம்
காணியூர்கள்:
சிவாயம், இருகாலூர், முருங்கத்தொழு, காகம், விளக்கேத்தி பாலத்தொழு, கொற்றனூர், குகைமண்குழி, ஊதியூர், சோழமாதேவி, குறிச்சி, பொம்மநல்லூர் ஆகிய ஊர்கள் பெரிய குலத்தாரின் காணியூர்கள்.
குருபரன் ஆற்றுப்படை:
போற்றும் சிவாயம் புகல்இருகா லூருடனே
சாற்றரிய தண்முருங்கைத் தண்பதியும் மாற்றமுயர்
காகம் விளக்கேத்தி கற்புசித பாலத்தொழு
யோகமிகும் கொற்றை யூருடனே பாகமுடன்
நங்கைகுகை மண்குழியும் நல்வளஞ்சேர் பொன்னூதி
தங்கமுயர் ஊதியூர்த் தன்பதியும் இங்கிதம்சேர்
சோழமா தேவியுடன் சொற்குறிச்சி எந்நாளும்
வாழுபொம்ம நல்லூர் வளநகரை ஆளவே
காணியென வந்துதித்த காண்டீபப் பெரியகுலன்.
முதல் காணிப்பாடல்:
காகம் விளக்கேத்தி கனகொற்றை மாநகர்வி
பேசு முருங்கைப் பெருந்தொழுவாம் - கோகனக
சோழமா தேவி சிவாயம்இரு காலூரு
வாழ்பெரிய கோத்திரத்தார் மண்.
இரண்டாவது காணிப்பாடல்:
கொற்றை சிவாயம் முருங்கைப் பெருந்தொழு கோகனத்தார்
சுற்றிய காகம் விளக்கேத்தி பாலத் தொழுவுடனே
நற்றமிழ்ச் சோழமா தேவி இருகாலூர் நானிலத்தில்
நிற்றம் பெரிய குலத்தோர்கள் வாழ்கொங்கு மண்டலமே!
பெருங்குடி குலம்
காணியூர்கள்:
வாங்கல், காங்கயம், புலுசைக்கரை, மணித்திடல், கடத்தூர், களத்தூர், சேலம், புடாரமங்கலம், எருக்கிலைப்பாடி,
கார்குழல், வளவநல்லூர், எருமைப்பட்டி, பீடம்பள்ளி, செவியூர், ஆரியூர், முருங்கத்தொழு, குடந்தை, திருமலை, விருப்பாட்சி,
கொன்னையாறு, கண்டகுளம் ஆகிய ஊர்கள் பெருங்குடிகுலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
சீர்மேவு திருவளர் வாங்கல்நகர் காங்கயம்
செய்புலுசைக் கரைநகருமாம்
செயமணித் திடல்கடத் தூர்களத் தூருடன்
சேலம் புடாரமங்கை
போர்மேவு தென்எருக் கிலைப்பாடி கார்குழல்
பெயர்வளவ நல்லூருடன்
பெருமைஎரு மைப்பட்டி அதிகபீ டம்பள்ளி
பேரான செவியூருடன்
தார்மேவு ஆரியூர் தென்முருங் கைப்பதி
தழைத்திடும் குடந்தையுடனே
தரணிபுகழ்த் திருமலை விருப்பாட்சி குன்றையார்
தருகண்ட குளமதுடனே
கார்மேவு கைத்தலன் மால்பெருங் குடிமோழை
கண்மணிய தாகவந்த
கனநல குமரதென் பிள்ளைக் குமாரனுட
கனிவுமிகு காணியிவையே.
பொருளந்தை குலம்
காணியூர்கள்:
கருமாபுரம், காடையூர், பெருமாநல்லூர், ஆதியூர், விசயமங்கலம், அமுக்கயம், பரமத்தி, புன்னம், தோடயம், ஆலாம்பாடி, ஆறுதொழு, ஏழூர், கொங்கணாபுரம், கரூர், முத்தூர், மதுரை, உறையூர், நல்லூர், பிடாரியூர், மாம்பூண்டி, மாவுரட்டி, சேமூர், தலையூர், தூரம்பாடி, பிள்ளைக்கரை ஆகிய ஊர்கள் பொருளந்தைகுலக் காணியூர்களாகும்.
முதல் காணிப்பாடல்:
ஆதிகரு மாபுரம் காடையூர் தென்பழனை
ஆதியூர் விசையமங்கை
அமுக்கயம் பரமுத்தி புன்னமது தோடயம்
ஆலாம்பாடி ஆறைஏழூர்
சோதிபெறு கொங்கணா புரம்வஞ்சி முத்தூரும்
சொக்கர்வாழ் மதுரைஉறையூர்
சுயமான நல்லூர் பிடாரியூர் மாம்பூண்டி
சொற்பொருளின் மாவுரட்டி
தாதுலவு இட்டமா நேமிசே மூருடன்
தலையூர்நல் தூரம்பாடி
தமிழ்பெற்ற பிள்ளைக் கரைக்கதிப ராகவளர்
தார்பெற்ற கொங்குவேளிர்
நீதியுள மன்னவர்கள் சிற்றம் பலத்தாரை
நினைக்கின்ற கங்கைகுலமன்
நேர்மையது தவறாத பொருளந்தை கோத்திரர்
நிலமையுடன் வாழ்கநன்றே.
இரண்டாம் காணிப்பாடல்:
திருமரபு கருமா புரம்காடை யூர்மதுரை
திங்களூர் ஆதியூரும்
திறமான குன்னத்தூர் முத்தூர் அமுக்கயம்
செயவிசய மங்கைநகரம்
திருவுலவு புன்னம் பவுத்திரம் தோழூர்
தழைத்தஆ லாம்பாடியும்
தாதவிழ் மலர்ந்தபஞ் சூளைமா விரட்டியூர்
திருபெருமா நல்லூருடன்
கருதரிய பழனியும் பிடாரியூர் பரமுத்தி
காணியென வேபடைத்தாய்
கமலமலர் அருள்வதன சென்னியங் கிரிமுருகர்
கழலிணையை மறவாதவர்
பெருமைபெறு பொருளந்தை குலதிலகன் எனவந்த
விபேகன் குழந்தைவேலன்
பெற்றகண் மணியான பழனிமலை நாயகன்
பிரபுடிக மகராயனே
பொன்னகுலம்
காணியூர்கள்:
அலகுமலை, பொங்கலூர், அங்கித்தொழு, கருதாணி, ஊதியூர், பட்டிலூர் ஆகியவை பொன்னகுலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
அத்திமுக வனைஈன்ற கயிலாச நாதரும்
அலகுமலை வடிவேலரும்
அழகுதென் பொங்கலூர் உமைகண்டி யம்மனும்
அங்கிநகர் கருதாணியூர்
பத்தர்புகழ் பெரியபெரு மாள்மங்கை பலதேவர்
பாருலகில் அனைவரும்
புத்ரனைய பணிக்கடன் லட்சுமக் குமாரமால்
புனிதனே பூவுலகில்
வித்வசனர் கொண்டாடும் பொங்கலூர் நாடனே
வெற்பூதி யூர்ப்பட்டிலூர்
விதரணக் கொடிமன்னர் கண்டஉத் தண்டனே
வீரவிக்ர மாதித்தனே
புத்தரவின் மணிதந்த அவிநாசி பூபதிதன்
புண்ணிய தருணகுமரா
பொன்னகுல மேருவே பெரியண மகீபனே
பூதலம் பிரக்யாதியே!
மணியன்குலம்
காணியூர்கள்:
மோகனூர், ஆரியூர், மணியனூர், பாலமேடு, முத்தூர், திங்களூர், மருதுறை, கிடாரம், நிரவியூர், மணப்பள்ளி, அயிலூர், அலகுமலை, இறையனூர், கூடலூர், பெருச்சாணி, மானூர், காரையூர், வாணியம்பாடி, விசயமங்கலம், ஏழூர், காங்கயம், எண்ணமங்கலம், மணத்திடல், கடத்தூர், வடிவுடையமங்கலம், வேம்பத்தி, ஆத்தூர், அத்திப்பாளையம், சென்னிமலை, குடந்தை, வயிரூசி,
துர்க்கைநகர் ஆகிய ஊர்கள் மணியகுலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
சென்னெல்செறி முகவனூர் ஆரியூர் மணியனூர்
சீர்பாலை முத்தூருடன்
திங்களூர் மருதுறை கிடாரமது நிரவியூர்
திகழ்மணப் பள்ளிஅயிலூர்
புன்னநகர் அலகுமலை இறையனூர் கூடலூர்
புகழ்பெருச் சாணிமானூர்
பேரான காரையூர் வாணியம் பாடியும்
பெருவிசைய மங்கைஏழூர்
மன்னர்வளர் காங்கயம் எண்ணமங் கலமதும்
மணத்திடல் கடத்தூருடன்
வடிவுடைய மங்கையும் வேம்பநகர் ஆத்தூர்
வடிவுடைய விதரிதனையும்
சென்னிகிரி குடந்தைவஞ் சித்துர்க்கை நகரதும்
செம்மைபெறு மணியகுலனே
செம்பபூ பதியுதவு பெரியண மகீபனே
செகமண்ட வாதிபதியே!
விலையகுலம்
காணியூர்கள்:
தலையநல்லூர், மின்னாம்பள்ளி, ஆறுதொழு, மண்மங்கை, கீரனூர், ஆரியூர், குமரமங்கலம், வடுகநகர், பஞ்சமாதேவி,
சென்னிமலை, காக்கைவாடி, முட்டுக்கோட்டை, சேலம், சிராமணி, தாழம்பாடி, இடையாறு, கொன்னையார், காளமங்கை, சாத்தனூர்,
துத்திக்குளம், பொங்கலூர், எழுகரைநாடு ஆகியவை விலையகுலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
பெருகுபுக ழேகொண்ட தலைசைமின் னாம்பள்ளி
பேர்பெற்ற ஆறைநகரும்
பெருமைசெறி மண்மங்கை கீரனூர் ஆரியூர்
பின்குமர மங்கலமதும்
திருவுலவு வடுகநகர் பஞ்சமா தேவியும்
சென்னிகிரி காக்கைவாடி
தொன்முட்டுக் கோட்டைமிகு சேலம் சிராமணி
சேர்தாழை இடையாறையும்
தருவுலவு கொன்னையார் காளமங்கை சாத்தனூர்
தருமமிகு துத்திக்குளம்
தண்பொங்க லூருடன் அரையநன் னாடுமே
தழைக்கவே காணிபெற்றாய்
மருவிவரும் விலையகுல பெரிச்சிபூ பாலனின்
மைந்தனே ஐந்தாருவே
மருப்புயா சலன்ஆன பெரியண்ண தீரனே
மண்டலம் பிரக்யாதியே.
வெண்டுவன் குலம்
காணியூர்கள்:
கொங்கூர், கோனூர், கூடலூர், மண்மங்கை, ஆரியூர், கத்தாங்கண்ணி, வல்லிபுரம், மூலனூர், சித்தோடு, தோக்கவாடி, நல்லூர், தாழக்கரை, காடம்பாடி, கோப்புலிநத்தம், கொல்லங்கோயில் ஆகிய ஊர்கள் வெண்டுவன்குலக் காணியூர்களாகும்.
காணிப்பாடல்:
வைய்யாவூர் நாடுகொங் கூர்கோனூர் கூடலூர்
மண்மங்கை ஆரியூரும்
வீரசோழ நாட்டினில் கற்றாங் காணியும்
வல்லிபுரம் மூலனூரும்
மெய்யான சிற்றோடை வளர்தோக்க வாடியும்
மேன்மைபெறு நல்லூருடன்
விளங்குதா ழக்கரையும் மிக்ககா டாம்பாடி
வெற்றிகோப் புலிநத்தமும்
பொய்யாத வாய்மையுள கொலங்கோயில் இதுவெலாம்
புனிதமிகும் காணிபெற்றாய்
புகழ்பெற்ற வேண்டுவ குலதீப வசீரனே
போசனே புவிராசனே
மய்யார் விழிச்சியர்கள் மன்மதன் ராவுத்தன்
மைந்தன்என் வந்தநிருபா
மாதேவர் தான்தோன்றி அப்பாஅருள் பெற்றுமே
மாநிலம் தனில்வாழ்கவே!
காங்கய நாட்டுப் பதினான்கு ஊர்க் காணியாளர்கள்
திருமருவு சத்திசிவன் மலையிலுயர் முருகனைத்
தெய்வானை வள்ளியம்மையைச்
சிங்கநகர் அதனில்வளர் அதிகபெருங் குடியனை
செயவேந்தன் செங்கண்ணனைச்
சீர்கொண்ட தூரனைப் பதுமன்முதல் வாணியைத்
திவ்விய சாத்தந்தையை
தேவர்கள் புகழ்கின்ற வள்ளிநகர் வில்லியைச்
செல்லனை ஆந்தைகுலனை
செல்வவண் ணக்கனைப் பில்லனைக் கல்வியது
சேர்ந்துவளர் கண்ணந்தையை
சிங்காரப் பூந்தையைக் காடையைக் கணக்கனை
திகழ்பரவு நீருண்ணியை
சீரகத் தார்பரவு செட்டியைக் காடையூர்
சேடனைப் பொருளந்தையை
தருமமிகு பட்டாலி அதனில்வரு குருகுலன்
தாங்குசீர் கண்ணகுலனை
சம்பிரமிகு கீரனூர் தன்னில்வளர் ஆதியை
சவுரியம்மிகு அந்துவகுலனை
தன்னில்வளர் காடையைக் கீரனை விலையனை
தர்மமிகு தேவேந்திரனை
தரணிபுகழ்ப் பார்ப்பதித் தோடைகுல தீரனைத்
தந்திரமிகு கண்ணந்தையை
தனதான காடையைக் கீரன்வண் ணக்கனை
தருவாண னைச்செட்டியை
தமிழ்பரவு பரஞ்சைநகர் அதனில்வளர் பயிரனை
தனபதிச் செம்பகுலனை
தனமிகும் ஓதாளனை செட்டியை வண்ணக்கனை
தகைமையுறும் ஈஞ்சகுலனை
சவுரியமிகு விளியனை பிரமகுல மேருவை
தழைத்துவளர் ஆவகுலனை
அருமைதிகழ் ஆடையைக் கருணைதிகழ் வாணனை
அரசர்புகழ் தென்காரையூர்
அதனில்வளர் மணியனைக் கியாதியுள பயிரனை
அவனிமிசை மருதுறையில்வாழ்
அதிகபனஞ் காடையைப் புகழ்பெற்ற ஆந்தையை
அன்புமிகும் செங்குண்ணியை
அழகான முத்தூரில் வளர்கின்ற முத்தனை
அய்யமிகு மணியகுலனை
அகளங்க சேரனை தனபதிவெள் ளம்பனை
அனதான பொருளந்தையை
அமரர்தொழும் கண்ணையில் அதனில்வளர் செங்கண்ணன்
அரசுபுரி அதியனவனை
அளப்பரிய ஓதாள குலவனை நலமிகும்
ஆசைமிகும் மால்பதரியை
அன்புமிகும் கணவாள குலதீரர் தங்களை
அச்சமிகு மாவெட்டியை
அனைவர்புகழ் செட்டியை முத்தன்வண் ணக்கனை
அற்புதக் கடுந்தூளியை
மருவுவெள் ளையம்பதி யில்வளர் குருகுலனை
வாகுசேர் ஆந்தைகுலனை
வரிசைதிகழ் வில்லியைப் பிரபுடிக மாடையை
மதுரமொழி ஓதாளனை
வலிமையது சேர்கின்ற அதிகவண் ணக்கனை
மகராச யோகமருவும்
வாகுற்ற தனஞ்செயனை தேவதா னத்தில்உயர்
வண்மைசேர் ஆறுதொழுவில்
மருவுபொரு ளந்தையை முதலையம் பதியில்வளர்
மதியூகி செங்கண்ணனை
மன்னுபுகழ் ஆலநகர் தன்னிலே வளர்கின்ற
மாநிதிப் பொருளந்தையை
மற்றுமுள வர்த்தகர் முதலான செழுமையுடன்
வண்மைசேர் குடிகள்தம்மை
மதியிரவி காணளவு அதிகபுகழ் நலம்தந்து
வளம்பெறக் காக்கநன்றே!
Subscribe to:
Posts (Atom)