kongu pavalankatti vellala gounder

Thursday, April 22, 2021

சோழிய வேளாளர்கள் வரலாறு

சோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வெள்ளாளர் (Chozhia Vellalar) இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வெள்ளாளர் சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும். இவர்கள் பண்டைய சோழ தேசமான இன்றய டெல்டா பகுதி என்றழைக்கக் கூடிய தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டதால் சோழ வெள்ளாளர், சோழ வேளாளர், சோழிய வெள்ளாளர், சோழ நாட்டு வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும். சோழிய வெள்ளாளர் நிலவுடமையாளராக இருந்துள்ளனர். இவர்கள் கோவில் அறங்காவலர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் போன்ற பொறுப்புகளில் இன்றுவரை விளங்கி வருகின்றனர்.[1] சோழியர் / சோழிய வெள்ளாளர் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் தமிழ்நாடு மொழி(கள்) தமிழ் சமயங்கள் இந்து தோற்றம் வேளிர் என்ற பண்டய தமிழ் குடியில் தோன்றிய இவர்கள் வேள், வேளிர், வேளான், வேளாளர் என பெயர் பெற்றனர். வேளாளர் எனும் சொல்லே பேச்சி வழக்கில் மருவி வெள்ளாளர் ஆனது. சோழியம் எனப்படும் சோழ நாட்டை பூர்வீகமாக கொண்டதால் சோழிய வெள்ளாளர் ஆனார்கள். வரலாறு இவர்கள் பொதுவாக சோழ நாட்டின் வேளாண்குடிகளாகவும், தற்காலிக போர்குடிகளாகவும், பெரும் நிலவுடமையாளர்களாகவும், சிற்றரசர்களாகவும் இருந்துள்ளார்கள். சைவ சமயத்தை சேர்ந்த இவர்கள் சோழர்களின் ஆட்சி காலத்திலிருந்தே மேன்மை நிலையை அடைந்திருந்தனர். சோழிய வேளாளர்கள் சோழர்களின் அமைச்சர்கள், படைத்தளபதிகள், அரசு அதிகாரிகள், ஊர் தலைவர்கள் போன்ற உயரிய பதவிகளில் இருந்து அவர்களின் ஆட்சிக்கு பெரும்பங்காற்றியதை கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளின் மூலம் அறிய முடிகிறது. கொடும்பாளூர் வேளிர்களின் கல்வெட்டுக்கள் மற்றும் கரிகாலச் சோழனின் முடிசூட்டும் கல்வெட்டுகளின் வாயிலாக இவர்கள் சோழர்களுடன் மண உறவு கொண்டிருந்ததை அறிய முடிகிறது. திரு. நீலகண்ட சாஸ்திரிகளின் சோழர் வரலாறு என்ற நூலில் இவர்களைப் பற்றிய செய்திகள் மற்றும் வரலாற்று குறிப்புகள் அதிகமாக காணப்படுகிறது. கூட்டம்/கிளை சோழிய வெள்ளாளருள் கருப்புடையான் மருதூருடையான் காருடையார் குளத்துடையார் மாயனுடையார் வாங்காருடையார் தென்னயமுடையார் சாத்துக்குடையார் கூடலுடையார் ஆதிக்கமுடையார் காங்கா கோத்திமுடையார் சுரைக்குடையான் ஆணைபாக்கமுடையான் பாக்கமுடையான் கல்லூடையான் மருதஞ்சேரியுடையான் போன்ற 64 கூட்டங்கள் அல்லது கிளைகள் இருப்பதாக சோழ மண்டல சதகம் சொல்கின்றது. புலம்பெயர்வு தொடக்க காலத்தில் சோழிய வெள்ளாளர்கள் தமிழ்நாட்டின், சோழ மண்டலமான கிழக்கு மாவட்டங்களில் இருந்தார்கள்.[3] இவர்களில் சிலர் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அரசு பணி மற்றும் தொழில் காரணமாக திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து, தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் குடிபெயர்ந்தனர். மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் இரத்தினகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள அய்யர்மலையைச் சுற்றியுள்ள 84 ஊர்களில் வாழும் சோழிய வெள்ளாளர்கள் தங்களை மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். குலப்பட்டம் மற்றும் குலதெய்வ வழிபாடு பிள்ளை மற்றும் வேளாளர் என்ற குலப்பட்டத்தினை தங்கள் பெயர்களுக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள். சோழிய வேளாளர்கள் தங்கள் குலதெய்வமாக அங்காளம்மன், மாரியம்மன், பேச்சியம்மன், பச்சையம்மன், காத்தாயி அம்மன், கருப்பசாமி, மதுரைவீரன், காத்தவராயன், பெரியசாமி போன்ற சிறு தெய்வங்களை குல தெய்வமாக கொண்டவர்கள்.[சான்று தேவை] இவர்கள் தங்கள் பங்காளிகளுடன் சேர்ந்து குலதெய்வத்திற்கு ஆடு மற்றும் கோழிகளை பலி கொடுத்து படையலிட்டு வழிபடும் பழக்கம் உடையவர்கள். சோழிய வேளாளர்கள் சோழ மன்னர் (வேளிர்) சோழிய வேளாளர் 3/25/20141 Comment சோழிய வேளாளர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம். 'பிள்ளை' என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், சோழிய வெளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள். கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், சோழர்கள் ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்ட சூழலில், சித்திரை மேழி பெரிய நாட்டார் அமைப்பும் கலைக்கப்பட்டுவிட்டது எனத் தெரிகின்றது. கைக்கோளர், அகம்படி முதலியார் போன்ற சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் அணியில் சேராமல் தங்களை வேளாளர் என அழைக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டனர். உடையார், நயினார், மூப்பனார் ஆகிய சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் என்ற அமைப்பிலிருந்து தங்களை விடுத்தபின், பார்கவ குல சத்திரியர் என அழைத்துக் கொண்டனர். பண்டைய அகம்படி சாதிகளில் சோழிய வேளாளர், கார்காத்த வேளாளர், இசை வேளாளர், வீரக்கொடியார் ஆகிய சாதிகள் மட்டுமே வேளாளர் சமூகத்தில் இடம் பெற்று விட்டனர். இவர்களையே உயர்குடி வேளாளராக நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார். சோழனின் கிளைகுடியினனான தொண்டைமானைத் தங்கள் இனமாகக் கொள்ளும் சோழிய வேளாளர், சோழனின் கிளைக்குடி என்பது உறுதிபடுகின்றது. வட இந்தியாவில் யது குலத்தின் கிளைக்குடியாகக் கூறப்படும் ஐந்து பிரிவுகளைக் கொண்ட தாளஜங்கா மரபினரை ஒத்தவராவர் இவர். அக்குலத் தோன்றலான ஏயர் கோமான் கலிக்காம நாயனார் வம்சத்தினரும் இன்று சோழிய வேளாளர் சாதியிலேயே சேர்ந்திருக்க வேண்டும். கலிக்காம நாயனார், வேளாளருடன் மண உறவு கொண்டதைப் பெரிய புராணம் மூலம் அறிய முடிகின்றது. மற்றொரு செய்தியின் படி பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக் கதவுகளை கவர்ந்து வரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள் இருந்தார்கள். கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம். முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழிய வேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடி சூடினார்களாம். பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும், ஆதரவும், சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம். “பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு அயலிலிருந்த அதன் சகோதர அரசுகளான சேர, பாண்டிய அரசுகளை வெற்றிகொண்டு சென்னையின் சுற்றுப் புறத்திலிருந்து குமரி முனை வரை மேலாட்சி செலுத்தியது. அந்தக் காலப்பகுதிக்குப் பின்னர் தென்னிந்தியாவின் தமிழ் முகம்மதியர்கள் ‘சோழிய முகம்மதியர்கள்’ என்று அறியப்பட்டனர் அல்லது பொதுவாக ‘சோழியர்’ (சோழதேசம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்கள்) என அறியப்பட்டதில் சந்தேகமில்லை. இன்றுவரை ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் தென்பாகத்தைச் சேர்ந்த தம் மதத்தினை ‘சோழிய’ என்றே அழைக்கின்றார். ஏனெனில், சோழியர்களில் மிகப் பெரும்பான்மையோர் மதத்தைத் தவிர, மொழி, பொதுத் தோற்றம், சமூக வழக்கங்கள் என்பனவற்றைப் பொறுத்த வரையில் தமிழர்களாக இருக்கின்றனர்” சோழியர் எனும் சொல்லானது “சோழதேசம்” என அழைக்கப்பட்ட தமிழ் நாட்டின் மக்களைக் குறிக்கின்றது. வின்ஸ்லோ என்பவர் தமது தமிழ் ஆங்கில அகராதியில் பின்வருமாறு விளக்கம் தருகிறார். சோழியர் – சோழம் எனும் அவர்களது தேசப் பெயரால் வழங்கப்பட்ட, எத்தனையோ குலங்களிருந்து ஆன ஒரு வகுப்பினர். பிராமணர், வேளாளர் முதலியவரிலொரு பிரிவார் சோழியப் பார்ப்பார் சோழிய வேளாளர்........ “சோழியப் பிராமணரும் சோழிய வேளாளரும் போல் சோழிய முகம்மதியர்களும் உள்ளனர். எல்லோரும் சோழ தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் அவரது தென்பகுதி மதத் தோழர் ஒருவரைச் “சோழிய” என்று அழைப்பதற்குக் காரணம், அவர் சோழ தேசத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். ஒரு காலத்தில் தென்னிந்தியா அந்தப் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைமீது படையெடுத்து வந்த தமிழர்கள், முன்னர் காட்டியதுபோல் சோழியர் என்றே அழைக்கப்பட்டனர். 'சோழிய வெள்ளாளர்' போன்று பிள்ளை உட்பிரிவினை ஒத்த, ஆனால் சிறிது வேறுபட்ட 'சோழியர் இல்லம்' என்ற பிரிவு 'இல்லத்துப்பிள்ளைமார்' பிரிவின் ஓர் அங்கமாக உள்ளது. சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப் பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில் இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர் சமூகத்திலும் பளிங்கில்லம், மஞ்சநாட்டு இல்லம், தோரணத்தில்லம், மூட்டில்லம், சோழிய இல்லம் எனும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சோழப் பேரரசர் முடிசூடும் தலமாகவும் குலத் தெய்வ திருத்தலமாகவும் சிதம்பரம் இருந்ததைப் போன்று கொங்கு சோழ அரசர்களுக்குக் கோநகராகவும் முடிசூடும் தலமாகவும் விளங்கியது பேரூர் ஆகும்.இதிலிருந்தே கொங்குச் சோழர்களின் அரசகுலப் படையாகிய எழுநூற்றுவர்க்கும், சோழியர் பிரிவைச் சேர்ந்த சிறுகுடி வேளாளர்க்கும் உள்ள தொடர்புகளை உய்த்துணரலாம். மேற்குறிப்பிட்ட சிறுகுடி வேளாளர் மடத்துச் செப்பேட்டில் சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

3 comments:

  1. வில்லவர் மற்றும் வேளாளர்

    வெள்ளாளர் தோற்றம்

    வெள்ளாளர் என்பவர்கள் களப்பிரர்களின் வழித்தோன்றல்கள், அதாவது களப்பாளர் என்று அழைக்கப்படுபவர்கள். கி.பி 250 இல் களப்பிரரின் வடக்குப் படைகள் சேர சோழர் மற்றும் பாண்டிய அரசுகளைத் தாக்கி அடிபணியச் செய்தன மற்றும் அவர்களின் இருப்பு பண்டைய தமிழகத்திற்கு இருண்ட காலத்தை கொண்டு வந்தது.

    சேதி இராச்சியம்

    வேளாளர் பிறந்த இடம் சேதி சாம்ராஜ்யமாக இருக்கலாம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் பழங்கால கலிங்கத்தில் சேதி மக்கள் ஒரு பேரரசை நிறுவினர். கேணி நதிக்கரையில், தற்போதைய புந்தேல்கண்ட் பகுதியில் சேதி சாம்ராஜ்யம் இருந்தது. புந்தேல்கண்ட் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளது. வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் புலம் பெயர்ந்த நாக இனத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளாளர்கள் ஆவர். கிமு 2ஆம் நூற்றாண்டில் தெற்கே வந்தபோது பிராகிருதம் பேசியிருக்கலாம்.


    வட இந்திய கல்வார்களின் இடம்பெயர்வு


    வட இந்திய கல்வார்கள் உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, ஹைதராபாத், சத்தீஸ்கர், வங்காளம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து ஆகிய பகுதிகளில் வாழும் ஒரு பெரிய வட இந்திய சமூகம் ஆகும். அவர்கள் இந்தி, பெங்காலி அல்லது தெலுங்கு பேசுகிறார்கள். கல்வார்களில் இந்துக்கள், ஜைனர்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் உண்டு.
    அவர்களின் குலப் பெயர்கள் தமிழ் வேர்களைக் கொண்டதாகத் தெரிகிறது. கல்வார் காலச்சூரிகளின் (கி.பி. 550 முதல் 1250 வரை) வழிவந்ததாகக் கூறுகிறார்கள்.

    சீக்கிய கல்வார் நாடாகிய, கபுர்தலா நாடு கிபி 1762 இல் ஜஸ்ஸா சிங் அலுவாலியாவால் நிறுவப்பட்டது. கல்வார் பட்டங்கள்கள்வார், காலர், கள்ளர், கலியபாலா, சேஹோர் (சேவகர்) இவை அனைத்தும் கல்வார் பட்டங்கள் ஆகும். அவர்களின் குலப் பெயர்கள் தமிழ் வேர்களைக் கொண்டதாகத் தெரிகிறது. கல்வார் இனத்தவர் காலச்சூரி வம்சத்தின் (கி.பி. 550 முதல் 1250 வரை) வழிவந்ததாகக் கூறுகிறார்கள். சீக்கிய கல்வார் மாநிலம், கபூர்தலா மாநிலம் கிபி 1762 இல் ஜஸ்ஸா சிங் அலுவாலியாவால் நிறுவப்பட்டது.

    களப்பிரர்

    களப்பிரரின் கலியர் கள்வர்,கள்ளர் மற்றும் களப்பிரர் பட்டங்கள் வட இந்திய கல்வார் பட்டங்களை ஒத்திருக்கிறது. அதாவது கல்வார், கள்ளர், காலர், காலாள், கல்யாபாலா.
    காலச்சூரி வம்சத்தினர் சூரி என்ற கத்தியைப் பயன்படுத்தினர். தமிழ்நாட்டின் கள்ளர்களும் சூரி கத்தியைப் பயன்படுத்தினர்.


    கலிங்கத்திற்கு களப்பிரர் இடம்பெயர்தல்

    கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி வம்சம் கலிங்கத்தின் மீது படையெடுத்து மகாமேகவாஹன வம்சத்தை நிறுவியது. இந்த நாடு சேதிராஷ்டிரா அல்லது சேதரத்தா என்று அறியப்பட்டது, அதாவது சேதிகளின் ராஜ்யம் என்று. வெள்ளாள-களப்பாளர் மற்றும் கள்ளர் ஆகியோர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம்.


    கலிங்க வேளாளர்

    கலிங்கத்தை ஜைன மன்னன் காரவேளா ஆண்டபோது, ​​கிமு இரண்டாம் நூற்றாண்டில், சோழ நாட்டில் ஆந்திரா மற்றும் வடக்குப் பகுதிகள் அனைத்தும் காரவேளா மன்னனால் ஆக்கிரமிக்கப்பட்டன. காரவேளா மன்னர் சேதி வம்சத்தைச் சேர்ந்தவர். வேளாளர் கலிங்க மன்னர் காரவேளனின் பணியாட்களாக இருந்ததால் அவர்கள் வேள் ஆளர் என அழைக்கப்பட்டனர். காரவேளரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை வேளாளர்கள் பாதுகாத்ததால், அவர்கள் கார் காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் காராளர் (காரவேளரின் மக்கள்) அல்லது வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர். பூபால கோத்திரமென்பது கலிங்க வெள்ளாளர். (மட்டக்களப்பு மான்மியம்)

    ஆரம்பகால களப்பிரர்

    கிமு இரண்டாம் நூற்றாண்டில் வேளிர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தனர். அவர்கள் கலிங்க நாட்டிலிருந்து வந்ததால் அவர்கள் கலிங்க வேளாளர்கள் அல்லது சேதி இராச்சியத்தின் சேதிராயர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.


    மாவண் புல்லி

    இதற்குப் பிறகு மாவண் புல்லி என்ற களப்பிரர் தலைவன் இன்றைய திருப்பதியை ஆண்டான்.

    நந்தி மலை களப்பிரர்

    சோழர்கள் வேளிரை அடிபணியச் செய்தனர். ஆனால் விரைவில் களப்பிரர் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தங்கள் தலைநகரை நிறுவினர். விரைவில் களப்பிரரின் காட்டுமிராண்டிக் கூட்டங்கள் மூன்று தமிழ் அரசுகளையும் தோற்கடித்தன. கி.பி 250 இல் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்கள் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையைத் தலைநகராகக் கொண்ட கள்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

    சில கல்வெட்டுகள் நந்தி மலையை ஸ்ரீ கள்வர் நாடு என்று குறிப்பிடுகின்றன. களப்பிர ஆட்சியாளர்கள் தங்களுக்கென சொந்தக் கொடியை கொண்டிருக்கவில்லை, ஆனால் சேர சோழ பாண்டியக் கொடிகளைப் பயன்படுத்தினர். களப்பிரர்கள் பாண்டியர்களின் மாறன் பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். இனரீதியாக தொடர்பில்லாவிட்டாலும், அவர்கள் தங்களை வில்லவர்கள் என்று அழைத்துக்கொண்டு மற்ற வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர்.

    ReplyDelete
  2. வில்லவர் மற்றும் வேளாளர்

    வேளாளரின் பரிணாமம்

    கள்ளர், மறவர், கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனாரே" என்பது பழமொழி.


    பண்டைய காலத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் போன்ற நாகர் குலங்களிலிருந்து வேளாளர் உருவானார்கள். ஒரு திருடன் அல்லது கொள்ளைக்காரன் கொஞ்சம் பணம் சம்பாதித்து ஒரு விவசாய நிலத்தைப் பெற்ற பிறகு, பின்னர் அவன் தன்னை வெள்ளாளர் என்று அழைத்து கொள்ளுவான். கள்ளர்களும் களப்பிரர்களிடமிருந்து வந்தவர்கள் என்பதால் வேளாளர் கள்ளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்கலாம்.
    தமிழ்நாட்டின் உழவர் என்று அழைக்கப்படும் பழங்கால வேளாண்மையாளர்களுடன் வெள்ளாளர்கள் கலந்திருக்கலாம்.


    இருண்ட காலம்

    கி.பி 250 முதல் கி.பி 600 வரையிலான காலகட்டம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. இது களப்பிர இடைநிலை ஆட்சி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு காட்டுமிராண்டித்தனமான ஆட்சி இருந்தது மற்றும் அந்த காலத்திலிருந்து அதிகம் அறியப்படவில்லை.

    பாண்டிய சாம்ராஜ்யத்தில் இருந்து களப்பிரர் வெளியேற்றம்

    கி.பி 600 வாக்கில் கூன்பாண்டியன் ஆட்சி செய்த பாண்டிய நாட்டிலிருந்து வில்லவர் - மீனவர் மக்களால் மிகவும் சிரமத்துடன் களப்பிரர்கள் வெளியேற்றப்பட்டனர். களப்பிரர் 600 முதல் 800 வரை தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டனர். கி.பி 800க்குப் பிறகு மீண்டும் எழுச்சி பெற்ற சோழர்கள் களப்பிரர்களை அடிபணியச் செய்து தஞ்சாவூரைத் தங்கள் தலைநகராகக் கொண்டனர்.

    தஞ்சாவூரில் களப்பிரர் ஆட்சி

    களப்பிரர் கிபி 600 முதல் கிபி 800 வரை சோழ நாட்டின் பெரும்பகுதியை தஞ்சாவூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்கள். அச்சுத களப்பாளர் என்ற மன்னன் தன் மக்களை சைவ இந்து மதத்திற்கு மாற்றினான். தில்லை வாழ் அந்தணர்களால் தன்னை சோழ மன்னனாக முடிசூட விரும்பினார் அச்சுத களப்பாளர். அச்சுதருக்கு முடிசூடத் தயாராக இருந்தபோதிலும் அந்தணர்கள் சோழ மன்னனின் பழிவாங்கலுக்கு அஞ்சி மறுத்துவிட்டனர்.

    பிற்கால சோழ வம்சம்

    உறையூரை ஆண்ட சோழர்கள் கி.பி 800 இல் களப்பிரர்களை (களப்பாளர், கள்ளர் வெள்ளாளர்) அடிபணியச் செய்தனர். சோழப் பேரரசு தஞ்சாவூரைத் தங்கள் தலைநகராகக் ஆக்கினர். பின்னர் 1000 கி.பி.யில் சோழர்கள் பாண்டிய நாடு மற்றும் சேர நாட்டின் மீது படையெடுத்தபோது, ​​அவர்கள் மீண்டும் களப்பிரர்களை பாண்டிய மற்றும் சேர ராஜ்யங்களில் குடியேற்றினர்.


    வெள்ளாள துணைக்குழுக்கள்
    1.கார்காத்தார்
    2.கொண்டைகெட்டி
    3.சோழியர்
    4.சைவம்

    மகக்கொடை

    சோழர்கள் வெள்ளாளரையும் கள்ளரையும் அடிமைப்படுத்தினர். சோழர்கள் மகக்கொடை முறையை அமல்படுத்தினர், அதில் விவசாய நிலம் பெறும் ஒவ்வொரு வெள்ளாளனும் தனது மகள்களில் ஒன்று அல்லது இரண்டு பேரை அரச அரண்மனையில் அந்தப்புரத்திற்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் சோழர்கள் வெள்ளாளர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த வெள்ளாளப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வெள்ளாளர்களாக மட்டுமே கருதப்படுவார்கள் ஆனால் முதலி பட்டம் பெற்றிருப்பார்கள்.

    சேர மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலனித்துவம்

    கி.பி 1000க்குப் பிறகு பிற்காலச் சோழர் ஆட்சியில் வெள்ளாளர்கள் தென்பகுதியில் சேர நாட்டின் தென்பகுதியில் குடியேறினர். பாண்டிய நாட்டில் வெள்ளாளர்களும் கள்ளர்களும் சோழர்களால் குடியேற்றப்பட்டனர். சோழர்கள் களப்பிரரை சோழப் பிரதேசங்களில் இருந்து அகற்ற நினைத்திருக்கலாம்.


    வெள்ளை நாடார்

    கேரளாவின் வில்லவர் வம்சங்களில் பிரபுத்துவமான வெள்ளை நாடார்கள் வெள்ளாளர்களிடையே வைப்பாட்டிகளைக் கொண்டிருந்தார்கள். வெள்ளை நாடார்களும் வெள்ளாளப் பெண்களுடன் தாழ்தார திருமணம் செய்து கொண்டனர். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் வெள்ளாளர்களாக மட்டுமே அங்கீகரிக்கப்படும். இதன் மூலம் வெள்ளை நாடார்கள் வெள்ளாளரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

    வெள்ளை நாடார் அல்லது வெள்ள நாடார்கள் சேர நாட்டின் பிரபுக்கள், அவர்கள் அரச குடையை (கோக்குட) பாதுகாக்கும் பணியைக் கொண்டிருந்தனர் மற்றும் கோயில்களுக்கு நீர் வழங்கினர். வெள்ளை நாடார் கோயில் நிலங்களில் விவசாயம் செய்யும் பணியையும் மேற்கொண்டிருந்தார்கள்.

    ReplyDelete
  3. கொங்கு வேளாளர்
    கொங்கு வேளாளர் நான்காம் நூற்றாண்டில் கங்கை ஆற்றின் கரையிலிருந்து குடிபெயர்ந்த விவசாய சமூகமாகும். அவர்கள் கங்காதிகார் என்று அழைக்கப்படும் கர்நாடகத்தின் வொக்கலிகா கவுடா சமூகத்துடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள்.

    தமிழ்நாட்டில் கொங்கு வெள்ளாளரின் தோற்றம்

    சிலப்பதிகாரத்தின் படி கொங்கு படையெடுப்பாளர்கள் முதன்முதலில் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றினர், ஆனால் சேரன் செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்டனர்.

    சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்பின் பின்னர் கி.பி 350 இல் இக்ஷ்வாகு மன்னர்களின் கீழ் கங்கை சமவெளியில் இருந்து குடியேறியவர்களால், தெற்கு கர்நாடகாவில், மேலை கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    கங்கை மன்னர் அவினிதா (கிபி 469 முதல் கிபி 529 வரை) வின் ஆட்சியின் போது கொங்கு பகுதியை மேலை கங்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கொங்கு வேளாளர்கள் கொங்கு நாட்டை ஆக்கிரமித்து கிபி ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர்.

    கொங்கு குலத்தாரால் அச்சுறுத்தப்பட்ட பிரதான சேர வம்சம் கரூரில் இருந்து கேரளாவில் கொடுங்களூருக்கு ஏழாம் நூற்றாண்டில் மாற்றப்பட்டது.
    உம்மத்தூர் கொங்கு சேர வம்சம் என்றழைக்கப்படும் சேரரின் ஒரு சிறிய கிளை, பதினைந்தாம் நூற்றாண்டு வரை கொங்கு பிராந்தியத்தின் சில இடங்களை ஆட்சி செய்து வந்தது.
    சேர தலைநகரம் கேரளாவுக்கு மாற்றப்பட்ட பிறகு கொங்கு நாடு சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் கட்டுப்படுத்தப்பட்டது.

    ஆந்திரா மற்றும் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பாணர் கொங்கு வேளாளர்களின் தலைவர்களாக பாண்டியர்களால் நியமிக்கப்பட்டனர். இந்த பாணர் ஆளுநர்கள் வாணவராயர் என அறியப்பட்டனர்.

    ReplyDelete